India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர் எஸ்டிபிஐ கட்சியின் வேட்பாளர் முகமது முபாரக் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். உடன் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன் மற்றும் திண்டுக்கல் சீனிவாசன் தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பின் மாநில பொதுச் செயலாளர் சந்தன பிரியா பசுபதி பாண்டியன் என உடன் இருந்தனர்.
வண்ணாரப்பேட்டை, மண்டலம்-5 பேசின் பிரிட்ஜ் சாலையில் மக்களவை தேர்தல் வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோ, மு.அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் திமுக அமைச்சர் சேகர்பாபு, வேட்பாளர் கலாநிதி வீராசாமி உள்ளிட்டோர் ஒரே நேரத்தில் வந்ததையடுத்து, இரு தரப்புக்கும் இடையே முதலில் வந்தது யார் என்பது குறித்து ஒருமணி நேரத்திற்கும் மேலாக கடும் வாக்குவாதம் ஏற்பட்டு வருகிறது.
நெல்லை பாராளுமன்ற காங்கிரஸ் வேட்பாளராக பீட்டர் அல்போன்ஸ் அறிவிக்கப்பட உள்ளார்.
திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 சீட்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளது, நெல்லை தொகுதிக்கு காங்கிரஸ் வேட்பாளர் இதுவரை அறிவிக்கப்படவில்லை இந்நிலையில் இன்று ( மார்ச் 25 ) மாலைக்குள் பீட்டர் அல்போன்ஸ் அறிவிக்கப்படலாம் என காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்து வருகிறது.
வரும் ஏப்.19 ல் நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் அதிமுக சார்பில் கோவை தொகுதியில் போட்டியிடும் தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் சிங்கை ராமச்சந்திரன் இன்று (மார்ச்.25) கோவை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான கிராந்திகுமார் பாடியிடம் தனது வேட்பு மனுவினை தாக்கல் செய்தார். அப்போது, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, எம்எல்ஏ அம்மன் அர்ஜுனன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், பாராளுமன்ற தேர்தலினை முன்னிட்டு 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வினை பொதுமக்களிடையே ஏற்படுத்தும் வகையில் ஆட்டோ, கார் உள்ளிட்ட வாகனங்களின் விழிப்புணர்வு பேரணியினை
மாவட்ட தேர்தல் அலுவலர் / சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ஆனி மேரி ஸ்வர்ணா இ.ஆ.ப., இன்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.
தருமபுரி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் பெண் பா.ம.க வேட்பாளர் திருமதி சௌமியா அன்புமணி இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார். உடன் அன்புமணி ராமதாஸ் எம்பி மற்றும் பென்னாகரம் எம்எல்ஏ, ஜி. கே.மணி. பா.ஜ.க மாவட்ட தலைவர் பாஸ்கர் அமமூக மாவட்ட பிரதிநிதி உடனிருந்தனர்.
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தருமபுரி நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் மருத்துவர் அசோகன் இன்று மாவட்ட தேர்தல் அலுவலரிடம் வேட்பு மனு அளித்தார். முன்னாள் அமைச்சர் அன்பழகன், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி, தேசிய முற்போக்கு திராவிடர் கழகத்தின் மாநில அவைத்தலைவர் மருத்துவர் இளங்கோவன், அம்மா பேரவை மாவட்ட செயலாளர் வெற்றிவேல் ஆகியோர் இருந்தனர்.
தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி அன்று நடைபெற உள்ள மக்களவை தேர்தலை முன்னிட்டு கூத்தாநல்லூர் நகராட்சி சார்பில் இன்று அனைவரும் 100 சதவீதம் வாக்களிப்போம் என்பதை வலியுறுத்தி மோட்டார் வாகன விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதை ஆட்சியர் சாரு ஸ்ரீ தொடங்கி வைத்தார். கோட்டாட்சியர் சங்கீதா ஆணையர் சித்ராசோனியா, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மாவட்ட அலுவலர் புவனா ஆகியோர் கலந்து கொண்டனர்.
சேலம் நாடாளுமன்ற மக்களவைத் தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி தனது வேட்பு மனுவை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான டாக்டர். பிருந்தாதேவியிடம் இன்று தாக்கல் செய்தார். தி.மு.க வின் சேலம் மத்திய மாவட்டச் செயலாளர் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., எம்.பி.எஸ்.ஆர்.பார்த்திபன், காங்கிரஸ் கட்சியின் சேலம் மாநகர் மாவட்டத் தலைவர் பாஸ்கரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தருமபுரி மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வக்கீல் ஆ.மணி இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான சாந்தியிடம் வேட்புமனுவை வழங்கினார். உடன் உழவர் மற்றும் வேளாண்மை துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம், மாவட்ட செயலாளர்கள் பழனியப்பன் தடங்கம் சுப்பிரமணி இருந்தனர்.
Sorry, no posts matched your criteria.