Tamilnadu

News March 19, 2024

ஈரோடு அருகே விபத்து: ஒருவர் பலி

image

அந்தியூர் அருகே உள்ள கூத்தம்பூண்டி பகுதியை சேர்ந்தவர் பரமேஸ்வரன் (27) கூலித்தொழிலாளி. இவர் நேற்று தனது பைக்கில் ஆப்பக்கூடல் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது தபால் அலுவலகம் அருகே சென்றபோது அங்கு நின்று கொண்டிருந்த லாரியை டிரைவர் பின்னோக்கி இயக்கியதில் லாரி பரமேஸ்வரன் பைக் மீது மோதியதில் அவர் உயிரிழந்தார். இதுபற்றி ஆப்பக்கூடல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 19, 2024

புதுச்சேரியில் நாளை மின்தடை

image

புதுச்சேரி மேட்டுப்பாளையம் மின்பாதையில் சில பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை மார்ச் 20 ஆம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 03 மணி வரை ஹரி நமோ நகர் பிரியதர்ஷினி நகர். ராஜா அண்ணாமலை நகர். காமராஜ் நகர். இஸ்ரவேல் நகர். குரு நகர். ராஜீவ் நகர். சிவாஜி நகர். இந்திரா நகர். நாவர்குலம் . அசோக் நகர். போன்ற இடங்களில் மின் தடை ஏற்படும் என்று மின்துறை அறிவித்துள்ளது.

News March 19, 2024

அரசியல் கட்சியினருக்கு எச்சரிக்கை – ஆட்சியர்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் இன்று(மார்ச்.19) மாலை 3 மணிக்குள் கட்டடங்களின் சுவர்களில் உள்ள விளம்பரங்கள் அளிக்கப்பட வேண்டும். மேலும் கொடிக்கம்பங்கள் அகற்றப்பட வேண்டும், இல்லையென்றால் அரசே அகற்றி அந்த செலவுகளை சம்பந்தப்பட்ட கட்சியின் வேட்பாளர் தேர்தல் கணக்கில் சேர்க்கப்படும் என மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.

News March 19, 2024

திருப்பத்தூர் மக்களுக்கு எச்சரிக்கை

image

பொதுமக்கள் தாங்கள் வசிக்கும் பகுதியில் எவரேனும் சந்தேகப்படும்படி காணப்பட்டால் உடனடியாக தங்கள் எல்லைக்குட்பட்ட காவல் நிலையத்திற்கோ அல்லது மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை உதவி எண் 9442992526 தகவல் தெரிவிக்க வேண்டும். அதை தவிர்த்து சக மனிதர்களை அடிப்பது,கட்டி வைப்பது போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடக்கூடாது என எஸ்.பி ஆல்பர்ட் ஜான் எச்சரிக்கை விடுத்தார்.

News March 19, 2024

சிவகங்கை : மார்ச் 24ல் தேரோட்டம் 

image

சிவகங்கை மாவட்டம், திருப்பத்துார் அருகே பட்டமங்கலத்தில் அழகுசவுந்தரி அம்மன் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழாவில் மார்ச் 24ஆம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. இக்கோயிலில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு மார்ச் 6ல் அடைக்கலம் காத்த அய்யனார் கோயிலில் பூதமெடுப்பு , பிடிமண் கொடுத்தல் நடைபெற்றது. நேற்று 3ம் திருநாளை முன்னிட்டு இரவு அன்ன வாகனத்தில் திருவீதி உலா நடைபெற்றது

News March 19, 2024

தேனி மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

image

தேனி மாவட்டத்தில் தேர்தல் நன்னடத்தை விதி அமல்படுத்தப்பட்ட நிலையில் உண்மைக்கு புறம்பான செய்திகள் வெளியிடுவோர் மீது சைபர் கிரைம் காவல்துறையினர் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், இதுகுறித்து பொதுமக்கள் புகார் அளிப்பதற்கு தேனி மாவட்ட காவல் துறை 04546-261730, அலைபேசி எண்: 9363873078 அறிமுகப்படுத்தப்பட்டு 24 மணிநேரமும் கண்காணிக்கப்பட்டு வருவதாக தேனி மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.

News March 19, 2024

முன்னாள் அமைச்சர் மீதான வழக்கு 25ஆம் தேதி ஒத்திவைப்பு

image

விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில், வானூர் அடுத்த பூத்துறை கிராமத்தில், செம்மண் குவாரியில் விதிகளை மீறி அதிக அளவில் செம்மண் அள்ளியதாக முன்னாள் அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கெளதமசிகாமணி எம்பி உள்ளிட்ட 8 பேர் மீது வழக்கு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று (மார்ச் 18) நடைபெற்ற விசாரணையை தொடர்ந்து வழக்கினை வரும் 25ஆம் தேதி ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

News March 19, 2024

அரசு வேலைக்கு விண்ணப்பிக்கலாம் – கலெக்டர்

image

கோவை மற்றும் பொள்ளாச்சி பகுதியில் உள்ள ஒருங்கிணைந்த சேவை மையத்தில் வழக்கு பணியாளர், பாதுகாவலர், பல்நோக்கு உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைகளுக்கான விண்ணப்பங்கள் கோவை மாவட்ட இணையதள முகவரி http://coimbatore.nic.in என்ற முகவரியில் உள்ளது. தகுதி உள்ளவர்கள் வரும் மார்ச் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க கலெக்டர் கிராந்திகுமார் அறிவுறுத்தியுள்ளார்.

News March 19, 2024

வேலூர் அருகே ஒற்றை காட்டு யானை அட்டகாசம்

image

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த குண்டலப்பள்ளி கிராமத்தில் நேற்றிரவு (மார்ச் 18) ஒற்றை காட்டு யானை அங்குள்ள விவசாய நிலத்தில் புகுந்து அங்கு பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்களைச் சேதப்படுத்திக் கொண்டிருந்தது. அதனைக் கண்ட விவசாயிகள் பட்டாசு வெடித்தும் மேளங்கள் அடித்தும் யானையை காட்டுப்பகுதிக்குள் விரட்டினர். மேலும் இதுகுறித்து வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.

News March 19, 2024

கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் ஏற்பாடுகள் தீவிரம்

image

மக்களவை தேர்தலையொட்டி, நாளை வேட்பு மனு தாக்கலுக்கான பணிகள் கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நாளை வேட்பு மனு தாக்கல் செய்யும் வேட்பாளர்களுடன் வரும் கட்சி நிர்வாகிகளுக்கு அலுவலகத்திற்கு செல்ல அனுமதி கிடையாது; வாகனங்களை 100 மீட்டர் தூரத்தில் நிறுத்த வேண்டும்; இதனால் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து 100 மீ. தூரத்தில் வாகனங்களை நிறுத்துவதற்கு கோடு போடும் பணி நேற்று நடந்தது.

error: Content is protected !!