India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மக்களவை பொது தேர்தலில் மூத்த குடிமக்கள் பார்வை, இயக்க குறைபாடு கொண்டவர்கள்,வாக்களிக்கும் நாளில் பொது போக்குவரத்தை பயன்படுத்த இலவச பஸ் பாஸ் வழங்கப்படும்.போக்குவரத்து வசதி இல்லை என்றால்,அவர்கள் வசிக்கும் இடத்தில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு இலவசமாக அழைத்துச் செல்லவும்,இறக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.தகுதி உள்ள வாக்காளர்கள் இசிஐ ஆப்-ஐ பயன்படுத்த திருச்சி ஆட்சியர் இன்று தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் பாபு போட்டியிடுகிறார். இதனிடையே அதிமுக தலைமை கழகம் சார்பில் மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் இன்று நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கழக அமைப்பு செயலாளர்கள் ஆசைமணி, காந்தி மாவட்ட செயலாளர்கள் பவுன்ராஜ், பாரதிமோகன் ஆகியோர் தேர்தல் பொறுப்பாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
பழனி கோயிலில் பங்குனி உத்திர திருவிழாவின் ஆறாம் நாள் விழா இன்று நடைபெற்று வருகிறது. மலையடிவாரத்தில் பக்தர்கள் முகத்தில் அழகு குத்தி நேர்த்திக் கடன் செலுத்தி முருகனை வழிபட சென்றனர். 5 அடி முதல் 10 அடி வரையிலான வேலை முகத்தில் குத்தி கிரிவலம் சென்றது காண்போரை பரவசத்தில் ஆழ்த்தியது. மேலும் பக்தர்கள் பலரும் காவடி எடுத்து ஆடிப்பாடி முருகனை தரிசனம் செய்தனர்.
போளூர் நகரில் அமைந்துள்ள மிகவும் பிரசித்தி பெற்ற சம்பத்கிரி மலையில் உள்ள சுயம்பு லட்சுமி நரசிம்மர் கோயிலில் இன்று காலை லட்சுமி நரசிம்மர் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை செய்து பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் 940 படிக்கட்டுகளை ஏறி கலந்து கொண்டு சுவாமியை வழிப்பட்டனர்.
பழனி பங்குனி உத்திர திருவிழாவிற்கு வரும் பக்தர்கள் பஞ்சாமிர்தம் தயாரிக்க மலை வாழைப்பழங்களை வாங்குகின்றனர். ஆடலூர், பன்றி மலை, கொடைக்கானல் உள்ளிட்ட இடங்களிலிருந்து 20 டன் மலை வாழைப்பழங்கள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. பக்தர்கள் பலரும் ஆர்வமுடன் மலை வாழைப்பழங்களை வாங்கி செல்கின்றனர். ஒரு பழம் 7 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
தென்காசி,மைப்பாறை அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. விருதுநகரை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் இன்று வெடி விபத்து ஏற்பட்டது.ஆலைக்கு அருகே அறுவடை செய்த மக்காச்சோளத்தில் தீப்பிடித்து பரவி வெடி விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தகவலின் பேரின் தீயணைப்பு வீரர்களின் உதவியோடு தீயை அணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
கூட்டணியை நம்பி அ.தி.மு.க. இல்லை; கூட்டணி இல்லையென்றாலும் சொந்தக்காலில் நிற்போம். இந்தியாவில் தமிழகம் முதன்மை மாநிலமாக இருப்பதற்கு அ.தி.மு.க. முக்கிய காரணம்’ என்று சேலத்தில் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி இன்று பேட்டியளித்தார். உடன் முன்னாள் அமைச்சர் செம்மலை மற்றும் அதிமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
வாணியம்பாடி ஆம்பூர்பேட்டை சேர்ந்தவர் நிஷாந்த் (20) இவர் காட்பாடியில் வேலை செய்து விட்டு இன்று இரவு தனது வீட்டிற்கு செல்ல வாணியம்பாடி ரயில் நிலையத்தில் நிற்காமல் செல்லும் மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்தார். வாணியம்பாடி ரயில் நிலையம் கடந்து மெதுவாக சென்ற போது ஓடும் ரயிலில் இறங்க முயன்றார். அப்போது தவறி விழந்து அதே ரயிலில் அடிபட்டு பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
தூத்துக்குடி மக்களவை தொகுதிக்கு திமுக சார்பில் கனிமொழி எம்பி போட்டியிடுகிறார். நாளை (மார்ச் 24) தனது முதல் பிரச்சாரத்தை கனிமொழி எம்பி தொடங்க உள்ளதாக அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தார். மேலும், கலைஞர் அரங்கத்தில் உள்ள கருணாநிதியின் சிலைக்கு மாலை அணிவித்து பிரச்சாரத்தை தொடங்குவார் என்றும் அவர் தெரிவித்தார்.
மயிலாடுதுறையில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பாக சிறப்பு கருத்தரங்கம் இன்று நடைபெற்றது. மேலும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்முறைகளை தடுத்து நிறுத்திட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி விவாதம் நடைபெற்றது. இதில் ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்றனர்.
Sorry, no posts matched your criteria.