India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் முதல் முறை வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் முதல் முறை வாக்காளர்களுக்கான தூதுவர்களை இன்று(17.04.2024) நியமித்து மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன், விழிப்புணர்வு ஏற்படுத்தினார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர், அரசு அலுவலர்கள் இருந்தனர்.
மக்களவைத் தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் முடிவடைகிறது. இந்நிலையில் அரசியல் கட்சிகள் ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுக்கும் விதமாக இன்று முதல்(ஏப்.17,18,19) வரை பணப்பட்டுவாடாவை தடுக்க பறக்கும் படை தீவிர களப் பணியாற்றிட வேண்டும் எனவும், 24 மணி நேரமும் சுற்றிக் கொண்டே இருக்க வேண்டும் மேலும் தெருக்கள், குறுகிய வீதிகளிலும் ரோந்து செல்ல வேண்டும் என தேனி தேர்தல் அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.
மக்களவைத் தேர்தலையொட்டி சென்னை செல்லும் பயணிகளின் வசதிக்காக தென்னக ரயில்வே பல சிறப்பு ரயில்களை இயக்கி வருகிறது. அதன்படி, கோவையிலிருந்து ஏப்.19,21 ஆகிய தேதியில் இரவு 8.40 மணிக்கு கிளம்பி பழனி வழியே, திருச்சி, தஞ்சை, கடலூர் வழியாக சென்னை எக்மோருக்கு காலை 10.05 மணிக்கு செல்லும் வகையில் சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. இதற்கான முன்பதிவு ஆரம்பமாகி உள்ளது.
கோவில்பட்டி பிள்ளையார் நத்தத்தை சேர்ந்தவர் சண்முகசுந்தரம். மக்களவைத் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுகிறார். நேற்று(ஏப்.16) முன்தினம் இவர் தட்டப்பாறை பகுதியில் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தபோது அதே பகுதியை சேர்ந்த அஜித் என்பவர் இவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது சம்பந்தமாக தட்டப்பாறை போலீசில் நேற்று(ஏப்.16) புகார் செய்ததன் பேரில் போலீசார் விசாரிக்கின்றனர்.
சேலம் மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் விக்னேஷை ஆதரித்து, ஜலகண்டாபுரத்தில் நேற்று இரவு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டிருந்தார். அப்போது ஆண் குழந்தைக்கு ‘தீரன் ஆதித்யா’ என்று பெயர் சூட்டினார். இதில் அதிமுக நிர்வாகிகள் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
திருமங்கலம் அருகே கரிசல்பட்டியை சேர்ந்தவர் வீராச்சாமி. இவருக்கும் இவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் ராம்குமாருக்கும் வீட்டின் கழிவுநீர் செல்வதில் தகராறு இருந்து வந்தது. இன்று இத் தகராறு முற்ற ராஜ்குமார், சரவணக் கண்ணன், சுப்புலட்சுமி, கவிதா, அழகுராணி ஆகியோர் சேர்ந்து கட்டையால் வீராச்சாமியின் மண்டையை உடைத்தனர். திருமங்கலம் போலீசார் 5 பேரையும் இன்று கைது செய்தனர்.
ராமநாதபுரம் சின்னக்கடை பகுதியில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்பட்டு வருவதாக பறக்கும் படையினருக்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து பறக்கும்படை அதிகாரிகள் அங்கு சோதனை நடத்தியதில் வாக்காளர்களுக்கு விநியோகிக்க வைக்கப்பட்டிருந்த ரூ. 12ஆயிரத்து 500 பணம், 16 வாக்காளர் அடையாள அட்டைகள் ஜஹாங்கீர் என்பவரிடமிருந்து பறிமுதல் செய்தனர். கேணிக்கரை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “ராதிகா சரத்குமார் சுமார் 6 கோடியே 54 லட்சம், அவரது கணவர் சரத்குமார் 8 கோடியே 48 லட்சம் ரூபாயும், வருமான வரி மற்றும் ஜிஎஸ்டி வரி செலுத்தாமல் சுதந்திரமாக உள்ளார்கள். அதனால் தான் அவர்கள் பாஜகவில் சேர்ந்துள்ளார்கள்” என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.
மக்களவை 24 நாமக்கல் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மருத்துவர் ச.உமா,இன்று எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள குமர மங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட உள்ள வாக்குச்சாவடி மையத்தை ஆய்வு மேற்கொண்டு இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிமுறைகளை பின்பற்ற அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
பாராளுமன்ற தேர்தலுக்காக கடலூர் மாவட்டத்தில் துணை ராணுவ படையினர் 450, ஆந்திர மாநில காவல்துறையினர் 150, தெலுங்கானா ஊர்காவல் படையினர் 300, தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர் 180 மற்றும் கடலூர் ஊர்க்காவல் படையினர், ஓய்வு பெற்ற காவல் துறையினர், ஓய்வு பெற்ற ராணுவத்தினர் என மொத்தம் 4300 காவல்துறையினர் பாராளுமன்ற தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக கடலூர் எஸ்.பி. ராஜாராம் இன்று தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.