Tamilnadu

News April 1, 2024

தி.மலை அருகே விபத்து: ஒருவர் பலி

image

வந்தவாசி அடுத்த பழவேரி கிராமத்தை சேர்ந்தவர் குமார். இவர் நேற்று மாலை திண்டிவனம் வந்தவாசி நெடுஞ்சாலையில் நடந்து சென்றுள்ளார்.
அப்போது அவ்வழியாக வந்த ஆந்திர மாநில அரசு பேருந்து அவர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த குமார் வந்தவாசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 1, 2024

அரியலூர் அருகே 2 பேர் கைது: போலீசார் அதிரடி

image

அரியலூர் காசாங்கோட்டையில் அனுமதியின்றி மணல் அள்ளப்படுவதாக தா.பழுர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அத்தகவலின் பேரில் அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்ட போது அனுமதியின்றி மாட்டு வண்டியில் மணல் ஏற்றிச் சென்ற பச்சமுத்து, கருணாநிதி ஆகிய இருவரை கைது செய்து இரண்டு மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனர். இது குறித்து போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 1, 2024

திருப்பத்தூர் அருகே விபத்து

image

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகா வடச்சேரி ஊராட்சி கூட்டு ரோட்டில் நேற்று மாலை (மார்ச்.31) சின்னப்பள்ளிகுப்பம் பகுதியை சேர்ந்த பிரபு (34) என்பவர் இருசக்கர வாகனத்தில் சென்றபோது வாணியம்பாடி பகுதியை சேர்ந்த ரியாஸ் (50)  என்பவரது இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதியதில் பிரபு படுகாயங்களுடன்  வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து உமராபாத் போலீசார் விசாரித்து வருகின்றனர்

News April 1, 2024

திண்டுக்கல் அருகே 27 பேர் கைது – போலீசார் அதிரடி

image

திண்டுக்கல் மதுவிலக்கு போலீசார் நேற்று திண்டுக்கல், நிலக்கோட்டை, நத்தம், வடமதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ரோந்து சென்றனர். அப்போது அப்பகுதிகளில் சட்டவிரோதமாக மது விற்ற கண்ணன் (45), நாகராஜன் (42), மதுரைவீரன் (45), செல்வம் (35), தவமணி (48), வின்சென்ட் (45) உள்பட 27 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்த 375 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

News April 1, 2024

சிவகங்கை: ஆறு பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்

image

திருப்புவனம் நாடார் தெருவில் நேற்று இரவு 9 மணிக்கு ஆறு பேர் கொண்ட கும்பல் லோடுமேன் கோபி என்பவரை கொடூரமாக தாக்கி அவரது தலையில் கல்லை போட்டுவிட்டு ஓடினர். இதையடுத்து கோபி உயிருக்கு ஆபத்தான நிலையில் திருப்புவனம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்து திருப்புவனம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News April 1, 2024

ஏடிஎம் மையத்தில் ஏமாற்றி பணம் எடுத்தவர் கைது

image

ராமநாதபுரத்தை சேர்ந்த சுவிங்லின் என்பவர் காரைக்காலில் உள்ள வங்கி ஏ.டி.எம் மையங்களுக்கு சென்று ஏ.டி.எம் பின் செட் பண்ண தெரியாதவர்களிடம் உதவி செய்வது போல் நாடகமாடி அவர்களின் ஏ.டி.எம் கார்டை மறைத்து வைத்துக்கொண்டு பழைய ஏ.டி.எம் கார்டை கொடுத்து ஏமாற்றி பணம் மோசடி செய்துள்ளார். இதனை அடுத்து காரைக்கால் நகர காவல் நிலைய போலீசார் அவரை கைது செய்து அவரிடம் இருந்த ஏ.டி.எம் கார்டுகளை பறிமுதல் செய்தனர்.

News April 1, 2024

மதுரை: இளைஞர் மர்மமான முறையில் மரணம்!

image

மதுரை வடக்கு சித்திரை வீதியை சேர்ந்தவர் நாராயணன்(30). இவர் நேற்று முன்தினம் இரவு புரோட்டா சாப்பிட்டு விட்டு வழக்கம் போல் தூங்கிய நிலையில் நேற்று காலை உயிரிழந்து கிடந்துள்ளார். இதைக் கண்ட அவரது மனைவி விமலா தேவி தன் கணவர் இறப்பில் சந்தேகம் உள்ளதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து நாராயணன் உயிரிழப்பு குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News April 1, 2024

பெரம்பலூர்: லாரி மோதி விபத்து – ஆசிரியர் பலி

image

பெரம்பலூரைச் சேர்ந்தவர் அன்மோல் ஜீனோஜா, தனியார் பள்ளி ஆசிரியர். இவர் நேற்று பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது, கட்டுப்பாட்டை இழந்து டிப்பர் லாரி ஒன்று இவர் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும், லாரி அருகில் இருந்த ஷேர் ஆட்டோவில் மோதி நின்றது. தகவலறிந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

News April 1, 2024

திரும்ப பெறப்பட்ட சுங்கச்சாவடி கட்டண உயர்வு

image

தமிழகத்தில் உள்ள தென்னமாதேவி உள்ளிட்ட 5 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படவுள்ளதாக இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மார்ச் 23ஆம் தேதி அறிவித்தது. அதன்படி இந்த கட்டண உயர்வு இன்றுமுதல் நடைமுறைக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த கட்டண உயர்வு முடிவைத் திரும்பப் பெற்றது தேசிய நெடுஞ்சாலை ஆணையம். இது தொடர்பான உத்தரவு அனைத்து திட்ட இயக்குநர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

News April 1, 2024

திரும்ப பெறப்பட்ட சுங்கச்சாவடி கட்டண உயர்வு

image

தமிழகத்தில் உள்ள கணியம்பாடி (வல்லம்) உள்ளிட்ட 5 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படவுள்ளதாக இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மார்ச் 23ஆம் தேதி அறிவித்தது. அதன்படி இந்த கட்டண உயர்வு இன்றுமுதல் நடைமுறைக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த கட்டண உயர்வு முடிவைத் திரும்பப் பெற்றது தேசிய நெடுஞ்சாலை ஆணையம். இது தொடர்பான உத்தரவு அனைத்து திட்ட இயக்குநர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

error: Content is protected !!