India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி வட்டம், ஆந்திர தமிழக எல்லையிலுள்ள பெத்திக்குப்பம் நவீன ஒருங்கிணைந்த சோதனை சாவடியில் இன்று மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபுசங்கர் அவர்கள் மக்களவை பொதுத் தேர்தல் 2024 ஐ முன்னிட்டு சென்னை – கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்களை தேர்தல் பணியாளர்கள் மற்றும் காவல் துறையினர்கள் தணிக்கை மேற்கொள்வதை பார்வையிட்டு மேலாய்வு செய்தார்.
மக்களவைத் தேர்தலில் முன்னிட்டு தேர்தல் பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், புதுச்சேரி மாநிலத்தில் வரும் 19 ஆம் தேதி அரசு துறைகள், அரசு பொதுத்துறைகள், சார்பு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் அனைத்திற்கும் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என புதுச்சேரி மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
சித்தாமூர் ஒன்றியத்தில்,43 ஊராட்சிகள் உள்ளன.17 ஆண் ஊராட்சி தலைவர்கள், 26 பெண் ஊராட்சி தலைவர்கள் உள்ளனர். ஒன்றிய செயலர் ஏழுமலை, ஒன்றியத் தலைவராக பதவி வகித்து வருகிறார். இந்நிலையில், சித்தாமூர் ஒன்றியத்தில் அடங்கிய ஊராட்சிகளின் பெண் தலைவர்கள் கூட்டமைப்பு சார்பாக, அதிகார துஷ்பிரயோகம் செய்யும் சித்தாமூர் ஒன்றியத் தலைவர் ஏழுமலை மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் ‘என, மனு அனுப்பப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தியில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் சிவகங்கை நாடாளுமன்ற வேட்பாளர் கார்த்திக் சிதம்பரத்தை ஆதரித்து கை சின்னத்தில் வாக்கு சேகரித்தார். இந்நிகழ்வில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளர் பச்சேரி சுந்தராஜன், சிவகங்கை மாவட்ட கழகத் துணைச் செயலாளர் த.சேங்கைமாறன், மானாமதுரை சேர்மன் மாரியப்பன் கென்னடி, ஏராளமானோர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் திருமா கோட்டை பகுதியில் திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. வரும் 6 ஆம் தேதி தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி வேட்பாளர், முரசொலியை ஆதரித்து மன்னார்குடியில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட உள்ளத்தில், கூட்டணி கட்சி நிர்வாகிகள் திமுகவினர் ஏராளமான கலந்து கொள்ள வேண்டும் எனக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழ்நாட்டில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் செய்து தீவிர பிரசாரம் மேற்கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி நாளை அமித்ஷா தமிழகம் வருகிறார். அதன்பிறகு அவர் மதுரை மற்றும் சிவகங்கை ஆகிய தொகுதிகளில் பிரசாரம் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், அமித்ஷாவின் 2 நாள் தமிழக சுற்றுப்பயணம் தவிர்க்க முடியாத காரணங்களால் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தல் தொடர்பான புகார்கள் இருந்தால் அதனைத் தெரிவிக்க மாநில தேர்தல் செலவின பார்வையாளரின் தொடர்பு எண் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கோவை மாவட்ட நிர்வாகம் இன்று (ஏப்.03) வெளியிட்டுள்ள அறிக்கையில், பொதுத் தேர்தல் தொடர்பான புகார்கள் ஏதேனும் இருப்பின் மாநில தேர்தல் செலவின பார்வையாளரை அலைபேசி எண் 9345298218 என்ற எண்ணின் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என அறிவிக்கப்ப்பட்டது.
சிதம்பரம் மக்களவை தொகுதிக்கு சிறப்பு செலவினப் பார்வையாளராக பி.ஆர்.பாலகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தேர்தல் தொடர்பான புகார் மற்றும் தகவலுக்கு அவரது கைப்பேசி 9345298218 என்ற எண்ணில் தெரிவிக்கலாம் என்று சிதம்பரம் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ஆனி மேரி ஸ்வர்னா தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் வெயில் கொளுத்தி எடுக்கிறது. வெயிலை சமாளிக்க பலரும் வெயிலுக்கேற்ற உணவு வகைகளை தேடி உண்கின்றனர். மனிதர்களுக்கே இந்த நிலைமை என்றால் விலங்குகளுக்கு சொல்லவா வேண்டும். இன்று பழனி கோயிலில் குரங்கு ஒன்று தண்ணீர் தேடி அலைந்து இறுதியில் வாட்டர் பாட்டிலில் கிடைத்த 1 லிட்டர் தண்ணியை தாகம் தீர்க்க குடித்தது. இதுதொடர்பான புகைப்படம் வைரலாகி வருகிறது.
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, தேர்தல் பாதுகாப்புப் பணிகளில் முன்னாள் படைவீரர்களை சிறப்புக் படைவீரர்களை சிறப்பு காவலர்களாக ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, தருமபுரி மாவட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னால் படைவீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட விண்ணப்பம் அளிக்காதவர்கள், தங்களின் விண்ணப்பத்தினை மாவட்ட முன்னாள் படை வீரர் நல உதவி இயக்குனர் அலுவலகத்தில் அளிக்க கலெக்டர் அறிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.