Tamilnadu

News April 1, 2024

திண்டுக்கல்லில் நீச்சல் பயிற்சி முகாம்

image

திண்டுக்கல் மாவட்ட விளையாட்டரங்கத்தில் உள்ள நீச்சல் குளத்தில் கோடை கால நீச்சல் பயிற்சி முகாம் 5 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்ட பயிற்சி முகாம் ஏப்.1-ஆம் தேதி முதல் 12 வரை  நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள விரும்புவர்கள் ஆதாா் அட்டை நகலுடன் மாவட்ட விளையாட்டு, இளைஞா் நலன் அலுவலரை (7401703504) தொடர்பு கொள்ள கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

News April 1, 2024

பாஜக வேட்பாளர் வீடு வீடாக வாக்கு சேகரிப்பு

image

கன்னியாகுமரி மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் வேட்பாளராக போட்டியிடுகிறார். குமரி மாவட்டம் முழுவதும் பாஜகவினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வகையில் நாகர்கோவில் வடசேரி பகுதியில் நேற்று இரவு வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்கும் பணியில் வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணன் ஈடுபட்டார். மாவட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

News April 1, 2024

காஞ்சிபுரத்தில் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம்

image

காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் ஏப்ரல் 15ஆம் தேதி அன்று காலை 9 மணி அளவில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தனித்தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ராஜசேகரை ஆதரித்து அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி ஆதரித்து திறந்தவெளி வேன் மூலம் பிரச்சாரம் மேற்கொள்கிறார். இந்த தகவலை கட்சி தலைமை அறிவித்துள்ளது.

News April 1, 2024

வெறிநாய் கடித்து குதறியதில் 5 ஆடுகள் பலி.

image

தேவூர் அருகே ஆலத்தூர், ரெட்டிபாளையம் பகுதிகளில் கடந்த சில நாட்களாக அதிக அளவில் ஆடு, கோழிகளை வெறி நாய் கடித்து வருகிறது. நேற்று காலை ரெட்டிபாளையம் காக்காயன்காடு பகுதியை சேர்ந்த விவசாயி பெருமாள் என்பவருக்கு சொந்தமான 5 செம்மறி ஆடுகளை வெறி நாய் கடித்து குதறியது. இதில் 5 ஆடுகளும் பலியானது . இதனால் கால்நடைகளை கடித்து வரும் வெறிநாய்களை பிடிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

News April 1, 2024

மக்கள் வெள்ளத்தில் வேளாங்கண்ணி கடற்கரை

image

உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்திற்கு ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் மற்றும் பக்தர்கள் வருகை தந்திருந்தனர். தமிழகம் மட்டுமல்லாமல் வெளிநாடுகளில் இருந்து வந்த பலரும் மாதாவை தரிசனம் செய்துவிட்டு பின்னர் பொழுதைக் கழிக்க ஒரே நேரத்தில் கடற்கரையில் குவிந்தனர். இதனால் நேற்று காலை முதல் இரவு வரை மக்கள் வெள்ளத்தால் கடற்கரை நிரம்பி வழிந்தது.

News April 1, 2024

2 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளதாக ஆட்சியர் தகவல்

image

சிவகங்கை பாராளுமன்ற தொகுதியில் 20வேட்பாளர்கள் போட்டியிட உள்ளதால்  இரண்டு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளது. வாக்குப்பதிவு இயந்திரங்களில் First Randomization அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள், வேட்பாளர்கள் அல்லது வேட்பாளர்களின் முதன்மை முகவர்கள்  ஆகியோர்களின் முன்னிலையில் நடைபெறும் என்று சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்

News April 1, 2024

எடப்பாடி பழனிச்சாமி திருவாரூரில் பிரச்சாரம்

image

திருவாரூர் தெற்கு வீதியில் நாகை நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் சுர்ஜித் சங்கரை ஆதரித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று அதிமுக ஆட்சி காலத்தில் செய்த சாதனைகளை பட்டியலிட்டு பொதுக்கூட்டத்தில் பேசி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சர்கள் காமராஜ், ஓ எஸ் மணியன் ஆகியோர் பங்கேற்றனர்.

News April 1, 2024

திருவிழா நடத்த மறுப்பு, பொதுமக்கள் சாலைமறியல்.

image

புத்தனா நத்தம் மேற்கு தெருவில் உள்ள காளியம்மன் கோவில் அருகில் மாநில நெடுஞ்சாலை உள்ளதால் சாலை விரிவாக்க பணிகளுக்காக கோயிலை நெடுஞ்சாலை துறை சார்பில் அகற்றிக் கொள்ள கூறப்படுவதாக தெரிய வருகிறது இந்நிலையில் இந்த ஆண்டு திருவிழா நடத்த போலீஸ் மற்றும் வருவாய் துறையில் அனுமதிக்கவில்லை இதை கண்டித்து அப்பகுதி மக்கள் நேற்று சாலைமறியலில் ஈடுபட்டனர். போலீஸ் பேச்சு வார்த்தை நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

News April 1, 2024

காரைக்காலில் இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஆலோசனை

image

வருகின்ற பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு புதுச்சேரியில் இந்தியா கூட்டணி, காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வைத்தியலிங்கத்தை ஆதரித்து தேர்தல் பிரச்சார பணிகள் குறித்து நேற்று காரைக்காலில் இந்தியா கூட்டணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக எம்எல்ஏக்கள் நாஜிம், நாக தியாகராஜன், காங்கிரஸ் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

News April 1, 2024

தஞ்சை அருகே தீமிதி திருவிழா

image

கும்பகோணம் அருகே உள்ள தேப்பெருமாநல்லூரில் மகா மாரியம்மன், சுந்தர மகாகாளியம்மன் கோவிலில் தீமிதி விழா கடந்த 19- ந்தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இன்று (திங்கட்கிழமை) மாலை 4 மணிக்கு மகா மாரியம்மன் சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் வீதி உலா புறப்பாடு நடக்கிறது. மாலை 6 மணிக்கு தீமிதி விழா நடக்கிறது. இதில் திரளான பக்தர்கள் தீக்குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

error: Content is protected !!