Tamilnadu

News April 1, 2024

திருப்பத்தூர்: சாராயம் கடத்தியவர் கைது

image

திருப்பத்தூர் டவுன் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது திருப்பத்தூர் புதுப்பேட்டை மெயின் ரோட்டில், மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அவர் திருப்பத்தூர் அருகே கோனேரிக்குப்பத்தை சேர்ந்த தேவராஜ் (47) என்பதும், சாராயம் கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து தேவராஜை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 100 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

News April 1, 2024

தி.மலையில் மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி

image

தி.மலை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மின்னணு வாக்குபதிவு இயந்திர பாதுகாப்பு கிடங்கினை இன்று அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் & போட்டியிடும் வேட்பாளர்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் அவர்களால் திறக்கப்பட்டு, தி.மலை & ஆரணி பாராளுமன்ற தொகுதிகளுக்கு கூடுதலாக மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணியினை தொடங்கி வைத்து ஆய்வு செய்தார்.

News April 1, 2024

திருப்பூர் அருகே விற்பனை அதிகரிப்பு

image

உடுமலைப் பகுதியில் தற்பொழுது வெயிலின் தாக்கம் அதிகரித்ததால் மக்கள் வெப்பத்தை தாக்கு பிடிக்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில பஸ் ஸ்டாண்ட், ரயில்வே கேட், தளி ரோடு ,தாராபுரம் சாலை பகுதிகளில் நுங்கு விற்பனை தீவிரம் அடைந்துள்ளது ஒரு நுங்கு பத்து ரூபாய்க்கும், பதநீர் ஒரு டம்ளர் 25 ரூபாய்க்கும் விற்பனை ஆனாலும் விலை ஏற்றத்தை பொருட்படுத்தாமல் மக்கள் அதிக அளவு வாங்கி செல்கின்றனர்.

News April 1, 2024

திருச்சியில் எம்.எல்.ஏ அறிக்கை!

image

திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ இனிகோ இருதய ராஜ் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், திமுக பிரச்சாரம் செய்யும் இடங்களில் பொதுமக்கள் சிறப்பு வரவேற்பு அளிப்பதாக கூறியுள்ளார். மேலும் 2.73 லட்சம் உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் புதுமைப்பெண் திட்டமும், வெளிநாட்டு முதலீடு இருக்கும் மூலம் 30 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு உருவாகி, அதன் வெளிப்பாடு இந்த வரவேற்பு என்றார்.

News April 1, 2024

தர்மபுரியில் அலுவலர் ஆய்வு

image

தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் பதிவாகும் வாக்கு பெட்டி இயந்திரங்களை பாதுகாப்பாக வைக்கும் குரும்பட்டி அடுத்த செட்டிக்கரை அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தை ஏப்ரல் 1 ஆம் தேதி தர்மபுரி மாவட்ட தேர்தல் அதிகாரியும் ,மாவட்ட ஆட்சியருமான சாந்தி பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் துறை சார்ந்த அதிகாரிகள் இருந்தனர்.

News April 1, 2024

முன்னாள் எம்பிக்கு முக்கிய பொறுப்பு

image

திருநெல்வேலி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்பி ராமசுப்புக்கு மாநில காங்கிரஸ் தலைமை முக்கிய கூடுதல் பொறுப்பை வழங்கி உள்ளது. இவர் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியின் கட்சி தேர்தல் பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை மாநில தலைவர் செல்வபெருந்தகை எம்எல்ஏ அறிவித்துள்ளார். இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.

News April 1, 2024

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

image

நாமக்கல் மாவட்டத்தில் மக்களவைத் தேர்தல் – 2024 முன்னிட்டு, 6 சட்டமன்ற தொகுதிகளில் 1,628 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதனை இன்று மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் உமா அவர்கள் நாமக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திர பாதுகாப்பு அறையினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

News April 1, 2024

திருச்சியில் 2ஆம் கட்ட குலுக்கல் பணி தொடக்கம்

image

நாடாளுமன்றத் தேர்தல் 2024 முன்னிட்டு, திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் பிரதீப் குமார் மற்றும் திருச்சி பாராளுமன்ற தேர்தல் பார்வையாளர் தினேஷ்குமார் ஆகியோர் இன்று அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில், 2ம் கட்டமாக வாக்குப்பதிவு இயந்திரம் அனுப்புவதற்காக குலுக்கல் முறையில் தேர்வு செய்யும் பணியை தொடங்கி வைத்தனர்.

News April 1, 2024

தரங்கம்பாடி அருகே அதிமுகவில் இணைந்த நிர்வாகிகள்

image

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா பூதனூரில் உள்ள அதிமுக மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான பவுன்ராஜ் இல்லத்தில், தரங்கம்பாடி பேரூராட்சி பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் இன்று அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். அவர்களுக்கு அதிமுக சார்பில் சால்வை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

News April 1, 2024

கடலூர் அருகே மருத்துவ பரிசோதனை

image

கடலூரில் கடந்த இரண்டு நாட்களாக முதுநகர் வஸந்தராயன் பாளையம் பகுதியில் இருந்த குப்பை கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டு புகை மண்டலமாக காட்சியளித்தது. இதனால் அந்த பகுதி மக்கள் பாதிப்பு அடைந்தனர். இதனை தொடர்ந்து அந்த பகுதியில் மாநகராட்சி சார்பில் பொதுமக்களுக்கு சுவாச பிரச்சனை, கண் எரிச்சல் போன்று வேறு ஏதேனும் உடல் உபாதைகள் உள்ளனவா என மருத்துவ குழு பரிசோதனை செய்தனர்.

error: Content is protected !!