Tamilnadu

News August 22, 2025

புதுவை: 14 போலீஸ் சூப்பிரண்டுகள் இடமாற்றம்!

image

▶️சுபம் சுந்தர் கோஷ்-காரைக்கால் சட்டம் ஒழுங்கு தெற்கு
▶️பக்தவச்சலன்-புதுவை போக்குவரத்து தெற்கு-மேற்கு
▶️செல்வம்-புதுவை சட்டம் ஒழுங்கு தெற்கு
▶️மோகன்குமார்-காவல்துறை தலைமையகம்
▶️ரச்சனா சிங்-போக்குவரத்து வடக்கு – கிழக்கு
▶️முருகையன்-காரைக்கால் சட்டம்-ஒழுங்கு வடக்கு
▶️சுப்ரமணியன்-புதுச்சேரி சட்டம் ஒழுங்கு-மேற்கு ( <<17479595>>பகுதி-2<<>>)

News August 22, 2025

புதுவை: 14 சூப்பிரண்டுகள் இடமாற்றம்! (2/2)

image

▶️பழனிவேலு-புதுவை சி.பி.சி.ஐ.டி
▶️நல்லம் கிருஷ்ண ராய பாபு-புதுவை லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் கடலோர காவல்படை
▶️ரகுநாயகம்-புதுவை சட்டம் ஒழுங்கு வடக்கு
▶️வம்சீதர ரெட்டி-புதுச்சேரி பல்கலைக்கழக சிறப்பு அதிகாரி
▶️சரவணன்-போலீஸ் ஆப் போலீஸ்
▶️ஜிந்தா கோதண்டராம்-கமாண்டண்ட் ஆயுதப்படை மற்றும் சிறப்பு உளவுப்பிரிவு
▶️வரதராஜன்-ஏனாம் ஆகியவை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இத்தகவலை ஷேர் பண்ணுங்க

News August 22, 2025

குமரியில் 18 பகுதியில் முகாம்கள்..!

image

உழவரைத்தேடி வேளாண்மை முகாம் இன்று(ஆக.22) சுசீந்திரம், பறக்கை, நாவல்காடு, நுள்ளிவிளை, வெள்ளிமலை, கண்ணனூர், பளுகல், இனயம்புத்தன்துறை, அதங்கோடு, அகஸ்தீஸ்வரம், தர்மபுரம் தெற்கு, தோவாளை, குமாரபுரம், நெய்யூர், குலசேகரம், அண்டுகோடு, கிள்ளியூர், குளப்புரம் ஆகிய 18 கிராமங்களில் நடக்கவுள்ளது. இம்முகாமில் அனைத்து விவசாயிகளும் கலந்து கொண்டு குறைகள் & கோரிக்கைகளை தெரிவித்து பயன்பெற ஆட்சியர் அறிவிப்பு.

News August 22, 2025

ஈரோட்டில் அரசு வேலை கனவா? இங்கே போங்க!

image

டி.என்.டி.எஸ்.சி. குரூப் 2, 2ஏ போட்டி தேர்வுகளுக்கான மண்டல அளவில் இலவச முழு தேர்வு வரும், 23, 30, செப்., 6, 13, 20 ஆகிய நாட்களில் ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையத்தில் நடக்க உள்ளது. இதில் தமிழ், ஆங்கில வழியில் நடத்தப்படும் பயிற்சியுடன், முழு மாதிரி தேர்வு, மென் பாடக்குறிப்பு வழங்கப்படுகிறது. இதில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.( ஷேர் பண்ணுங்க)

News August 22, 2025

தூத்துக்குடி: அதிகாரிகளை விளாசிய கலெக்டர்

image

தூத்துக்குடி விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில், வில்லிசேரி விவசாயி பிரேம்குமார் உளுந்துக்கான கொள்முதல் பணம் 4 மாதமாக வழங்கப்படவில்லை என முறையிட்டார். கலெக்டர் இளம்பகவத், அவர்களுக்கு 4 மாதமாக பணம் வழங்காமல் இருப்பதை ஏற்க முடியாது; உங்களுக்கு இதைவிட வேறு என்ன வேலை?, ஒரு மாத ஊதியம் வழங்காவிட்டால் பொறுப்பீர்களா? உடனே சென்னை சென்று, பணம் கிடைக்க ஏற்பாடு செய்த பின் தான் இங்கே வர வேண்டும் என உத்தரவிட்டார்.

News August 22, 2025

திருப்பூரில் வேலைவாய்ப்பு முகாம்

image

திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலம் சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணி முதல் மதியம் 1 மணி வரை திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் (அறை எண் 139) நடைபெறவுள்ளது. 
மேலும் விவரங்களுக்கு 9499056944 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் மனிஷ் கூறியுள்ளார்.

News August 22, 2025

வந்தாரை வாழ வைக்கும் நம்ம சென்னை!

image

மதராஸ் பட்டணமாக 386 ஆண்டுகளுக்கு முன்பு 1639-ம் ஆண்டு இதே நாளில் (ஆக.22) சென்னை தோற்றுவிக்கப்பட்டது. வந்தாரை வாழ வைக்கும் சென்னை. அப்பெருமைக்கு சொந்தம் கொண்டாடுவதில் சென்னைக்கு முக்கிய பங்கு உண்டு. மதராஸ் பட்டணம், சென்னப் பட்டணம், மெட்ராஸ் என ஒவ்வொரு பெயர்கள் மாறினாலும், இன்று வரை சென்னை என்ற பெயருடன் நவீன இந்தியாவின் அடையாளமாக காட்சி அளிக்கிறது. சென்னையில் உங்களுக்கு பிடித்ததை கமெண்ட் பண்ணுங்க.

News August 22, 2025

அறிவித்தார் கோவை கலெக்டர்!

image

கோவை: தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை (சனிக்கிழமை) கோயம்புத்தூர் – பொள்ளாச்சி சாலையில் உள்ள ஈச்சனாரி ரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெறுகிறது. இந்த முகாமில் 270-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் பங்கேற்கவுள்ளனர். இதில் , 8 மற்றும் 10-ம் வகுப்பு,ஐடிஐ, இன்ஜினியரிங்,டிகிரி, செவிலியர்கள் என அனைத்துத் தரப்பினரும் கலந்துகொள்ளலாம் என கலெக்டர் பவன்குமார் தெரிவித்துள்ளார். SHAREIT

News August 22, 2025

நாகை: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

image

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய திருவிழாவானது வருகிற 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி அடுத்த மாதம் 8-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் 29-ந்தேதி அன்று ஒருநாள் மட்டும் நாகை மற்றும் கீழ்வேளூர் தாலுகாக்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. ஈடுசெய்ய செப்டம்பர் 13-ந்தேதி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு வேலை நாளாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க

News August 22, 2025

அறிவித்தார் சேலம் கலெக்டர்!

image

சேலம் மக்களே.. விவசாயிகள் தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டத்தில் பதிவுசெய்து பயன்பெறலாம். விவசாயிகள் மற்றும் உழவர் உற்பத்தியாளர் குழுவைச் சேர்ந்த விவசாயிகள் www.tnhorticulture.tn.gov.in என்ற வலைதளத்தில் பதிவு செய்து பயன்பெறலாம் என சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா.பிருந்தாதேவி, தெரிவித்துள்ளார். இதனை உங்கள் பகுதி விவசாயிகளுக்கு SHARE பண்ணுங்க

error: Content is protected !!