India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நத்தம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக தனிப்படை போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் நத்தம் பகுதியில் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது நத்தம், செட்டிகுளம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த நத்தத்தை சேர்ந்த செல்வபிரகாஷ்(23), அஜித்மீரான்(28), உட்பட 9 பேர் கைது, 1 கிலோ கஞ்சா, 8 செல்போன்கள், 1 எடை மெஷின் பறிமுதல் செய்து நத்தம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிமுகம் செய்துள்ள ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர், ஆம்பூர், ஜோலார்பேட்டை, நாட்றம்பள்ளி, துத்திப்பட்டு, ஆகிய இடங்களில் இன்று (ஆகஸ்ட்-21) நடக்க இருக்கிறது. இந்த முகாமில், பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களின் குறைகளை மனுவாக வழங்கலாம். மகளிர் உதவித்தொகைக்கு இங்கேய விண்ணப்பிக்கலாம். உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க
முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிமுகம் செய்துள்ள ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை, கள்ளக்குறிச்சி, ரிஷிவந்தியம், திருக்கோவிலூர், சின்ன சேலம், சங்கராபுரம் ஆகிய இடங்களில் இன்று (ஆகஸ்ட்-21) நடக்கிறது. இந்த முகாமில், பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களின் குறைகளை மனுவாக வழங்கலாம். குறிப்பாக, மகளிர் உதவித்தொகை பெற முடியாத பெண்கள் முகாமில் விண்ணப்பிக்கலாம். ஷேர்
குன்றத்தூர், சேக்கிழார் நகரைச் சேர்ந்த 76 வயதான நடராஜன், நேற்று தனது பேரப்பிள்ளைகளை அரசுப் பள்ளியில் விட்டுவிட்டு பேருந்து நிலையம் நோக்கிச் சென்றபோது மயங்கி விழுந்தார். சம்பவ இடத்திலேயே உயிரிழந்த அவரது உடலை, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர். இது குறித்து குன்றத்தூர் போலீஸார் மேலும் விசாரித்து வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் இன்று (ஆகஸ்ட் 21) நடைபெறும் இடங்கள் அதன் விவரம் மேலே உள்ள படத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. இம்முகாமில் மகளிர் உரிமைத் தொகை, முதியோர் உதவித்தொகை, வாரிசு, வருமானம், இருப்பிடம், சாதி, பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களுக்கு மனு அளித்து பொதுமக்கள் பயன்பெறலாம். மேலும் இந்த முகாமில் திரளான பொதுமக்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
நாமக்கலில் இருந்து வெள்ளிக்கிழமை 22/8/2025 காலை 6:15 மணிக்கு பெங்களூரூ, ஹூப்ளி, பெலகாவி, மிரஜ், கல்யாண், புனே, சூரத், வதோதரா, அகமதாபாத், அபூ ரோடு, ஜோத்பூர், பிகானீர், சூரத்கர், ஶ்ரீ கங்கா நகர் போன்ற பகுதிகளுக்கு செல்ல 22498 திருச்சி – ஶ்ரீ கங்கா நகர் ஹம்சஃபார் ரயில் ரயிலில் டிக்கெட்டுகள் உள்ளன. தேவைப்படுவோர் விரைவாக முன்பதிவு செய்து பயணிக்கலாம்.
“சேலம் மாநகரில் அரசியல் கட்சிகள், சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம், ஊர்வலம், உண்ணாவிரதம், பொதுக்கூட்டம் போன்றவற்றை நடத்துவதற்கு சேலம் மாநகர போலீஸ் கமிஷனரிடம் அனுமதி பெற்ற பின்னரே நடத்த வேண்டும். குறைந்தபட்சம் 5 நாட்களுக்கு முன்பு விண்ணப்பிக்க வேண்டும். குறிப்பிட்ட கால அளவுக்கு பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படமாட்டாது”- மாநகர போலீஸ் கமிஷனர் அனில்குமார் கிரி தெரிவிப்பு.
மாவட்ட, மத்திய கூட்டுறவு வங்கிகள், கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்கள் நேரடியாக நிரப்பப்பட உள்ளன. இத்தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வரும் ஆக.,22-ம் தேதி முதல் சிறப்பு கட்டணமில்லா பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. மேலும் விவரங்களுக்கு 0431-2413510 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் சரவணன் அறிவித்துள்ளார். இத்தகவலை SHARE பண்ணுங்க..
நாகை மாவட்ட காவல் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று (ஆக.20) நடைப்பெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்ரண்ட் சு.செல்வகுமார் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் பல்வேறு புகார்கள் தொடர்பாக 18 மனுக்களை பெற்ற அவர், விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று (ஆக.20) இரவு 10 மணி முதல் இன்று (ஆக.21) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அலுவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல் துறை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தேவையுள்ளவர்கள் புதுக்கோட்டை மாவட்ட காவலர்களை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.