India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மக்களவைத் தேர்தல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வரும் நிலையில், சிவகங்கை மக்களவைத் தொகுதியின் தற்போதைய கள நிலவரம் பற்றி பார்ப்போம். இங்கு கார்த்திக் சிதம்பரம்(காங்), சேவியர்தாஸ்(அதிமுக), தேவநாதன்(பாஜக), எழிலரசி(நாம் தமிழர்) ஆகியோர் களம் காண்கின்றனர். இந்நிலையில், இத்தொகுதியில் 4 முனை போட்டி நிலவுவதால், யாருக்கு மகுடம் சூட்டும். இத்தேர்தல் குறித்து உங்கள் கருத்து என்ன மக்களே?
ஈரோடு மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாவட்ட அலுவலகத்தில் ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் கணேசமூர்த்தி எம்.பி யின் நினைவேந்தல் நிகழ்வு நேற்று நடைபெற்றது. இதற்கு ஈரோடு மாவட்ட தலைவர் சண்முகவேல் தலைமை வகித்தார். மாநில துணை தலைவர் திருமூர்த்தி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கணேசமூர்த்தி எம்.பி யின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
ஜோலார்பேட்டை கிழக்கு ஒன்றியம் பெத்தகல்லுப்பள்ளி ஊராட்சி புத்துக்கோயிலில் நேற்று காங்கிரஸ் கட்சியின் மு.ஊராட்சி மன்ற தலைவர் சீனன் மற்றும் நிர்வாகிகளுடன் ஜோலார்பேட்டை திமுக ஒன்றிய செயலாளர் கவுன்சிலர் க.உமாகன்ரங்கம் பாராளுமன்றத் தேர்தல் குறித்து ஆலோசனை மேற்கொண்டார்கள். உடன் ஒன்றிய பொருளாளர் திருப்பதி, சிவகுமார் கிளை செயலாளர் மணி முத்து ஆகியோர் கலந்து கொண்டனர்.
தேசிய ஜனநாயக கூட்டணியின் திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி பா.ம.க வேட்பாளர் திலகபாமா ஆத்தூர் தொகுதிக்குட்பட்ட பாளையங்கோட்டை பகுதியில் தனது முதல் பிரச்சாரத்தை தொடங்கினார்.அப்போது அவர் சாலை ஓரங்களில் உள்ள கடைகளில் பணியாரம் மற்றும் வடை சுட்டு நூதன முறையில் மாம்பழ சின்னத்திற்கு பொதுமக்களிடையே இன்று வாக்கு சேகரித்தார். உடன் பா.ஜ.க மாவட்ட தலைவர் தனபாலன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் வரும் ஏப்ரல் 19 அன்று நடைபெறுகிறது. வெளியான இறுதி வேட்பாளர் பட்டியலின்படி திமுக வேட்பாளர் கே.என்.அருண் நேரு , அதிமுக வேட்பாளர் சந்திரமோகன், பாஜக வேட்பாளர் ஐ.ஜே.கே நிறுவனர் பாரிவேந்தர், பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் இளங்கோவன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தேன்மொழி என 5 தேசிய/மாநில கட்சி வேட்பாளர் உட்பட 18 சுயேட்சை என மொத்தம் 23 வேட்பாளர் போட்டியிடுகின்றனர்.
பல்லாவரம் அருகே திரிசூலம் லட்சுமணன் நகரைச் சேர்ந்தவர்கள் ராஜகுரு, காயத்ரி தம்பதியர். இவர்களுக்கு பிரணவ் ராஜ் என்ற 1 வயது ஆண் குழந்தை உள்ளது. நேற்று முன்தினம் காயத்ரி வேலைக்கு சென்ற போது ராஜகுரு தனது குழந்தையுடன் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த நிலையில் குழந்தை எதிர்பாராத விதமாக வீட்டில் இருந்த தண்ணீர் வாளியில் விழுந்து மூச்சு திணறி உயிரிழந்தது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தஞ்சை நாடாளுமன்ற தொகுதியில் 12 பேர் போட்டியிடுகின்றனர்.
முரசொலி (தி.மு.க.)
சிவநேசன் (தே.மு.தி.க)
முருகானந்தம் (பா.ஜனதா கட்சி)
ஜெயபால் (பகுஜன் சமாஜ் கட்சி)
ஹிமாயூன் கபீர் (நாம் தமிழர் கட்சி)
பொறி,அர்ஜூன் (சுயே)
எழிலரசன் (சுயே)
கரிகாலசோழன் (சுயே)
சந்தோஷ் (சுயே)
சரவணன் (சுயே)
செந்தில்குமார் (சுயே)
ரெங்கசாமி (சுயே)
ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
சென்னை அம்பத்தூர் பகுதியை சேர்ந்தவர் சேகர்.அவரது மனைவி நித்தியகலா,மகள் தீக்ஷித், மகன் ரித்திக் மற்றும் வனஜா,,கார்த்திக் ஆகியோர் காரில் திருச்செந்தூர் கோவிலுக்கு வந்துள்ளனர். பின்னர் அங்கிருந்து சென்னை திரும்பும் போது பழையகாயல் அருகே கார் எதிர்பாராத விதமாக லாரி மீது மோதியது. இதில் 6 பேர் படுகாயமடைந்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ அண்ணாமலையார் மற்றும் உண்ணாமலை அம்மன் திருக்கோவிலில் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து அதிக அளவில் அண்ணாமலையார் பக்தர்கள் கோவிலுக்கு வருகை தந்துள்ளனர். இதனால் அண்ணாமலையார் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. நீண்ட வரிசையில் காத்திருந்து பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
திருச்சி கிழக்கு தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் 25 நபர்களுடன் சட்ட விரோதமாக ஒன்று கூடி பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தினர். மேலும், அனுமதி பெறாத வாகனங்களில் ஊர்வலமாக சென்று சட்டவிரோதமாக வாக்குகள் சேகரித்ததாக வேட்பாளர் ராஜேஷ், தொகுதி பொறுப்பாளர் வழக்கறிஞர் பிரபு உள்ளிட்ட 25 பேர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.