India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தில் பல மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெயில் பாதிவாகியுள்ளது. இந்நிலையில் அடுத்த வாரத்தில் சென்னையில் இயல்பான (அ) அதற்குக் கீழான வெப்ப நிலையே பதிவாகும் என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், 40 முதல் 41 டிகிரி செல்சியஸ் பதிவான இடத்தில் 37, 39 டிகிரி செல்சியஸாக குறையக்கூடும் என தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பல மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெயில் பாதிவாகியுள்ளது. இந்நிலையில் அடுத்த வாரத்தில் சென்னையில் இயல்பான (அ) அதற்குக் கீழான வெப்ப நிலையே பதிவாகும் என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், 40 முதல் 41 டிகிரி செல்சியஸ் பதிவான இடத்தில் 37, 39 டிகிரி செல்சியஸாக குறையக்கூடும் என தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பல மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெயில் பாதிவாகியுள்ளது. இந்நிலையில் அடுத்த வாரத்தில் சென்னையில் இயல்பான (அ) அதற்குக் கீழான வெப்ப நிலையே பதிவாகும் என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், 40 முதல் 41 டிகிரி செல்சியஸ் பதிவான இடத்தில் 37, 39 டிகிரி செல்சியஸாக குறையக்கூடும் என தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பல மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெயில் பாதிவாகியுள்ளது. இந்நிலையில் அடுத்த வாரத்தில் சென்னையில் இயல்பான (அ) அதற்குக் கீழான வெப்ப நிலையே பதிவாகும் என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், 40 முதல் 41 டிகிரி செல்சியஸ் பதிவான இடத்தில் 37, 39 டிகிரி செல்சியஸாக குறையக்கூடும் என தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் ஆதரவாளர்கள் வீட்டில் பணம் மற்றும் பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக திமுகவினர் அளித்த புகாருக்கு திருநெல்வேலி தேர்தல் நடத்தும் அலுவலர் கார்த்திகேயன் நேற்று (ஏப்.10) பதில் அளித்துள்ளார். அதில், பணம் மற்றும் பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகின்றது என தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மக்களவை தொகுதிக்குட்பட்ட கோபி சட்டமன்ற தொகுதியில், 85 வயதுக்கு மேற்பட்ட மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளர் 860 பேருக்கு தபால் ஓட்டு அளிக்கப்பட்டது. இதில் 827 பேர் ஓட்டு பதிவு செய்தனர். 22 பேர் வெளியூர் மற்றும் சிகிச்சைக்கு சென்று விட்டனர். மற்ற 11 பேர் மார்ச் 25ம் தேதி முதல் ஏப்ரல் 8ம் தேதிக்குள் வயது முதிர்வால் இறந்துள்ளனர் என தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தாளவாடி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போலீசார் நேற்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தாளவாடி மரூர் குருபுருன்டி பகுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட மகேந்திரா(26), மாதவசாமி (46), நாகராஜப்பா(35), குருசித்தச்சாரை, வசந்த்(24), மாதப்பா(54), சங்கரப்பா (64) உள்ளிட்ட 39 பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்த ரூ.1.30 லட்சத்தை பறிமுதல் செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்ட தொழிலாளர் உதவிஆணையர் மின்னல்கொடி நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நாளான ஏப்.19ஆம் தேதி தொழில் வர்த்தக நிறுவனங்கள், கடைகள், உணவு விடுதிகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும். இல்லையெனில் நடவடிக்கை எடுக்கப்படும். ஊழியர்கள் 93444 47888, 99408 97894 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம்.
திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர்கள், காவல், தீயணைப்பு துறை ஆகிய துறைகளில் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர்கள் தேர்தலில் தங்களது பங்களிப்பினை அளிக்குமாறு அழைப்பு விடுத்துள்ளார். தேர்தல் பணிக்கு வர விருப்பமுள்ளவர்கள் தங்களது விருப்ப மனுவினை அருகாமையில் உள்ள காவல் நிலையத்தில் சமர்ப்பிக்குமாறும் சந்தேகம் இருப்பின் 9600899330 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று எஸ்பி தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் மக்களவை தேர்தலையொட்டி வாக்குப்பதிவிற்கு முந்தைய நாளான 18 ஆம் தேதி மற்றும் வாக்குப்பதிவு நாளான 19 ஆம் தேதி ஆகிய 2 நாட்களில் தேர்தல் சம்பந்தமான விளம்பரங்களை வெளியிட மாவட்ட ஊடக சான்றளிப்பு மற்றும் ஊடக கண்காணிப்பு குழுவிடம் முறையான முன் அனுமதி பெற்ற பின்னரே வெளியிட வேண்டும் என ஆட்சியர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.