Tamilnadu

News August 21, 2025

பொதுமக்களுக்கு போலீஸ் சூப்ரண்ட் உறுதி

image

நாகை மாவட்ட காவல் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று (ஆக.20) நடைப்பெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்ரண்ட் சு.செல்வகுமார் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் பல்வேறு புகார்கள் தொடர்பாக 18 மனுக்களை பெற்ற அவர், விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

News August 21, 2025

புதுக்கோட்டை: இரவு ரோந்து காவலர்கள் விபரம் 

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று (ஆக.20) இரவு 10 மணி முதல் இன்று (ஆக.21) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அலுவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல் துறை  மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தேவையுள்ளவர்கள் புதுக்கோட்டை மாவட்ட காவலர்களை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.

News August 21, 2025

மதுரையில் ஆகஸ்ட் 22 வேலைவாய்ப்பு முகாம்

image

மதுரை மாவட்டம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஆகஸ்ட் 22 காலை 10:00 மணிக்கு வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதில் முன்னணி நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன. பத்தாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு முடித்தோர் வரை பங்கேற்கலாம். வெளிநாடுகளுக்கும் வேலை தரும் நிறுவனங்களுக்கும் தங்கள் சுய விவரங்களை WWW.TNPRIVATEJOBS.TN.GOV.IN என்ற இணைய முகவரியில் பதிவேற்றம் செய்யலாம்.

News August 21, 2025

தென்காசி மாவட்டத்தில் உயர்வுக்கு படி நிகழ்வு

image

தென்காசி மாவட்டத்தில் 12ம் வகுப்பு முடித்த, துணைத்தேர்வில் தேர்வில் தேர்வில் தேர்ச்சி பெற்ற மற்றும் தேர்ச்சி பெறாத மணவர்களை உயர்கல்வி நிலையங்களில் சேர்ப்பதற்கான உயர்வுக்கு படி நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. தென்காசி கோட்டத்தில் இ.சி.ஈ அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் (22.08.2025) (03.09.2025) தேதிகளிலும், சங்கரன்கோவில் கோட்டத்தில் ஏ.வி.கே பள்ளியில்28.08.2025, 09.09.2025 நடைபெறுகிறது.

News August 21, 2025

ரோந்து செல்லும் காவலர்கள் விவரம் வெளியீடு

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று(ஆக.20) இரவு 11 மணி முதல் இன்று(ஆக.21) காலை 6 மணி வரை ரோந்து பணி மேற்கொள்ள உள்ள போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல் துறை வெளியிட்டுள்ளது. இதில் மயிலாடுதுறை, குத்தாலம், மணல்மேடு, செம்பனார்கோயில், பொறையார், சீர்காழி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ரோந்து செல்லும் போலீசாரின் தொலைபேசி எண்களுக்கு தொடர்பு கொண்டு பொதுமக்கள் குற்ற நடவடிக்கைகள் குறித்து தகவல் தெரிவிக்கலாம்.

News August 21, 2025

ஆக.22, 26-ல் சில ரயில்கள் இயக்கத்தில் மாற்றம்!

image

தண்டவாள புதுப்பித்தல் பணிகள் காரணமாக, ஆக.22, 26-ல் கண்ணூர்-கோவை எக்ஸ்பிரஸ் ரயில் பாலக்காடு வரை மட்டுமே இயக்கப்படும். பாலக்காடு முதல் கோவை வரை இயக்கப்படாது. கோவை- மதுரை எக்ஸ்பிரஸ் ரயில், பொள்ளாச்சியில் இருந்து புறப்படும். போத்தனூர்- மேட்டுப்பாளையம் ரயில் கோவையில் இருந்து புறப்படும் என்று சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.

News August 21, 2025

தூத்துக்குடி இன்று இரவு ரோந்து போலீஸ் விவரம்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்படி, இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விவரங்களை கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. அவசர காலங்களில் பொதுமக்கள் 100 என்ற எண்ணையும் தொடர்பு கொள்ளலாம்.

News August 21, 2025

விழுப்புரம் அருகே டிஎஸ்பி தலைமையில் ஆலோசனை

image

விழுப்புரம் மாவட்டம் கோட்டகுப்பத்தில் விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் ஊர்வலம் நடத்துவது தொடர்பாக டிஎஸ்பி தலைமையில் ஆலோசனை இன்று (ஆக, 20) கூட்டம் நடைபெற்றது. இதில் வானூர் பகுதி அரசியல் பிரமுகர்கள் மற்றும் விழா குழுவினர் பங்கேற்றனர். அரசின் நெறிமுறைகளை பின்பற்றுவது குறித்து விவாதிக்கப்பட்டது. சண்டைகள் மற்றும் பாதிப்புகள் வராமல் தடுக்க ஆலோசனை நடைபெற்றது.

News August 21, 2025

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

திருவாரூர் மாவட்டம் தமிழ்நாடு கூட்டுறவு துறையால் அறிவிக்கப்பட்டுள்ள உதவியாளர் இளநிலை உதவியாளர் 2513 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்துள்ளவர்கள் பயன்பெறும் வகையில் திருவாரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தன்னார்வ பயிலும் வட்டம் மூலம் இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது. கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் குடும்ப அட்டை, ஆதார் நகல் கொண்டு நேரில் அணுகி பயன் பெறலாம் என தெரிவித்துள்ளார்.

News August 21, 2025

கடன் உதவி வழங்கிய மாவட்ட ஆட்சியர்

image

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று முன்னாள் ராணுவ வீரர்களுக்கு 30 சதவீதம் மானியத்தில் கடன் உதவி வழங்கும் விழா நடைபெற்றது. மாவட்ட நாச்சியார் தினேஷ்குமார் தலைமையில் நடைபெற்றது. வங்கியை ஊழியர்கள் முன்னாள் ராணுவ வீரர்கள் கலந்து கொண்டனர். ரூ.54,80,700, காசோலையை மாவட்ட ஆட்சியர் ஓய்வு பெற்ற முன்னாள் ராணுவ வீரர்களுக்கு வழங்கினார்.

error: Content is protected !!