India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திமுகவுக்கு மாற்று பாஜக தான் திமுகவும் அதிமுகவும் கள்ள உறவு வைத்துள்ளது. திமுகவை மக்களவை தேர்தலில் வெற்றி பெற செய்ய வேண்டும் என்பதற்காக அதிமுக பாஜக கூட்டணியில் இருந்து விலகி சென்றது. திமுக கிணத்து தவளை கும்மிடிப்பூண்டியை தாண்டினால் அடுத்த ஸ்டேஷன் தெரியாது என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி அருகே புதுக்கோட்டை சூசை பாண்டியா புரத்தை சேர்ந்தவர் சங்கரலிங்கம். இவரது 9 வயது மகள் சிவநிகிலா நேற்று குளியல் அறையில் கழுத்தில் டவலை கட்டி விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென்று துண்டு கழுத்தில் இறுக்கி மயங்கி விழுந்தார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக புதுக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தினர்.
நாளை ( ஏப்ரல் 1) முதல் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிந்த நிலையில் விடைத்தாள் திருத்தும் பணி திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பகவான் மேல்நிலை பள்ளியில் நடைபெறவுள்ளது. இதில், முதன்மை தேர்வர்கள் மற்றும் கூர்ந்தாய்வாளர்கள் என அனைத்து ஆசிரியர்களும் பணி விடுப்பு அளித்து விடைத்தாள் திருத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
31.03.2024 முதல் 04.04.2024 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக்கூடும் என்றும், சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வேளாங்கண்ணியில் உதவிக்கரங்கள் அறக்கட்டளை சார்பில் ஈஸ்டர் பெருவிழா நடைபெற்றது. இதில் மும்மதத்தினர் பிரார்த்தனை செய்யப்பட்டு 1000 ஏழை எளியோருக்கு சுட சுட பிரியாணி வழங்கப்பட்டது. இதில் நிறுவனர் ஆண்டோ பிராங்கிளின் ஜெயராஜ் ,பங்குத்தந்தை அற்புதராஜ், ரஜதநீலகண்டன், ஜமாத் ஜகபர் சாதிக் ,ஜூலியட் அற்புதராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் போட்டியிடுகின்றார். அவருக்கு பிரச்சாரம் மேற்கொள்வதற்காக திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி நாளை (ஏப்.1) நெல்லைக்கு வருகை தர உள்ளார். அதன்படி நாளை (ஏப்.1) ராதாபுரம் பகுதியிலும் நாளை மறுதினம் (ஏப்.2) டவுன் பகுதியிலும் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.
வேலூர் மீன் மார்க்கெட்டில் ஞாயிற்றுக்கிழமையான இன்று (மார்ச்.31) மீன்களின் வரத்து அதிகரித்து காணப்பட்டது. மேலும் கடந்த வாரத்தை விட மீன்களின் விலையும் உயர்ந்தது. பெரிய வஞ்சரம் மீன் ரூ.1400, சிறிய வஞ்சரம் மீன் ரூ.800, இறால் ரூ.500 முதல் 450, கட்லா ரூ.160, நண்டு ரூ.400 முதல் 450, மத்தி ரூ.140 முதல் 160 என மீன்கள் விற்பனை செய்யப்பட்டது.
திருப்பூர் வளர்மதி பஸ் நிறுத்தம் அருகே உள்ள மசாஜ் சென்டரில் பாலியல் தொழில் நடப்பதாக தெற்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனடியாக போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது அங்கு இருந்த 2 பெண்களை போலீசார் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். தொடர்ந்து மசாஜ் சென்டர் உரிமையாளர் கார்த்திக் மற்றும் ஊழியர் கார்த்திகேயன் ஆகியோரை நேற்று கைது செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிராக எடுத்துச்செல்லப்பட்ட ரூ.31 லட்சத்து 74 ஆயிரத்து 145 இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான மகாபாரதி இன்று(மார்ச்.31) தெரிவித்துள்ளார். மேலும் மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதிகளிலும் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
ஏழாயிரம்பண்ணை பகுதியை சேர்ந்த அஜித்குமார் 25, அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார்.சிறுமியை திருமணம் செய்வது கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.பின்னர், சிறுமியை சாதியை காரணம் காட்டி செய்துகொள்ள மறுப்பு தெரிவித்துள்ளார்.சிறுமி அளித்த புகாரின் பேரில் இளைஞர் மீது இன்று போக்ஸோ வழக்கு பதிந்து போலீசார் விசாரிக்கின்றனர்.
Sorry, no posts matched your criteria.