India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வேலூர், குடியாத்தம் தாலுகா வேப்பூர் கிராமத்தில் ஏரியில் குளித்த 4 பெண்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இந்நிலையில் அவர்களின் உடல்களுக்கு கண்ணீர் விட்டு அஞ்சலி செலுத்தினார் தேசிய ஜனநாயக கூட்டணி வேலூர் தொகுதி வேட்பாளர் ஏ.சி.சண்முகம். உடன் புதிய நிதி கட்சி நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியைச் சார்ந்தவர்கள் இருந்தனர்.
உடுமலை நேதாஜி விளையாட்டு மைதானத்தில் திருப்பூர் மாவட்ட வழக்கறிஞர்கள் மற்றும் நீதிமன்ற பணியாளர்கள் கலந்துகொள்ளும் கிரிக்கெட் போட்டி கடந்த வெள்ளிக்கிழமை (மார்ச் 29) தொடங்கியது. மாவட்டத்திலிருந்து 12 அணிகள் கலந்துகொண்ட நிலையில் நேற்று (மார்ச் 31) பரபரப்பாக நடைபெற்று முடிந்த இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற அணியினருக்கு பரிசு மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டன.
புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் நேற்று நடைபெற்ற காவல்துறை அணிவகுப்பை நகரக்காவல் துணைக்கண்காணிப்பாளர் ராகவி தலைமை வகித்து தொடங்கி வைத்தார். மேலராஜவீதி வழியாக வந்த இந்த அணிவகுப்பு ஊர்வலம் நகர்மன்றத்தில் நிறைவடைந்தது. இதில் நகரக்காவல் நிலைய காவலர்கள், ஆயுதப்படை காவலர்கள் இதில் பங்கேற்றனர். இதே போல அறந்தாங்கியிலும் நேற்று காவல்துறை அணிவகுப்பு நடைபெற்றது.
அரக்கோணம் அடுத்த பள்ளூர் சோதனை சாவடியில் தேர்தல் பறக்கும் படையைச் சேர்ந்த அலுவலர் சுந்தரம் மற்றும் போலீசார் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டதில் கல்லூரி மாணவர் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.68,400 கொண்டு சென்றது தெரிந்தது. பறக்கும் படையினர் அந்த பணத்தை அரக்கோணம் வட்டாட்சியர் செல்வியிடம் ஒப்படைத்தனர்.
கடத்தூர் அருகே உள்ள ஒடசல்பட்டி கூட்ரோடு பகுதியில் இன்று தர்மபுரி பாராளுமன்ற பா.ம.க வேட்பாளர் செளமியா 2.30 மணிக்கு தேர்தல் பரப்புரை மற்றும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட உள்ளார். அவர் மணியம்பாடி, போசி நாயக்கனஅள்ளி, வேடியூர், லிங்கநாயக்கை அள்ளி வெ, புதூர் கடத்தூர் பேரூராட்சி, நல்லநாகு அள்ளி முத்தனூர் அஸ்தகிரியூர் புது ரெட்டியூர் ஆகிய பகுதிகளிலிருந்து பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார்.
ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் ஜெயப்பெருமாள் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று (மார்ச் 31) பரமக்குடியில் நடிகை விந்தியா ஜெயப்பெருமாளை ஆதரித்து பரமக்குடி பேருந்து நிலையம் முன்பாக இரட்டை இலை சின்னத்தில் வாக்கு சேகரித்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட மகளிர் அணி இணை செயலாளர் கீர்த்தி முனியசாமி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
மயிலாடுதுறையில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று பிரச்சார உரையாற்றினார். அப்போது நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருந்து மயிலாடுதுறை மாவட்டத்தை பிரித்து புதிய மாவட்டம் நாங்கள் அமைத்து தந்தோம் எனவும் , ஆனால் நாங்கள் பெற்றெடுத்த பிள்ளைக்கு மு.க.ஸ்டாலின் பெயர் வைத்துள்ளார் என்றும் விமர்சித்தார்.
டிடிவி தினகரனுக்கு ஆதரவாக பெரியகுளம் ஒன்றிய பகுதிகளில் அவரது மனைவி அனுராதா நேற்று (மார்.31) பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் தான் அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை. தனது கணவருக்காக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறேன். தங்க தமிழ்ச்செல்வனை தனது சகோதரனாக பார்க்கிறேன் என அவர் தெரிவித்தார்.
கடம்பத்தூர் மேற்கு ஒன்றியம் மப்பேடு கூட்டுச்சாலையில் திருவள்ளூர் (தனி) நாடாளுமன்ற தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்திலுக்காக தேர்தல் பணிகளை மேற்கொள்ள தேர்தல் பணிமனையை நேற்று இரவு திறந்து வைத்தார் எம்எல்ஏ ராஜேந்திரன். உடன் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் உட்பட கூட்டணி கட்சியின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
ஜெயங்கொண்டம் அருகேயுள்ள சின்னவளையம் தெற்கு தெருவை சேர்ந்த தேவராஜ் மகன் ரவி, சிவக்குமார் மகன் வல்லரசு. இவர்களிடையே முன்விரோத தகராறு இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று இருசக்கர வாகனத்தில் சென்ற ரவியை, வல்லரசு தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த ரவி ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது குறித்து புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.