Tamilnadu

News March 27, 2024

அண்ணாமலை வேட்புமனு தாக்கல்

image

மக்களவைத் தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் கோவை மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் அண்ணாமலை இன்று, தேர்தல் நடத்தும் அலுவலர் கிராந்திகுமார் பாடியிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அப்போது எம்எல்ஏ வானதி சீனிவாசன் மற்றும் பாஜகவினர் உடன் இருந்தனர். கோவையில் அதிமுக, திமுக, பாஜக என மும்முனை போட்டி நிலவுவதால், தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

News March 27, 2024

தேர்தலில் பணிபுரிய விண்ணப்பிக்கலாம்

image

நாடாளுமன்ற தேர்தலில் பணிபுரிய முன்னாள் படை வீரர்கள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார். நாகை நாடாளுமன்ற தேர்தலில் பாதுகாப்பு பணியில் முன்னாள் படைவீரர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். எனவே மாவட்டத்தைச் சேர்ந்த திடகாத்திரமான உடல்நிலையில் உள்ள அனைத்து முன்னால் படைவீரர்களும் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளார். மேலும் விவரங்களுக்கு 04365299765 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.

News March 27, 2024

கள்ளக்குறிச்சியில் பிரேமலதா விஜயகாந்த் பிரச்சாரம்

image

கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணியின் சார்பில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் குமரகுருவை ஆதரித்து வரும் மார்ச் 31ஆம் தேதி அன்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், மாலை 3 மணி அளவில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதாக தேசிய முற்போக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

News March 27, 2024

புனித வெள்ளி: சிறப்பு பேருந்துகள் இயக்கம்

image

புனித வெள்ளியை முன்னிட்டு விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சென்னையில் இருந்து பல்வேறு ஊருக்கு செல்ல ஏதுவாக நாளை (மார்ச் 27) கூடுதலாக 240 பஸ்களும், மார்ச் 28இல் 80 பஸ்களும், மார்ச் 29இல் 240 பஸ்களும் என மொத்தம் 660 சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. எனவே பயணிகள் https://www.tnstc.in/home.html என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்து பயன்படுத்திக்கொள்ளலாம். 

News March 27, 2024

நாடாளுமன்ற அதிமுக தேர்தல் அலுவலகம் திறப்பு

image

கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதியில் போளூர் ஒன்றிய அதிமுக சார்பில் திருவண்ணாமலை நாடாளுமன்ற அதிமுக தேர்தல் அலுவலகம் இன்று திறக்கப்பட்டது. அதில் போளூர் சட்டமன்ற உறுப்பினர் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி கலந்துகொண்டு அலுவலகத்தை திறந்து வைத்தார். அதில் திரளான அதிமுக தொண்டர்கள் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

News March 27, 2024

விழுப்புரம் வேலைவாய்ப்பு முகாமில் 72 பேருக்கு பணி

image

விழுப்புரம் இஎஸ் பாலிடெக்னிக் கல்லூரியில் நேற்று (மார்ச் 26) வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு இஎஸ் கல்வி குழுமத்தின் தலைவர் செந்தில்குமார் தலைமை தாங்கி, முகாமை துவக்கி வைத்தார். 8 முன்னணி தொழில் நிறுவனங்கள் பங்கேற்ற இந்த முகாமில் 72 மாணவ மாணவிகள் பணி நியமன ஆணையை பெற்றனர். இதில் மாணவர்களின் பெற்றோர் மற்றும் பேராசிரியர்கள் பலர் கலந்துகொண்டனர்.

News March 27, 2024

10ம் வகுப்பு பொதுத்தேர்வு 776 பேர் “ஆப்சென்ட்”

image

மதுரை மாவட்டத்தில் நேற்று துவங்கிய 10ம் வகுப்பு தமிழ் உள்ளிட்ட மொழிப்பாட பொதுத்தேர்வினை 488 பள்ளிகளை சேர்ந்த 38 ஆயிரத்து 389 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்து இருந்தனர். இந்த தேர்வுகளுக்காக மாவட்டம் முழுவதும் 145 மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. இந்நிலையில் நேற்று 37 ஆயிரத்து 613 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதிய நிலையில், 776 மாணவ, மாணவிகள் தேர்வு எழுத வரவில்லை.

News March 27, 2024

ஈரோடு : திமுக வேட்பாளரின் சொத்து மதிப்பு ரூ.4.89 கோடி

image

ஈரோடு மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில், வேட்பாளர் கே.இ.பிரகாஷ் போட்டியிடுகிறார். இந்நிலையில் திமுக வேட்பாளர் கே.இ.பிரகாஷ் பெயரில் மொத்தம் ரூ.4.89 கோடி மதிப்பிலான சொத்துகள் இருப்பதாக வேட்புமனு பிரமாண பத்திரத்தில் தெரிவித்துள்ளார். மேலும், பிரகாஷ் பெயரில் ரூ.3,96,849 மற்றும் மனைவி பெயரில் ரூ.35,56,310 கடன் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 27, 2024

வேலூர் தேர்தல் பொது பார்வையாளர் வருகை

image

பாராளுமன்ற பொதுத்தேர்தல்  முன்னிட்டு வேலூர் பாராளுமன்ற தொகுதிக்கு தேர்தல் பொது பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள  ரூபேஷ் குமார் அவர்களை வேலூர் மாவட்ட தேர்தல் அலுவலரும்,  கலெக்டருமான சுப்புலெட்சுமி இன்று (மார்ச் 27) சுற்றுலா மாளிகையில் பூங்கொத்து வழங்கி வரவேற்றார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

News March 27, 2024

தொண்டி அருகே அடையாளம் தெரியாத முதியவர் சடலம்

image

தொண்டி: திருநகர் பகுதியில் மதுரை-தொண்டி தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் 75 வயது மதிக்கத்தக்க முதியவர் சடலம் கிடப்பதாக அப்பகுதி மக்கள் தொண்டி போலீசருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன் அடிப்படையில் காவல்துறை மற்றும் வருவாய்த் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். போலீசார் அடையாளம் தெரியாத சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இறந்த முதியவர் குறித்து விசாரணை நடத்தினர்.

error: Content is protected !!