India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவள்ளூர் மாவட்டத்தில் தேர்தல் தொடர்பான சந்தேகங்கள் மற்றும் புகார்களை தெரிவிக்க, பொதுமக்களுக்காக 24 மணி நேரம் தொடர்ந்து இயங்கும் மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறை 14.03.2024 முதல் இயங்கி வருகிறது. பொதுமக்கள் 044-27660641, 044-27660642, 044-27660643, 044-27660644 மற்றும் 1800 425 8515 என்ற இலவச தொலைப்பேசி எண்ணிலும் தங்கள் புகார்களை அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் தெரிவித்துள்ளார்.
தென்காசி மாவட்ட ஆட்சியர் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் 24ம் ஆண்டு மக்களவை தேர்தல் நடத்தை விதிகள் தேர்தல் ஆணையத்தினால் அமல்படுத்தப்பட்டுள்ளதால் தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் திங்கள்கிழமை தோறும் நடைபெறும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மற்றும் கிராமப்பகுதியில் நடைபெறும் மக்கள் தொடர்பு முகாம்கள் மற்றும் சிறப்பு முகாம்கள் மறு அறிவிப்பு வரும் வரை நடைபெறாது என தெரிவித்துள்ளார்.
இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவின்படி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2024 தொடர்பாக தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து அரசு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித் தலைவருமான மெர்சி ரம்யா தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் உமா தேர்தல் விதிமுறை நடைமுறையில் உள்ளதால் ஏற்கனவே தங்கள் சுய பாதுகாப்பிற்காக தக்க உரிமம் பெற்று வைத்துள்ள அனைத்துவிதமான துப்பாக்கிகள் மற்றும் அதன் இதர பொருட்களையும் அங்கீகரிக்கப்பட்ட ஆயுத கிடங்கு மற்றும் காவல்நிலையத்தில் ஒப்படைக்குமாறு ஆட்சியர் அறிக்கை இன்று வெளியிட்டார்.
சென்னை முகப்பேர் மேற்கு, ரெட்டி பாளையம் சாலையில் புதிதாக டாஸ்மாக் கடை திறப்பதற்கான பணி கடந்த சில நாட்களாக நடைபெற்றது. நேற்று புதிய மதுக்கடை திறக்கபட இருப்பதாக தகவல் வெளியானது. இதையடுத்து பள்ளி தலைமை ஆசிரியர், மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் ஏராளமானோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து புதிதாக திறக்கப்பட்ட மதுக்கடை உடனடியாக மூடப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம் சின்ன சோழியம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த செந்தில்குமார், செல்வி தம்பதியரின் மகன் சிவமணி தொடர்ந்து 10 மணி நேரம் கிணற்றில் மிதந்து மச்சாசன யோகா செய்த உலக சாதனை நிகழ்த்தும்
நிகழ்வில் பங்கேற்றுள்ளார். பொதுமக்கள் உற்சாகமாக ஆதரவளித்து அவரை தொடர்ந்து உற்சாகப்படுத்தி வருகின்றனர். மருத்துவர் உதவி மற்றும் பாதுகாப்புடன் சாதனை நிகழ்வு நடத்தப்படுகிறது.
பொதுத்தேர்தல் 2024 அறிவிப்பு வெளியிடப்பட்டதை அடுத்து, தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளான 16.03.2024 முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வரப்பெற்றுள்ளது. எனவே, திண்டுக்கல் மாவட்டத்தில் துப்பாக்கி உரிமம் பெற்ற உரிமதாரர்கள் தங்களது படைக்கலன்களை உடனடியாக சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் ஒப்படைப்பு செய்து, உரிய ஒப்புதல் ரசீதினை பெற்றுக் கொள்ள வேண்டும் என ஆட்சியர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற பொதுத்தேர்தல் 2024-யையொட்டி தேர்தல் நன்னடத்தை விதிகள் நேற்று முதல் நடைமுறைக்கு வந்தன. இதன் காரணமாக, ஒவ்வொரு திங்கள்கிழமை தோறும் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வரும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், கிராமப் பகுதியில் நடைபெறும் மக்கள் தொடர்பு முகாம் மற்றும் பிற சிறப்பு முகாம்கள் போன்றவை மறு அறிவிப்பு வரும் வரை நடைபெறாது என ஆட்சியர் அறிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலையொட்டி ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் 1122 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் இதில் 205 வாக்குச்சாவடி மையங்கள் பதட்டமான மையங்கள் ஆகவும், 13 வாக்கு சாவடி நிலையங்கள் மிகவும் பதட்டமான மையங்களாகவும் கண்டறியப்பட்டுள்ளதாக ஆட்சியர் வளர்மதி தெரிவித்துள்ளார். மேலும் 5346 அலுவலர்கள் தேர்தல் பணிக்கு ஈடுபடுத்தப்பட உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் தேதியை அறிவித்ததை தொடர்ந்து ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் பறக்கும் படை, கண்காணிப்பு குழுக்களுக்கான வாகனங்களை இன்று ராணிப்பேட்டை ஆட்சியர் வளர்மதி தொடங்கி வைத்தார். இந்தக் குழுக்கள் மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட உள்ளது.
Sorry, no posts matched your criteria.