Tamilnadu

News March 29, 2024

அந்தியோதயா ரயில் நெல்லையில் இருந்து புறப்படும்

image

நாகர்கோவில் – தாம்பரம் இடையே இயக்கப்படும் அந்தியோதயா ரயில் இன்று(மார்ச் 29) முதல் வருகிற ஏப்ரல் 1ம் தேதி வரை நெல்லையிலிருந்து இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தாம்பரத்தில் இருந்து வரும் இந்த ரயில் நெல்லையுடன் நிறுத்தப்படும். நாகர்கோயிலில் பகுதியில் இரட்டை ரயில் பாதை பணி நடைபெறுவதால் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ரயில் பயணிகள் இதை கவனத்தில் கொள்ள அறிவுறத்தல் .

News March 29, 2024

பாபநாசம்: ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.64 ஆயிரம் பறிமுதல்

image

பாபநாசம் அருகே ரெகுநாதபுரம் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி குழுவினர்கள் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது திருவாரூரை சேர்ந்த சீனிவாசன் மற்றும் அவரது மனைவி கிருத்திகா ஆகியோர் வந்த காரை சோதனை செய்தனர். அப்போது ரூ.64 ஆயிரத்து 680 எடுத்து சென்றது தெரிய வந்தது. இந்த பணத்திற்கு அவர்களிடம், உரிய ஆவணம் இல்லாததால் பறிமுதல் செய்தனர். பின்னர் பணத்தை பாபநாசம் தாசில்தாரிடம் ஒப்படைத்தனர்.

News March 29, 2024

திருச்சியில் புனித வெள்ளி உற்சாகம்

image

திருச்சி பொன்மலை புனித சூசையப்பர் ஆலயம் மற்றும் மேல அம்பிகாபுரம் ஆரோக்கியநாதர் ஆலயம் உள்ளிட்ட திருச்சியில் பிரதான கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று காலை புனித வெள்ளியை முன்னிட்டு சிறப்பு திருப்பலி உள்ளிட்ட சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. திரளான கிறிஸ்தவர்கள் தங்களது பங்கு கோயில்களுக்கு சென்று வழிபாட்டில் பங்கேற்றுள்ளனர்.

News March 29, 2024

ஊதியத்துடன் கூடிய பொது விடுமுறை

image

தமிழகத்தில் 39 தொகுதிகளில் வருகின்ற ஏப்ரல்.19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் அனைவரும் வாக்களித்து தங்களின் ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என தேர்தல் ஆணையம் வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் ஏப்ரல்.19ஆம் தேதி அன்று அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு சம்பளத்துடன் பொது விடுமுறை அளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது

News March 29, 2024

ஆங்கில தேர்வை புறக்கணித்த 754 பேர்

image

கடந்த 26-ந்தேதி தொடங்கி நடைபெற்று வரும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் நேற்று ஆங்கில பாட தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை மதுரை மாவட்டத்தில் உள்ள 488 பள்ளிகளில் பயிலும் 38 ஆயிரத்து 340 மாணவ, மாணவிகள் எழுதினர். தனித்தேர்வர்களாக 474 பேர் தேர்வு எழுதினர். மேலும் 515 மாணவர்கள், 239 மாணவிகள் என மொத்தம் 754 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

News March 29, 2024

ஊதியத்துடன் கூடிய பொது விடுமுறை

image

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தொகுதிகளில் வருகின்ற ஏப்ரல்.19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்தலில் அனைவரும் வாக்களித்து தங்களின் ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என தேர்தல் ஆணையம் வலியுறுத்தி வருகிறது. மேலும் ஏப்ரல்.19ஆம் தேதி அன்று அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு சம்பளத்துடன் பொது விடுமுறை அளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது

News March 29, 2024

ஊதியத்துடன் கூடிய பொது விடுமுறை

image

தமிழகத்தில் 39 தொகுதிகளில் வருகின்ற ஏப்ரல்.19ஆம் தேத நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்தலில் அனைவரும் வாக்களித்து தங்களின் ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என தேர்தல் ஆணையம் வலியுறுத்தி வருகிறது. மேலும் ஏப்ரல்.19ஆம் தேதி அன்று அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு சம்பளத்துடன் பொது விடுமுறை அளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது,

News March 29, 2024

ஊதியத்துடன் கூடிய பொது விடுமுறை

image

தமிழகத்தில் 39 தொகுதிகளில் வருகின்ற ஏப்ரல்.19 அன்று நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் அனைவரும் வாக்களித்து தங்களின் ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என தேர்தல் ஆணையம் வலியுறுத்தி வருகிறது. ஏப்ரல் 19 அன்று அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு சம்பளத்துடன் பொது விடுமுறை அளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது

News March 29, 2024

வெற்றி பெறும் மாணவிகளுக்கு பரிசுத்தொகை 

image

பழனி ஆயக்குடி இலவச பயிற்சி மையத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். தமிழ்நாடு அரசு நடத்தும் போட்டி தேர்வுகளில் வெற்றி பெற்று முதலிடம் பிடிக்கும் தேர்வர்களுக்கு பரிசுத்தொகை,தேர்வு எழுதுபவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் அரசு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

News March 29, 2024

தேர்தல் நடத்தை விதி மீறல்: 150 பேர் மீது வழக்கு

image

ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி தேர்தலில் போட்டியிட அதிமுக வேட்பாளர் மார்ச்.25ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்தார். அப்போது தேர்தல் நடத்தை விதிகளை அதிமுகவினர் மீறியதாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் ஜெயபெருமாள், மாவட்ட அதிமுக செயலர் முனியசாமி உட்பட 150 பேர் மீது போலீசார் நேற்று மதியம் வழக்கு பதிந்தனர்.

error: Content is protected !!