India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு சேலம் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் 16 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சேலம் மாவட்ட ஊரக வளர்ச்சி பொறியியல் பிரிவு பணிப்பார்வையாளர் , இளநிலை வரை தொழில் அலுவலர் நிலையிலான 16 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கயல்விழி ஆத்தூருக்கும் , கீதாலட்சுமி தலைவாசலுக்கும் பணியிடம் மாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி உத்தரவிட்டுள்ளார்.
இன்று “சேலத்திற்கு வரும் போது பழைய நியாபகங்கள் வருகின்றன; கோட்டை மாரியம்மன் வாழும் புண்ணிய பூமிக்கு வந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது; அம்மனை, காமாட்சியை சக்தி வடிவமாக நாம் வழிபடுகிறோம், தமிழக மக்கள் பெண்களை தெய்வமாகப் பார்க்கிறார்கள்” என்று சேலத்தில் நடந்த பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு.
திருச்சி தெற்கு மாவட்ட கூத்தைப்பார் முன்னாள் பேரூர் அதிமுக செயலாளர் S.குமார் நேற்று இயற்கை எய்தினார். இச்செய்தி அறிந்து திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் எம்பியுமான ப.குமார் இன்று நேரில் சென்று உடலுக்கு மாலை அணிவித்து, அவரது குடும்பத்தினர்களுக்கு ஆறுதல் கூறினார். உடன் கூத்தைப்பார் பேரூர் செயலாளர் முத்துக்குமார் இருந்தார்.
கடலூர் ஆல்பேட்டை சோதனைச் சாவடியில் ரூ.13 லட்சம் செலவில் புதிதாக சோதனை சாவடி கட்டப்பட்டு அதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவிற்கு துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் கலந்து கொண்டு புதிய சோதனை சாவடி கட்டிடத்தை திறந்து வைத்தார். இதில் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
திருநெல்வேலி மாவட்ட காவல்துறை இன்று (மார்ச் 19) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், பாராளுமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தல் சம்பந்தமான தவறான தகவல்களை குறுஞ்செய்திகள் வழியாகவோ, சமூக ஊடகங்கள் வழியாகவோ பகிரப்பட்டால் மாவட்ட காவல்துறையில் 24 மணி நேரமும் செயல்பட்டு வரும் 9498101765 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்குமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
சேலம் மாவட்டம் கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் இன்று பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி ‘எனதருமை தமிழ் சகோதர சகோதரிகளே என்றும், பாரத அன்னை வாழ்க’ எனவும் தமிழில் பேச்சைத் தொடங்கினார். பிரதமர் மோடியை பாஜக தொண்டர்கள் மோடி மோடி என்று கோஷமிட்டு வரவேற்றனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் அனைத்து பகுதிகளிலும் 15 வயதுக்கு மேற்பட்ட கல்வி அறிவு இல்லாதவர்களுக்கு அவரவர் இடத்திற்கு சென்று அடிப்படைக் கல்வி அறிவு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் உடுமலையில் இன்று 109 மையங்களில் 1200-க்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதினார். தேர்வில் வாசித்துக் காட்டுதல், எழுதுதல், கணிதம் உள்ளிட்ட பாடங்களில் 150-க்கும் மேற்பட்டவர்கள் தேர்வு எழுதினர்.
திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஆரணி நாடாளுமன்ற தொகுதி வாக்குகள் எண்ணும் மையத்தையும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்படும் பாதுகாப்பு அறைகளையும் மாவட்ட ஆட்சியர் தெ. பாஸ்கர பாண்டியன் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.கி.கார்த்திகேயன் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் போது அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
சிவகங்கை ஆட்சியர் அலுவலக வளாகப் பகுதியில் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டு, அதற்கான முன்னேற்பாடு பணிகளில் ,சிவகங்கை மாவட்டத்தில் தீவிர படுத்தப்பட்டு வரும்நிலையில், உடனடியாக தேர்தல் கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகின்றன.அதிகாரிகள் பணி செய்யும் வாகனத்தில் 5ஜி மற்றும் சோலார் தொழில்நுட்பத்துடன் கூடிய 360 டிகிரி கேமரா பொருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் எடுத்துள்ள செய்தி குறிப்பு: டேராடூனில் உள்ள இந்திய ராணுவ கல்லூரியில் 7ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மற்றும் 7ஆம் வகுப்பில் பயின்று வரும் மாணவர்கள் 8வது வகுப்பில் சேர்ந்து பயில ஜனவரி 2025 பருவத்திற்கான தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு ராஷ்ட்ரிய ராணுவ கல்லூரியின் www.rimc.gov.in என்ற இணையதளத்தை பார்வையிட்டு பயனடையலாம்.
Sorry, no posts matched your criteria.