Tamilnadu

News March 27, 2024

சிறை காவலர்கள் 3 பேர் சஸ்பெண்ட்!

image

கடலூர் மத்திய சிறையில் தண்டனை கைதியாக இருந்த கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த விநாயகமூர்த்தி என்பவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது, போலீஸ் காவலை மீறி நேற்று முன்தினம் தப்பி ஓடினார். இது தொடர்பாக பாதுகாப்பில் அஜாக்கிரதையாக இருந்த சிறை காவலர்கள் கதிர்வேல், பிரபாகரன், கோவர்தன் ஆகியோரை சஸ்பெண்ட் செய்து சிறை கண்காணிப்பாளர் உத்தரவிட்டார்.

News March 27, 2024

பத்தாம் வகுப்பு தேர்வு 353 பேர் ஆப்சென்ட்

image

தமிழகம் முழுவதும் பத்தாம் பொதுத்தேர்வு நேற்று (மார்ச் 26) தொடங்கியது. இதில் வேலூர் மாவட்டம் முழுவதும் மொத்தம் உள்ள 103 தேர்வு மையங்களில் 9320 மாணவர்கள், 9350 மாணவிகள் என மொத்தம் 18670 பேர் தேர்வு எழுதினர். இதில் 353 பேர் தேர்வு எழுதாமல் ஆப்சென்ட் ஆகினர். என வேலூர் பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

News March 27, 2024

மயிலாடுதுறை:காவல் கண்காணிப்பாளர் ஆய்வு

image

மயிலாடுதுறை பாராளுமன்ற தேர்தலுக்காக பாதுகாப்பு பணி மற்றும் தொடர் வாகன சோதனைகளில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா காவல் நிலையம் , கட்டுப்பாட்டு அறை , வாக்கு பெட்டிகள் பாதுகாப்பு அறை உள்ளிட்ட பகுதிகளில் நேரில் சென்று நேற்று ஆய்வு மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து பணிகளில் ஈடுபட்டுள்ள காவலர்களுக்கு தகுந்த அறிவுரைகளை வழங்கினார்.

News March 27, 2024

அமைச்சர் பொன்முடி நடத்தை விதிகளை மீறியதாக புகார்

image

விழுப்புரம் அதிமுக வழக்கறிஞர் அணி சார்பில் நேற்று (மார்ச் 26) தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான பழனியிடம் அளித்த மனுவில், வேட்புமனு தாக்கல் செய்பவர்கள் 100 மீட்டருக்கு முன் வாகனத்தை நிறுத்த வேண்டும். ஆனால், விசிக வேட்பாளருடன் மனு தாக்கல் செய்ய வந்திருந்த அமைச்சர் பொன்முடி ஆட்சியர் அலுவலகத்திற்குள் காரில் வந்தார்‌. தேர்தல் நடத்தை விதிகளை மீறிய அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என கூறப்பட்டிருந்தது.

News March 27, 2024

வேலூர் திமுக 18 அணிகள் ஆலோசனை கூட்டம்

image

வேலூர் மத்திய மாவட்ட திமுக அலுவலகத்தில் திமுகவில் உள்ள 18 அணிகளை சேர்ந்த அமைப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று (மார்ச் 26) நடந்தது. இந்த கூட்டத்திற்கு மத்திய மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு விருந்தினராக திமுக பொதுச்செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன் கலந்துகொண்டு பேசினார்.

News March 27, 2024

‘பீதி’யில் கடலூர் துறைமுகம் பகுதி மக்கள்!

image

கடலூர் துறைமுகம் பகுதியில் தெருநாய்கள் அதிகமாக உள்ளது. அது மட்டுமல்லாமல் அந்த நாய்களுக்கு கழுத்து பகுதியில் காயம்போல் (நோய்) ஏற்பட்டு, தான் என்ன செய்கிறோம் என்று அறியாமல் திறந்த வீடு, கோவில், பள்ளிவாசல் மற்றும் குழந்தைகள் பள்ளி என அனைத்து இடங்களிலும் அந்த நாய்கள் சென்று நுழைந்து விடுகிறது. இதனால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளதால் அப்பகுதியினர் பீதி அடைந்துள்ளனர்.

News March 27, 2024

நாமக்கல் : 10 ம் வகுப்பில் 417 பேர் தனித் தேர்வர்கள்

image

நாமக்கல் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு 26.03.2024 முதல் 08.04.2024 வரை நடைபெறவுள்ளது. இத்தேர்வினை 92 தேர்வு மையங்களில் 10, 335 மாணவர்களும் 9, 697 மாணவியர்களும் என மொத்தம் 20, 032 மாணவ மாணவியர்கள் தேர்வு எழுதவுள்ளனர். இத்தேர்வினை எட்டு தேர்வு மையங்களில் தனித்தேர்வர்களாக 417 மாணவர்கள் தேர்வெழுத உள்ளனர். இத்தேர்வினை எழுதவுள்ள மாற்றுத்திறனாளி மாணவர்களில் 334 பேரும் அடங்குவார்கள்

News March 27, 2024

சென்னைக்கு இணையாக மாறும் திருச்சி

image

சென்னை மட்டுமின்றி தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மெட்ரோ பணிகள் தொடங்க உள்ளன.அதாவது திருச்சி, கோவை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் மெட்ரோ தொடங்கப்பட உள்ளது. இதில் திருச்சியில் தொடங்கப்பட உள்ள மெட்ரோவில் மேப் வெளியாகி உள்ளது.அறிக்கையில், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி மற்றும் சேலம் மாநகரில் பெருந்திரள் மற்றும் துரித போக்குவரத்திற்கான விரிவான சாத்தியக்கூறு ஆகும்.

News March 27, 2024

தென்காசி அருகே இருவர் கைது

image

வாசுதேவநல்லூர் அருகே கரிவலம்வந்தநல்லூர் உதவி ஆய்வாளர் சுப்புராயலு நேற்று மாலையில் ரோந்து பணியில் இருந்த போது சட்ட விரோதமாக மது பாட்டில்களை விற்பனை செய்த பெரும்பத்தூரை சேர்ந்த வேல்துரை (38) மற்றும் கிழக்குத் தெருவை சேர்ந்த முத்து(45) ஆகிய இருவரை பிடித்து கைது செய்தார்.மேலும் அவர்களிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 29 மதுபாட்டில்கள் பணமும் பறிமுதல் செய்தனர்

News March 27, 2024

புதுக்கோட்டை அருகே சரமாரி வெட்டு

image

வடகாடு அருகே புள்ளான்விடுதி
சேர்ந்தவர் கணேசன் இவரது உறவினர் ராஜேந்திரன் மகன் சுதாகர் (34). இவர்கள் இருவருக்கும் இடையே
இடப்பிரச்சினை இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று கணேசனுக்கு சொந்தமான இடத்தில் உள்ள மரங்களை சுதாகர் வெட்டியுள்ளார். இதனை தட்டிக்கேட்ட கணேசனை, அரிவாளால் சுதாகர் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் படுகாயமடைந்த கணேசன்
வடகாடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்

error: Content is protected !!