India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தேர்தல் விதி மீறல்கள் தொடா்பாக பொதுமக்கள் தேர்தல் பார்வையாளர்களிடம் நேரடியாகவும், கைப்பேசி வாயிலாகவும் புகாா் தெரிவிக்கலாம். பொது பார்வையாளர்கள் சுனில்குமாா் – 93639 73902, சத்யத்ஜித் நாயக் – 74183 42803, செலவின பாா்வையாளா்கள் சிவசங்கா்யாதவ் – 93639 81375, மேவாராம் ஓலா – 93639 84150 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் ஆட்சியர் வளர்மதி தெரிவித்துள்ளார்.
செய்யார் வெம்பாக்கம் அருகே உள்ள கரந்தை கிராமத்தில் இயங்கும் கல்குவாரியில் கடந்த 26 ஆம் தேதி கரந்தை கிராமத்தைச் சேர்ந்த ஜெகதீசன், வல்லரசு, யுவராஜ் ஆகியோர் கல்குவாரியில் புகுந்து லாரியின் கண்ணாடிகளை உடைத்து பொருட்களை சூறையாடினர்.
நேற்று(மார்ச்.28) அவர்கள் மீது வழக்கு பதிவு செய்த தூசி போலீசார் வல்லரசு, யுவராஜ் ஆகிய இரண்டு வாலிபர்களை கைது செய்து தலைமறைவான ஜெகதீசனை தேடி வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வெங்கடசமுத்திரம் பகுதியில் நேற்று பிற்பகல் முதல் இரவு வரை தொடர்ந்து 10 மணி நேரத்துக்கும் மேலாக ஏற்பட்ட மின் வெட்டால் பொதுமக்கள் மற்றும் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், கர்ப்பிணி தாய்மார்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர். மின் ஊழியர்கள் இரவு 11 மணிக்கு மேல் மின் இணைப்பை சரி செய்தனர்.
பழனி முருகன் கோவிலில் தங்க தேரோட்டம் நேற்று(மார்ச்.28) நடைபெற்றது. சின்னகுமாரர் தங்கத்தேரில் எழுந்தருளி மலை மீது வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பங்குனி உத்திர திருவிழாவில் கடந்த சில நாட்களாக தங்கத் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. நீண்ட நாட்களுக்குப் பிறகு தங்க தேரோட்டம் நடைபெறுவதால் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை இழுத்தனர்.
இரும்பாளியை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி, இவருக்கு சொந்தமான வைக்கோல் போரில் நேற்று மார்ச் 28-ந்தேதி மாலை திடிரென தீ பிடித்தது. பின்னர் மலமலவென பிடித்த தீயினால் வைக்கோல் போர் கொழுந்துவிட்டு எரிய தொடங்கியது. இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் உடனடியாக சிப்காட் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினா் போராடி தீயை அணைத்தனர்
கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் உள்ள நீச்சல் குளத்தில் வருகிற (ஏப்ரல்) 2-ந் தேதி காலை 6.30 மணி முதல் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் நீச்சல் பயிற்சி நடத்தப்பட உள்ளது. இதில் 12 நாட்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு, சான்றிதழ்கள் வழங்கப்படும். பயிற்சிக்கு ஆதார் கார்டு கட்டாயம் கொண்டு வர வேண்டும் என மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் மகேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை அசோக்நகரில் உள்ள தனியார் பள்ளிக்கு தொலைபேசி வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதை தொடர்ந்து, மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடத்தியதில் வெடிகுண்டு மிரட்டல் வதந்தி என தெரிய வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபமாகவே பள்ளி மற்றும் கோயில்களில் வெடிகுண்டு வைத்திருப்பதாக வதந்தி செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.
மதுரை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட 41 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இந்நிலையில் நேற்று நடந்த வேட்புமனு பரிசீலனையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, அ.தி.மு.க., பாஜக, நாம் தமிழர் ஆகிய முக்கிய கட்சி வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என 21 பேரின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. மேலும் உரிய ஆவணம் இல்லாதது, முறையாக படிவம் பூர்த்தி செய்யாத 20 பேரின் வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
மக்களவை தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு, திருநெல்வேலியில் தேர்தல் பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து, தேர்தல் தொடர்பான புகார்களுக்கு சோனாலி பென்ஷோ வயங்கங்கர் 94899 63626, பங்கஜ் நைன் 9489 963739, காசி சுஹைல் அனீஸ் 94899 63627 என்ற எண்ணை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் நேற்று(மார்ச் 28) தெரிவித்துள்ளது.
விழுப்புரம் மாவட்ட காவல்துறை இன்று (மார்ச் 28) வெளியிட்டுள்ள பத்திரிக்கை செய்தியில், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் தேர்தல் விதிமுறைகள் குறித்து புகார் அளிக்க 8925533710 மற்றும் 8925533810 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். மேலும் தேர்தல் விதிமுறைகள் குறித்து ஏதேனும் சந்தேகம் இருந்தால் மேற்கண்ட என்னை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம், எனக் கூறப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.