India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விழுப்புரம் மாவட்ட மக்களவை வேட்பாளர் முரளி சங்கர் நேற்று (மார்ச் 30) புதுவை மாநில முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றார். விழுப்புரம் மக்களவை தொகுதி பாமக வேட்பாளர் முரளி சங்கர் புதுவை முதல்வர் ரங்கசாமியை மரியாதை நிமித்தமாக சந்தித்து நேற்று ஆசி பெற்றார். உடன் விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் ஜெயராஜ் உட்பட பாமக மற்றும் கூட்டணி கட்சியான பாரதிய ஜனதா நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் சேலம்-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து வாகன ஓட்டிகள் பிரிவு சாலை இல்லாத பகுதிகளில் நேரடியாக சர்வீஸ் சாலைக்கு வாகனங்களை இறக்கி வருகின்றனர். இதனால் பிரிவு சாலையில் வரும் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகும் அபாயத்தில் உள்ளனர். இது குறித்து நெடுஞ்சாலை துறை உடனடியாக நடவடிக்கை எடுத்து விபத்தை தவிர்க்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மக்களவை பொதுத்தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு அதற்கான பணிகள் நெல்லை மாவட்டத்தில் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. அந்த வகையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று (மார்ச் 30) இறுதி வேட்பாளர்களுக்கான சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனை அறிந்து கொள்ளும் வகையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக அறிவிப்பு பலகையில் இறுதி வேட்பாளர்களுக்கான சின்னங்கள் ஒட்டப்பட்டுள்ளன.
சிவகங்கை மக்களவை (ம) சட்டப்பேரவைத் தொகுதிகளில் அதிமுக மாவட்டச் செயலாளர் செந்தில்நாதன், முன்னாள் அமைச்சர் ஜி.பாஸ்கரன் போட்டியிட்டபோது சிவன் கோயிலில் சாமி தரிசனம் செய்த பின்னரே வேட்பு மனுத் தாக்கல் செய்தனர். அதேபோல், பிரச்சாரத்தைத் தொடங்கும் முன் வேட்பாளர் சேவியர்தாஸ் கோயில்களில் சாமி கும்பிட்ட பின்னரே வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டனர்.
காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத்தில் அதன் கிராமியத் தொழில், மேலாண்மைத் துறை சாா்பில் புதுப்பிக்கத்தக்க மரபுக் கைவினைக் கலைகளும் பிரதமரின் விஸ்வகா்மா திட்டமும் என்ற தலைப்பில் தேசிய அளவிலான கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது. இதற்கு மேலாண்மைத் துறைத் தலைவரும், பதிவாளருமான இல.ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தாா். சென்னை கவின் கலைக் கல்லூரியின் முன்னாள் முதல்வா் சந்துரு சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றனர்.
கடலூர் மாவட்டத்தில் தினமும் இரவு ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று இரவு கடலூர் காவல் ஆய்வாளர் முத்துக்குமரன், சிதம்பரம் காவல் ஆய்வாளர் இளவழகி , விருத்தாச்சலம் காவல் ஆய்வாளர் கீதா, நெய்வேலி காவல் ஆய்வாளர் சுதாகர் மற்றும் திட்டக்குடியில் காவல் ஆய்வாளர் அருள் வடிவழகன் ஆகியோர் ரோந்து பணி மேற்கொள்ள உள்ளதாக கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதனையொட்டி பல்வேறு அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நாளை மொடக்குறிச்சி, சின்னியம்பாளையத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்திற்கு வருகை தந்த முதல்வர் ஸ்டாலினை அமைச்சர் முத்துசாமி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
தருமபுரி மக்களவைத் தொகுதி
தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் சௌமியா அன்புமணிக்கு பாமக நிறுவனர் ராமதாஸின் பேத்தியும், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இளைய மகளுமான
சஞ்சமித்ரா இன்று நகராட்சி உட்பட்ட நகை கடை வீதிகளில் வீடு வீடாக பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். உடன் கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் பாமக நிர்வாகிகள் இருந்தனர்.
தூத்துக்குடி மக்களவை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்களை வாபஸ் பெறுவது இன்று மாலை 3 மணியுடன் முடிவடைந்தது. இதனையடுத்து தேர்தலில் போட்டியிட உள்ள 28 வேட்பாளர்களுக்கு மாவட்ட தேர்தல் அதிகாரி லட்சுமிபதி மற்றும் தேர்தல் பார்வையாளர் முன்னிலையில் சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
தூத்துக்குடி மக்களவை தொகுதிக்குட்பட்ட வேட்பு மனு தாக்கல் முடிவடைந்து கடந்த 28ஆம் தேதி வேட்பு மனு பரிசீலனை நடைபெற்றது. இதில் 31 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. இந்நிலையில் இன்று 3 சுயேட்சை வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்களை வாபஸ் பெற்று கொண்டனர். இதனை அடுத்து தூத்துக்குடி தொகுதியில் திமுக அதிமுக த மா கா நாம் தமிழர் கட்சி வேட்பாளர் என மொத்தம் 28 பேர் போட்டியிடுகின்றனர்.
Sorry, no posts matched your criteria.