Tamilnadu

News April 17, 2024

தூத்துக்குடி: ரோந்து காவலர்களுக்கு எஸ்பி அறிவுரை

image

தமிழகம் முழுவதும் நாளை மறுநாள் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில் தேர்தல் தொடர்பாக சிறப்பு வாகன ரோந்து பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அந்த அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் இன்று மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் நடந்தது. இதில் எஸ்பி பாலாஜி சரவணன் அதிகாரிகளுக்கு அறிவுரைகளை வழங்கினார்.

News April 17, 2024

பெண் காவலர் குடும்பத்திற்கு எஸ்பி நேரில் ஆறுதல்

image

ஆம்பூர் அடுத்த மாதனூர் பகுதியில் இன்று(17ம் தேதி) ஏற்பட்ட சாலை விபத்தில் தலைமை பெண் காவலர் பரிமளா உயிரிழந்தார். தொடர்ந்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் இறந்த பெண் காவலரின் குடும்பத்தினருக்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார்.

News April 17, 2024

லாரி மோதி அடையாளம் தெரியாத பெண் பலி

image

வாலாஜா தாலுகா அம்மணந்தாங்கல் கிராமத்தில் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் நாமக்கல் பெட்ரோல் பங்க் அருகில் இன்று மதியம் 65 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் சாலையை கடக்க முயன்றார் . அப்போது அந்த வழியாக வந்த லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே அந்த பெண் இறந்தார். வாலாஜா போலீசார் வழக்கு பதிவு செய்து அவரது உடலை மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

News April 17, 2024

விருதுநகர் ஆட்சியர் அதிரடி உத்தரவு

image

விருதுநகர் மக்களவை தொகுதியில் 7,29,438 ஆண் வாக்காளர்களும், 7,64,760 பெண் வாக்காளர்களும், 3ம் பாலினத்தவர்கள் 202 பேர் என மொத்தம் 14,94,400 வாக்காளர்கள் வரும் 19 ம் தேதி வாக்களிக்க தயாராக உள்ளனர்.1,680 வாக்குச்சாவடிகள் உள்ள நிலையில் பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளதாக 186 வாக்குச்சாவடிகளும், 2 பதற்றமான வாக்குச்சாவடியாக கண்டறியப்பட்டு அங்கு கூடுதல் கண்காணிப்பு பணி மேற்கொள்ள ஆட்சியர் உத்தரவு அளித்தார்.

News April 17, 2024

கோவை: மரங்களை வெட்ட எதிர்ப்பு – முதல்வருக்கு மனு

image

ஆனைமலை – தாத்தூர் சாலையில் 100க்கும் அதிகமான புளிய மரங்கள் உள்ளன. நெடுஞ்சாலைத் துறையினர் விபத்துகள் அதிகம் நடைபெறுவதாக கூறி இந்த சாலையோர புளிய மரங்களை வெட்டுவதற்கு திட்டமிட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் இன்று(ஏப்ரல் 17) முதல்வர் ஸ்டாலினுக்கு, நெடுஞ்சாலை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்களுக்கு பொள்ளாச்சி தபால் நிலையத்திலிருந்து மனு அனுப்பினர்.

News April 17, 2024

வாக்காளர் உறுதிமொழி ஏற்பு

image

ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ள மக்களவை பொதுத்தேர்தலில் 100 சதவீதம் நேர்மையாக வாக்களிப்பது குறித்த வாக்காளர் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி இன்று(17.04.2024) அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் திரு. ராமகிருஷ்ணன், வட்டாட்சியர் ஆனந்தவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

News April 17, 2024

தேர்தல் விழிப்புணர்வு நடைப்பயண பேரணி நிறைவு

image

தேனி மக்களவை பொதுத்தேர்தல் 2024-ஐ முன்னிட்டு, 100% வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.வி.ஷஜீவனா தலைமையில் 100 கி.மீ. தேர்தல் விழிப்புணர்வு நடைப்பயண பேரணி நடைபெற்றது. இப்பேரணி அல்லிநகரம் நகராட்சியில் இன்றுடன் நிறைவு பெற்றது. மேலும் தேர்தல் குறித்த விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

News April 17, 2024

புதுவையில் தேர்தல் ரத்து செய்ய வலியுறுத்தி மனு

image

புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதியில் தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் காரைக்காலில் வாக்காளர்களுக்கு பாஜக, காங்கிரஸ் கட்சியினர் பணம் தருவதாகவும் இதனால் உடனடியாக புதுவை தொகுதி நாடாளுமன்ற தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று இன்று காரைக்கால் அதிமுக மாவட்ட செயலாளர் ஓமலிங்கம் தலைமையில் அதிமுகவினர் மாவட்ட ஆட்சியர் மணிகண்டன் அவர்களை சந்தித்து மனு அளித்தனர்.

News April 17, 2024

நூதன முறையில் மூதாட்டியிடம் நகை பறிப்பு

image

மதுரை, மணியாச்சியைச் சேர்ந்தவர் நாகம்மாள்(70). இவர் நேற்று பெரியார் பேருந்து நிலையத்தில் நின்றபோது 60-வயது மதிக்கத்தக்க ஒருவர், முதியோர் உதவித் தொகை வாங்கித்தருவதாக கூறி நாகம்மாளை நம்ப வைத்து போட்டோ ஸ்டுடியோவிற்கு அழைத்து சென்றார். செயின் அணிந்தால் கிடைக்காது என சொல்லி கழுத்தில் அணிந்திருந்த செயினை கழட்டி பர்ஸில் வைக்க சொல்லினார். புகைப்படம் எடுத்தபோது முதியவர் பர்ஸை திருடி சென்றார்.

News April 17, 2024

கடலூர்: 3-ஆம் கட்ட நீச்சல் பயிற்சி

image

கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் உள்ள நீச்சல் குளத்தில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு குறைந்த கட்டணத்தில் கோடைக்கால 2-ம் கட்ட நீச்சல் வகுப்புகள் நேற்று துவங்கி வரும் 28ஆம் தேதிவரை நடைபெறுகிறது‌. இந்நிலையில் 3-ஆம் கட்ட நீச்சல் வகுப்பு வரும் 30-ம் தேதி முதல் மே மாதம் 12-ம் தேதிவரை நடைபெற உள்ளதாக மாவட்ட விளையாட்டு அலுவலர் செ. மகேஷ்குமார் தெரிவித்துள்ளாா்.

error: Content is protected !!