Tamilnadu

News March 30, 2024

வேலூர் அருகே பைக் மீது லாரி மோதி விபத்து

image

பள்ளிகொண்டா அடுத்த வசந்தநடை கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் (55), இவர் நேற்று கூத்தம்பாக்கம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது லாரி எதிர்பாராதவிதமாக இவரது பைக் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவலறிந்த பள்ளிகொண்டா போலீசார் சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News March 30, 2024

மரத்தில் கார் மோதி விபத்து: 3 பேர் படுகாயம்

image

திருப்பூரைச் சேர்ந்தவர் ஆல்வின். கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு செல்வதற்காக திருப்பூரிலிருந்து சாமலாபுரம் வழியாக காரில் நேற்று (மார்ச் 29) சென்றுகொண்டிருந்தார். அப்போது அவருடன் அவரது மனைவி உட்பட 4 பேர் காரில் இருந்தனர். அந்த சமயம் இரண்டு நாய்கள் காரின் குறுக்கே வந்ததால் பிரேக் பிடிக்க முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர மரத்தில் மோதி விபத்து ஏற்பட்டது. 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

News March 30, 2024

அரியலூர் அருகே சிறுமிக்கு நேர்ந்த கொடுமை

image

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே தெற்கு புதுக்குடி கிராமம் கீழத் தெருவை சேர்ந்தவர் திருமுருகன் மகன் மணிகண்டன். கார் ஓட்டுனரான இவர் 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது குறித்த சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் துறையினர் மணிகண்டனை நேற்று(மார்ச். 29) போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

News March 30, 2024

தூத்துக்குடி அருகே விபத்து: ஒருவர் பலி

image

ஆறுமுகநேரியை சேர்ந்த கண்ணன் நேற்று முன்தினம் காயல்பட்டினம் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த இருசக்கர வாகனம் மீது மோதியதில் பலத்த காயமடைந்தார். தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இது குறித்து ஆறுமுகநேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 30, 2024

திருவண்ணாமலை அருகே விபத்து

image

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே காந்திநகர் கிராமத்தில் இருந்து சென்ற நகரப் பேருந்து நேற்று மாலை எதிரே இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த சிவா என்பவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த அவரை அருகில் இருந்த பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 30, 2024

திருப்பத்தூர் அருகே விபத்து:ஒருவர் பலி

image

வாணியம்பாடி முஸ்லிம்பூர் பகுதியை சேர்ந்தவர் இம்ரான் ஜாவித் (28). இவர் நேற்று (மார்ச்.29) வாணியம்பாடி கேத்தாண்டப்பட்டி ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தை கடக்க முயன்ற போது பெங்களூரில் இருந்து தானபூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் அடிபட்டு உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே போலீசார் உடலை மீட்டு விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 30, 2024

காங்கீஸ்வரர் திருக்கோவில் மாவடி சேவை திருவிழா

image

வேலூர் காட்பாடி, காங்கேயநல்லூரில் சமேத காங்கீஸ்வரர் திருக்கோவிலில் மாவடி சேவை திருவிழா நேற்று மாலை நடைபெற்றது.பின்னர் இரவு சிறப்பு மேள வாத்தியத்துடன் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

News March 30, 2024

கிருஷ்ணகிரியில் விபத்து: ஒருவர் பலி!

image

சூளகிரி அடுத்துள்ள கொட்டாவூரை சேர்ந்தவர் சின்னராஜ் (59) விவசாயியான இவர் கடந்த 27ஆம் தேதி அன்று டூவீலரில் அங்கொண்டப்பள்ளியில் சென்றபோது அந்த வழியாக மற்றொரு டூவீலர் சின்னராஜ் ஓட்டி சென்ற டூவீலரில் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று சின்னராஜ் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து சூளகிரி போலீசார் விசாரிக்கின்றனர்.

News March 30, 2024

விழுப்புரம்: கருப்பு கொடி கட்டி போராட்டம்

image

விழுப்புரம்-நாகப்பட்டினம் 4 வழிச்சாலை பணிக்காக, ஜானகிபுரம்-கண்டமானடி குறுக்கே அமைந்துள்ள ரயில்வே கேட் (மார்ச் 22) மூடப்பட்டது. இதனால் விழுப்புரத்திற்கு செல்லும் மக்கள் 5 கிமீ தொலைவிற்கு சுற்றிச் செல்கின்றனர். எனவே ரயில்வே கேட்டை உடனடியாக திறக்க வலியுறுத்தி பொதுமக்கள் நேற்று (மார்ச் 29) வீடுகளில் கருப்பு கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தேர்தலை புறக்கணிக்க போவதாகவும் அறிவித்துள்ளனர்.

News March 30, 2024

இன்று வழக்கம் போல பள்ளிகள் செயல்படும்

image

பண்ணாரி அம்மன் பண்டிகை முன்னிட்டு மார்ச்.28 இல் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதை ஈடு செய்யும் விதமாக இன்று ம்(மார்ச்.30) அனைத்து பள்ளிகளும் வழக்கம் போல் செயல்படும் எனவும் ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கார ஏற்கனவே அறிவித்திருந்தார். அதன்படி இன்று அனைத்து பள்ளிகளும் வழங்கும் போது இயங்கும்.

error: Content is protected !!