Tamilnadu

News March 19, 2024

சேலம் கூட்டத்தில் பிரதமர் மோடி!

image

சேலம் மாவட்டம் கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில் பா.ஜ.க. சார்பில் இன்று நடைபெற்று வரும் மக்களவைத் தேர்தலுக்கான, பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றுள்ளார். பிரச்சார வாகனத்தின் மூலம் பொதுக்கூட்டம் நடைபெறும் மேடைக்கு வந்த பிரதமருக்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். இக்கூட்டத்தில் பல்வேறு கட்சித் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

News March 19, 2024

விழுப்புரத்தில் துப்பாக்கி: கலெக்டர் அதிரடி உத்தரவு

image

விழுப்புரம் ஆட்சியரும், மாவட்டத் தலைமைத் தேர்தல் அலுவலருமான பழனி நேற்று (மார்ச் 18) தனது செய்தி குறிப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியத் தேர்தல் ஆணையம் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் 2024 அறிவித்துள்ளது. தேர்தல் நடத்தை விதிகளைப் பின்பற்றி அனைத்து துப்பாக்கி உரிமையாளர்களும் தங்கள் துப்பாக்கிகளை அந்தந்த பகுதி காவல் நிலையங்களில் உடனடியாக ஒப்படைக்குமாறு அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

News March 19, 2024

பெரம்பலூர்: நூதன முறையில் வாக்கு சேகரிப்பு

image

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, பெரம்பலூர் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.வேட்பாளரை ஆதரித்து, இன்று தலைமை பேச்சாளர் சேலம் கோவிந்தன் என்பவர் குடுகுடுப்பைக்காரர் வேடம் அணிந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, பெரம்பலூர் அடுத்த துறைமங்கலத்தில் பொதுமக்களிடம் வாக்குகள் சேகரித்தார். இதில் சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன் மற்றும் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

News March 19, 2024

ஊர்காவல்படை ஆள் சேர்ப்பு முகாம் ஒத்திவைப்பு

image

மதுரை மாநகர் காவல் ஆணையரின் உத்தரவுப்படி ஊர்காவல் படைக்கு (மார்ச்.19) அன்று ஆள் சேர்ப்பு முகாம் நடைபெற இருந்தது. தேர்தல் ஆணையத்தின் உத்தரவு படி தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால் மதுரை மாநகர் ஊர்காவல்படை ஆள்சேர்ப்பு தற்காலிகமாக தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்படுகிறது. ஆள்சேர்ப்பு தேதி பாராளுமன்ற தேர்தல் நிறைவு பெற்ற பின்பு அறிவிக்கப்படும் என ஆணையர் லோகநாதன் அறிவித்துள்ளார்.

News March 19, 2024

தஞ்சை: 45 துப்பாக்கிகள் ஒப்படைப்பு!

image

தஞ்சை மாவட்டத்தில் 4 ஆயிரத்து 103 போலீசார் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். முதல்கட்டமாக 90 துணை ராணுவ வீரர்களை கொண்ட ஒரு கம்பெனி தஞ்சைக்கு வந்துள்ளது. தஞ்சை மாவட்டத்தில் லைசென்ஸ் பெற்று துப்பாக்கி வைத்துள்ளவர்களை காவல் நிலையங்களில் ஒப்படைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ்ராவத் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி 45 பேர் துப்பாக்கிகளை ஒப்படைத்துள்ளனர்.

News March 19, 2024

தருமபுரி: ஓய்வு பெற்ற துணை தாசில்தார் பலி

image

தருமபுரி மாவட்டம் அரூர் கடைவீதியை சேர்ந்தவர் மோகன்குமார்(64). ஓய்வுபெற்ற துணை தாசில்தார். இவர் நேற்று சொந்த வேலை காரணமாக டூவீலரில் கருங்கல்பாடிக்கு சென்றுவிட்டு கூத்தாடிப்பட்டி அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த வளைவில் தடுமாறி கீழே விழுந்ததில் படுகாயமடைந்த மோகன்குமாரை, அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

News March 19, 2024

போட்டித் தேர்வு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

image

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே காளாஞ்சிபட்டியில் கலைஞர் நூற்றாண்டு ஒருங்கிணைந்த போட்டித் தேர்வு பயிற்சி மையத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தொகுதி-4 மற்றும் தொகுதி-2 தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் வருகிற வெள்ளிக்கிழமை (மார்ச்.22) முதல் தொடங்கவுள்ளது.போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் தேர்வர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 19, 2024

மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

image

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வட்டிக் கடை, அடகு கடைகள் மற்றும் அச்சக உரிமையாளர்களுக்கான தேர்தல் நடத்தை விதிகள் குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான ஆனி மேரி ஸ்வர்னா தலைமையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் வட்டிக் கடை, அடகு கடை, அச்சக உரிமையாளர்கள் தேர்தல் நடத்தை நெறி விதிகளுக்கு மாறாகவோ , சட்டத்துக்கு புறம்பான செயல்களில் ஈடுபடக்கூடாது என கூறினார்

News March 19, 2024

தேர்தல் பறக்கும் படை சோதனையில் 5.77 லட்சம் பறிமுதல்

image

தேனி – மதுரை சாலையில் கருவேல்நாயக்கன்பட்டி அருகே நேற்று (மார்.18) பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆண்டிபட்டியை சேர்ந்த பெருமாள் அவ்வழியே டூவீலரில் தேனிக்கு சென்றார். அவரிடம் பறக்கும் படையினர் சோதனை செய்ததில் உரிய ஆவணம் இன்றி ரூ.5.77 லட்சம் கொண்டு செல்வது தெரியவந்தது. அதனை பறிமுதல் செய்து பெரியகுளம் சார்நிலை கருவூலத்தில் ஒப்படைத்துள்ளனர்.

News March 19, 2024

திருவையாறு: ஆவணமில்லாத ரூ.1,13,800 பறிமுதல்!

image

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் சாலையில் வெட்டாறு பாலம் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் ராஜு பாண்டி தலைமையில் காவலர்கள் எட்வின் பிரபு, காளிதாசன் குழுவினர் இன்று வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த கேரளம், இடுக்கி மாவட்டத்தை சேர்ந்த ரெஜி என்பருடைய காரில் ஆவணங்கள் இன்றி எடுத்துவரப்பட்ட ரூ.1,13,800 பறிமுதல் செய்தனர்.

error: Content is protected !!