India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மரப்பாலம் பகுதியில் வசந்த் நகர் என்ற பகுதியில் வாய்க்கால்பணியின் போது இன்று விபத்து ஏற்பட்டது. இதில், 5 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், முதலியார்பேட்டை போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், தொழிலாளர்கள் பாதுகாப்பு உபகரணம் எதுவும் இன்றி வேலை செய்துள்ளனர். இதனையடுத்து கான்ட்ரக்டர் , சூப்பர்வைசர் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கதிர்காமம் தொகுதியில் பாஜக வேட்பாளர் நமச்சிவாயம் அறிமுக கூட்டம் தனியார் திருமண நிலையத்தில் இன்று நடந்தது. எம்எல்ஏ கேஎஸ்பி. ரமேஷ் தலைமை தாங்கினார். முதல்வர் ரங்கசாமி, பேசியதாவது. புதுவையில் மக்கள் நல திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. அதனால் தைரியமாக மக்களிடம் வாக்கு கேட்கலாம். மேலும் 80 முதல் 90 சதவித வாக்குகள் நமக்கு வர வேண்டும் என தெரிவித்தார்.
பீகார் மாநிலம் பாட்னாவில் பள்ளிகளுக்கு இடையிலான தேசிய தடகளப் போட்டி வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி முதல் 9 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இப்போட்டியில் திண்டுக்கல் எஸ்.எம்.பி.எம் பள்ளியில் பயிலும் மாணவன் ஜித்தின் அர்ஜுனன் 100 மீட்டர், 110 மீட்டர் தடை தாண்டும் ஓட்டம், நீளம் தாண்டுதல்
ஆகிய 3 போட்டிகளிலும்
பங்குபெற உள்ளார். மாணவனை பள்ளி நிர்வாகம் மற்றும் விளையாட்டு ஆர்வலர்கள் பாராட்டி வருகின்றனர்.
தூத்துக்குடி தொகுதியில் ராணுவம், துணை ராணுவத்தில் பணிபுரிபவர்களுக்கு தபால் மூலம் வாக்களிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி இன்று 2,750 பேருக்கு தபால் வாக்கு அளிப்பதற்கான லிங்க் மாவட்ட தேர்தல் அதிகாரியால் அனுப்பப்பட்டுள்ளது. அந்த லிங்க் மூலம் தனது வாக்கினை பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜோலார்பேட்டை கிழக்கு ஒன்றியம், சின்னவேப்பம்பட்டு ஊராட்சிமன்ற தலைவர் சேகரின் தந்தை ரேணு இன்று வயது முதிர்வு காரணமாக காலமானார். இந்நிலையில், ஜோலார்பேட்டை எம்எல்ஏ தேவராஜி நேரில் சென்று மாலை வைத்து அஞ்சலி செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். இதில்
மாவட்ட இளைஞரணி து.அமைப்பாளர் செந்தில்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.
இண்டியா கூட்டணியின்
கடலூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் விஷ்ணுபிரசாதிற்கு ஆதரவாக திமுக சார்பில் கடலூரில் இன்று நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில், தமிழக வாழ்வுரிமை கட்சியின்
மாநில நிர்வாககுழு உறுப்பினர் மற்றும்
மாநகர அமைப்பு குழு தலைவர் தி. கண்ணன் தலைமையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் இளைஞர் பிரிவினர் திரளாக கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலை நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கிரிக்கெட் வீரர்களுடன் கிரிக்கெட் விளையாடி அவர்களுக்கு வாக்காளர் கையேட்டினை வழங்கி மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
ஆரணி அடுத்த கீழ்நகர் கிராமத்தில் ஸ்ரீ திரௌபதியம்மன் கோயிலில் அக்னி வசந்த விழாவில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள நூற்றுக்கணக்கான பக்தர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். மேலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
தென்காசி மக்களவைத் தொகுதியில் அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி போட்டியிடுகிறார். இவர் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார். இவரது பெயர் வேட்பாளர் பட்டியலில் முதலிடத்தில் இடம் பெற்றுள்ளது. இந்த தொகுதியில் கிருஷ்ணசாமி பெயரில் மேலும் 2 பேர் போட்டியிடுகின்றனர். அவர்களுக்கு தலா தொலைக்காட்சி பெட்டி மற்றும் கணினி ஆகிய சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
செஞ்சி அடுத்த பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்து விவசாயி 55. இவர்,நேற்று பெற்றாள் கிராமத்தில் இருந்து கடலாடிக்குளத்திற்கு சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது நல்லாண்பிள்ளை பெற்றாள் பகுதியில் இருந்த கரும்பு ஏற்றி வந்த டிராக்டர், முத்துவை முந்தி சென்றபோது, முத்து தடுமாறி டிரைலரின் பின் சக்கரத்தில் சிக்கினார்.இதில் தலை நசுங்கி அதே இடத்தில் இறந்தார்.இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
Sorry, no posts matched your criteria.