Tamilnadu

News March 31, 2024

கடலூர் மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுப்பு

image

வரும் ஏப்ரல் 19ஆம் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை இந்திய தேர்தல் ஆணையம் நடத்தும் பாராளுமன்ற மக்களவை தேர்தல் திருவிழா தங்கள் அருகாமையில் உள்ள வாக்குச்சாவடியில் நடைபெறுகிறது. இவ்விழாவில் தங்கள் வருகை தந்து தவறாமல் தங்களது வாக்கினை பதிவு செய்து நமது மாவட்டத்தில் 100% வாக்குபதிவு நடத்தி தங்கள் உரிமையை நிலைநாட்ட வேண்டுமென கடலூர் ஆட்சியர் அருண் தம்புராஜ் அழைப்பு விடுத்துள்ளார்.

News March 31, 2024

சென்னையை சேர்ந்தவர் மலையேறும் போது உயிர் இழப்பு

image

கோவை வெள்ளியங்கிரிமலைக்கு சென்னையை சேர்ந்த ரகுராமன் 5ஆவது மலையில் உள்ள சீதை வனம் பகுதியில் நேற்று உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். கடந்த வாரம் 3 பேர் உட்பட ஒன்றரை மாதத்தில் மட்டும் மாரடைப்பு உள்ளிட்ட காரணங்களால் 6 பேர் மரணமடைந்துள்ளனர். வெள்ளியங்கிரி மலைக்கு செல்வோர் உடல் முறையாகபரிசோதனை செய்யவும். உடலில் சிறு பிரச்னைகள் இருந்தாலும் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News March 31, 2024

புதுகை: வியாபாரிக்கு கத்திக்குத்து.. 2 பேர் கைது! 

image

புதுகை அருகே சிதம்பரவிடுதி சேர்ந்தவர் கண்ணன் காய்கறி வியாபாரி. இவர் மோட்டார் சைக்கிளில் வந்தபோது, மர்ம நபர்கள் இருவர் முன் விரோதத்தில் வேறு ஒருவரை கத்தியால் குத்துவதற்கு பதிலாக அவ்வழியாக இருட்டில் வந்த கண்ணனை கத்தியால் குத்தியதில் அவர், படுகாயம் அடைந்தார். இதனையடுத்து போலீசார் கத்தியால் குத்திய ரமணன், மற்றும் ராஜீவ் ஆகிய இருவரையம் நேற்று போலீசார் கைது செய்தனர்.

News March 31, 2024

வடசென்னை தென் சென்னைக்கு 3 வாக்குப்பதிவு இயந்திரம்

image

தென் சென்னை தொகுதியில் 41 பேர் போட்டியிடுவதால் 3 மின்னணு எந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளது இதே போல் வடசென்னையில் 35 பேர் போட்டியில் உள்ளதால் 3 மின்னணு எந்திரங்கள் வைக்கப்பட உள்ளது. மத்திய சென்னையில் 31 பேர் போட்டியிடுவதால் இங்கு 2 வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். நோட்டாவுடன் சேர்த்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் 10 பொத்தான்கள் பயன்பாட்டில் இருக்கும். 

News March 31, 2024

ஆட்சியர் தலைமையில் ஆலோசனை

image

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மக்களவை தேர்தல் தொடர்பாக வேட்பாளர்கள், முகவர், அரசியல் கட்சியினருடனான தேர்தல் நன்னடத்தை விதி மற்றும் செலவினங்கள் தொடர்பான விளக்கக் கூட்டம் தேர்தல் அலுவலர்ஆனி மேரி ஸ்வர்ணா தலைமையில் நடைபெற்றது. இதில், தேர்தல் பொது பார்வையாளர் போர் சிங் யாதவ் முன்னிலை வகித்தார்.

News March 31, 2024

சேலத்தில் வெயில் 103.7 டி.கி.ரி.யாக அதிகரிப்பு

image

சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இன்று (மார்ச். 31) மாவட்டத்தில் அதிகபட்சமாக 103.7 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. எடப்பாடி, ஆத்தூர், மேட்டூர், ஓமலூர், சங்ககிரி ஆகிய பகுதிகளிலும் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. மதிய வேளையில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்படுகிறது.

News March 31, 2024

வேலூர் வேட்பாளர்கள் தனி வங்கி கணக்கு தொடங்க வேண்டும்

image

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் மற்றும் வேட்பாளர்களின் ஏஜென்டுகள் உடன் தேர்தல் செலவினங்கள் தொடர்பான ஆலோசனை கூட்டம் தேர்தல் செலவின பார்வையாளர் அமித் கோயல் தலைமையில் இன்று (மார்ச்.31) நடந்தது. இந்த கூட்டத்தில் தேர்தல் செலவினங்களுக்கு என வேட்பாளர் தனி வங்கி கணக்கு தொடங்க வேண்டும் என்று தெரிவித்தார். இதில் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி கலந்து கொண்டார்.

News March 31, 2024

மன்னார்குடி பகுதியில் கலெக்டர் ஆய்வு

image

மன்னார்குடி சட்டமன்ற தொகுதியில் உள்ள பதட்டமான வாக்கு சாவடி மையங்களை திருவாரூர் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் சாரு ஸ்ரீ இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதில் மன்னார்குடி வருவாய் கோட்டாட்சியர் கீர்த்தனா மணி, வட்டாட்சியர் மகேஷ்குமார் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

News March 31, 2024

அண்ணாமலை ஒரு கூமுட்டை-செல்லூர் ராஜூ

image

இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தை கொச்சைப்படுத்திய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செருப்புக்கு சமானம் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, தெரிவித்துள்ளார். இன்று அலங்காநல்லூர் பகுதியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழ் ஆங்கிலம் படித்த தமிழர்கள் இன்று வெளிநாடுகளிலும், இஸ்ரோ உள்ளிட்ட விஞ்ஞான கூடங்களில் இருப்பது கூட தெரியாமல் அண்ணாமலை கூமுட்டையாக உள்ளார் எனவும் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

News March 31, 2024

திருச்சியில் அமமுக செயல் வீரர்கள் கூட்டம்

image

தேசிய ஜனநாயக கூட்டணியின் திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் செயல்வீரர்கள் மற்றும் வீராங்கனை ஆலோசனைக் கூட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது. இதில் அமமுக தெற்கு மாவட்ட செயலாளர் ராஜசேகரன், முன்னாள் மேயர் சாருபாலா தொண்டைமான் மற்றும் முன்னாள் அமைச்சரும், ஓபிஎஸ் அணியின் ஆதரவாளர் வெல்லமண்டி நடராஜன் ஆகியோர் பங்கேற்றனர்.

error: Content is protected !!