India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மக்களவைத் தோ்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் வகையில், டிஎஸ்பி ரவாத் தலைமையில், காவல் ஆய்வாளா் ஜெகதீஷ் மற்றும் 89 போலீஸாா் கொண்ட மத்தியத் தொழில் பாதுகாப்புப் படை குழுவினா் நேற்று (மார்ச் 18) விழுப்புரத்துக்கு வந்தனா். இவா்கள், காகுப்பத்திலுள்ள மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
வரும் பாராளுமன்ற தேர்தலில் மதுரை மாவட்டத்தில் உள்ள 85 வயது உள்ள 22,592 மூத்த குடிமக்கள், 14,006 மாற்றுத் திறனாளிகள் வாக்குப் பதிவு நாளான ஏப்.19ல் வாக்குச்சாவடி மையங்களுக்கு செல்லாமல் வீட்டில் இருந்தபடி தபால் ஓட்டு போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு 12D படிவத்தை பூர்த்தி செய்து வாக்குச் சாவடி அலுவலர்களிடம் நேரில் ஏப்.24க்குள் வழங்கலாம் என கலெக்டர் சங்கீதா இன்று தெரிவித்துள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸ்,தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் விழுப்புரம், தைலாபுரத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய நிலையில்,10 தொகுதிகள் பாமகவிற்கு ஒதுக்கப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. மயிலாடுதுறை மக்களவை தொகுதியில் பாமக போட்டியிடுகிறது.மயிலாடுதுறை மக்களவை தொகுதியில் பாமக சார்பில் ம.க. ஸ்டாலின் போட்டியிடுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
பாமக நிறுவனர் ராமதாஸ்,தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் விழுப்புரம், தைலாபுரத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய நிலையில்,10 தொகுதிகள் பாமகவிற்கு ஒதுக்கப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இதில் கடலூர் மாவட்டத்தில் உள்ள கடலூர்,சிதம்பரம் மக்களவை தொகுதியில் பாமக போட்டியிடுகிறது.கடலூரில் வழக்கறிஞர் பாலு,சிதம்பரத்தில் சங்கர் போட்டியிடுவார்கள் என எதிர்பார்ப்பு
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், வேட்பாளர்களின் வங்கி கணக்குகளில் ரூ.1 லட்சத்திற்கு அதிகமான பண பரிமாற்றங்கள் நடந்திருந்தால் அது குறித்த தகவல்களை வங்கிகள் தெரிந்திருக்க வேண்டும். ஒரே வங்கி கணக்கு மூலம் பல வங்கி கணக்குகளுக்கு பரிமாற்றம் செய்திருந்தால் அதன் விவரங்களை தேர்தல் ஆணையத்திற்கு அளிக்க வேண்டும் என நெல்லை மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற தேர்தலில் திருநெல்வேலி தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு திமுக ஒதுக்கியது.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியில் பல்வேறு தலைவர்கள் திருநெல்வேலி தொகுதி தங்களுக்கு ஒதுக்கப்படும் இன்று எதிர்பார்ப்பில் உள்ளனர் எனினும் முன்னாள் எம்பி ராமசுப்புவுக்கு தான் மீண்டும் சீட் கிடைக்கும் என காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளன. அதன்படி, ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் சாலையோரங்களில் வைக்கப்பட்டிருக்கும் அரசியல் சம்பந்தமான விளம்பரங்கள் மற்றும் பேனர்களை அப்புறப்படுத்தி வருகின்றனர். வருவாய்த்துறையினர், நகராட்சி துப்புரவு ஆய்வாளர் பரக்கத்துல்லா தலைமையில் சுவர் விளம்பரங்கள் பேனர்களை அப்புறப்படுத்தி வருகின்றனர்.
பாஜக – பாமக இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது. பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் எல்.முருகன் சந்தித்து பேசிய நிலையில் பாமகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு, ஒப்பந்தம் கெயெழுத்தாகியுள்ளது. இதையடுத்து ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் பாமகவுக்கு போட்டியிடுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
பாஜக – பாமக இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது. பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் எல்.முருகன் சந்தித்து பேசிய நிலையில் பாமகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு, ஒப்பந்தம் கெயெழுத்தாகியுள்ளது. இதையடுத்து தருமபுரியில் பாமக போட்டியிடுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
பாஜக – பாமக இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது. பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் எல்.முருகன் சந்தித்து பேசிய நிலையில் பாமகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு, ஒப்பந்தம் கெயெழுத்தாகியுள்ளது. இதையடுத்து அரக்கோணத்தில் பாமக போட்டியிடுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Sorry, no posts matched your criteria.