Tamilnadu

News March 31, 2024

தென்காசியில் வைகோ பிரச்சார நிகழ்ச்சிகள் அறிவிப்பு

image

இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பிரச்சார நிகழ்ச்சி விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது. தென்காசி மக்களவைத் தொகுதியில் அவர், 13 ஆம் தேதி மாலை 4 மணிக்கு திருவேங்கடம் பகுதியில் பேசுகிறார். 5 மணிக்கு சங்கரன் கோவில், 6 மணிக்கு புளியங்குடி, 7 மணிக்கு கடையநல்லூரில் உரையாற்றுகிறார்.

News March 31, 2024

நாமக்கல்: தேர்தல் செலவினம் தொடர்பாக கூட்டம்

image

நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் மருத்துவர் அவர்கள், தலைமையில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தேர்தல் பொதுப் பார்வையாளர்கள் ஹர்ஜித் கவுர் அவர்கள் செலவின பார்வையாளர் அர்ஜுன் பேனர்ஜி ஆகியோர் முன்னிலையில் பாராளுமன்றத் தேர்தல் 2024 முன்னிட்டு வேட்பாளர்கள் தங்களது செலவின பதிவேடுகளை பராமரிப்பது தொடர்பான கூட்டம் நடைபெற்றது.

News March 31, 2024

கடலூர்: குவிந்து கிடக்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு

image

கடலூர் முதுநகரில் எந்தவொரு தெரு பகுதிகளுக்கு சென்றாலும் குப்பைகள் மலைபோல் குவிந்து கிடக்கிறது. இதில் இருந்து கடும் துர்நாற்றம் வீசுவதால், பொதுமக்கள் வீடுகளில் இருக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். மேலும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதுதொடர்பாக பலமுறை புகார் அளித்தும், உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே குவிந்து கிடக்கும் குப்பைகளை முறையாக அள்ள அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

News March 31, 2024

தொட்டியம் திருவிழா.. காவல்துறையினர் எச்சரிக்கை

image

தொட்டியம் மதுரை காளியம்மன் பங்குனி திருவிழா 02.04.2024 முதல் 9.04.2024 வரை நடைபெற இருப்பதால் திருவிழாவிற்கு சுமார் 5000க்கும் மேற்பட்ட பக்தர்கள் வர இருப்பதால் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் தங்களது உடைமைகள் மற்றும் பொருள்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுமாறும் கூட்ட நெரிசலில் ஏதும் அசம்பாவிதங்கள் நடைபெறா வண்ணம் விழிப்புணர்வுடன் இருக்க தொட்டியம் காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News March 31, 2024

நாமக்கல்: ராணுவத்தினர் வாக்களிக்க ஏற்பாடு

image

மக்களவை 2024 பொதுத் தேர்தலையொட்டி 100 % வாக்களிக்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நாமக்கல் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த இந்திய இராணுவத்தில் பணியாற்றும் 390 வாக்காளர்களுக்கு மின்னணு தபால் வாக்குச்சீட்டுகள் (ETPBS) அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் ச.உமா, அவர்கள் தெரிவித்துள்ளார்.

News March 31, 2024

தென்காசி சிபிஐ எம்எல் தேர்தல் ஆலோசனை கூட்டம்

image

தென்காசி மாவட்ட சிபிஐ கட்சி எம்எல் ஊழியர் கூட்டம் இன்று ரோஸ் மஹாலில் வைத்து நடைபெற்றது. கூட்டத்தில் தென்காசி நகர் மன்ற தலைவர் சாதிர், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார் சிபிஐ எம்எல் நிர்வாகிகள் சுப்பிரமணியன், பழ ஆசைத்தம்பி, சங்கரபாண்டியன், வேல்முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு தேர்தல் வெற்றி குறித்து ஆலோசனை நடத்தினர்.

News March 31, 2024

கோவையில் பாதிரியர்கள் கைது

image

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள சிஎஸ்ஐ., பேராலயத்தின் ஆல் சோர்ஸ் தேவாலயம் உள்ளது. இங்கு பணியாற்றிய சாம்ராஜ் மற்றும் ராஜேஷ் ஆகிய பாதிரியர்கள் ஊழல் குற்றச்சாட்டின் காரணமாக பணி நீக்கம் செய்யப்பட்டனர். இந்த நிலையில் நேற்று இரவு தேவாலயத்தின் உள்ளே திடீரென வந்து கதவு மற்றும் சிசிடிவி கேமராக்களை உடைத்து சூறையாடினர். பின் நேற்று அளித்த புகாரின் பேரில் ரேஸ்கோர்ஸ் போலீசார் 2 பாதிரியர்களை கைது செய்தனர்.

News March 31, 2024

ஈரோடு: வானத்தில் பறந்த மாணவர்கள்

image

ஈரோடு மாவட்டம் அரசு பள்ளிகளை நோக்கி மாணவர்கள் மாணவியர்கள் சேர்க்கை அதிகரிக்கும் மேற்கொள்ளும் வகையில் அந்தியூர் மலைப்பகுதியில் அரசு பள்ளியில் பயிலும் பழங்குடி இன மாணவ, மாணவியர்கள் 22 பேர் கோவையில் இருந்து சென்னைக்கு விமான மூலம் கல்வி சுற்றுலா சென்றனர். அவர்களை அரசு பள்ளி ஆசிரியர் நவநீதன் அழைத்துச் சென்றார்.

News March 31, 2024

அரியலூர் அருகே தகராறு

image

விக்கிரமங்கலம் அருகே  சாத்தம்பாடி ஊராட்சி கம்ப்யூட்டர் ஆபரேட்டர் சரவணன், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஆப்ரேட்டர் மனோகரன் ,தூய்மை காவலர் அன்புமணி ஆகியோர் குஞ்சு வெளி கிராமத்திற்கு வீட்டு வரி வசூல் செய்வதற்கு சென்றுள்ளனர்.அப்பொழுது குஞ்சு வெளி கிராமம் தெற்கு தெருவை சேர்ந்தவர் முருகானந்தம் என்பவர் அவர்களை திட்டியாதகவும் இது குறித்து ஊராட்சி செயலர் அளித்த புகாரில் முருகானந்தம் கைது செய்யப்பட்டார்.

News March 31, 2024

தஞ்சை அருகே  4 பவுன் சங்கிலி பறிப்பு

image

தஞ்சையை அடுத்துள்ள சிவாஜி நகர் ஆபிரகாம் பண்டிதர் நகரை சேர்ந் தவர் கஸ்தூரி (வயது62). நேற்று முன் தினம் நடைப்பயிற்சி மேற்கொண்டார்.
அப்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் கஸ்தூரி அணிந்திருந்த 4 பவுன் சங்கிலியை பறித்துள்ளனர். இதுகுறித்து கஸ்தூரி கொடுத்த புகாரின் பேரில் கள்ளப்பெரம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

error: Content is protected !!