India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வேலூர் மாவட்டம் புதிய பேருந்து நிலையம், பைபாஸ் சாலை, தோட்டப்பாளையம், பழைய பேருந்து நிலையம், டவுன் பஜார், சலவன்பேட்டை,ஆபீசர்ஸ் லைன், அப்துல்லாபுரம, பிஷப் டேவிட் நகர், கஸ்பா, ஊசூர், கொணவட்டம்,சேண்பாக்கம், விருதம்பட்டு, செங்காநத்தம் ரோடு, கொசப்பேட்டை, ஓல்டு டவுன், சார்பனாமேடு, பிடிசி சாலை, வல்லண்டராமம், விரிஞ்சிபுரம், இறைவன்காடு, செதுவாலை, கந்தனேரி, அன்பூண்டி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.
வங்கியில் இருந்து பேசுவதாகக் கூறி, பிக்சட் டெபாசிட் மற்றும் கடன்கள் தொடர்பான OTP விவரங்களைக் கேட்கும் மோசடி அழைப்புகள் அதிகரித்து வருவதாகத் தெரிவித்துள்ளார். அறிமுகமில்லாத எண்களில் இருந்து வரும் இத்தகைய அழைப்புகளுக்கு எந்த தகவலையும் அளிக்க வேண்டாம் என்றும், உடனடியாக அழைப்பை துண்டித்துவிட்டு, அருகில் உள்ள வங்கிக்கு நேரடியாக சென்று உறுதி செய்ய வேண்டும் என்றும் நெல்லை SP சிலம்பரசன் எச்சரித்துள்ளார்.
தர்மபுரி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டங்களுக்கு, விநாயகர் சிலை நிறுவ விரும்பும் அமைப்புகள் ஆகஸ்ட் 27, 2025 அன்று, முன்கூட்டியே வருவாய் கோட்டாட்சியரிடம் விண்ணப்பிக்க வேண்டும். ஊர்வலத்தின் போது சட்டம், ஒழுங்கை உறுதி செய்ய காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் உடன் இருப்பார்கள் என மாவட்ட ஆட்சியர் சதீஷ் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் இன்று (ஆகஸ்ட் 21) நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் அரசு நகர் சாய் மனோன்மணி திருமண மண்டபத்திலும், திருப்பெரும்புதூர் வட்டம் திருமங்கலம் ஊராட்சி குரு மஹாலிலும், உத்திரமேரூர் வட்டம் திருமுக்கூடல் R.R.K திருமண மஹால்,
குன்றத்தூர் நகர்ப்புற பஞ்சாயத்துக்கு மலையம்பாக்கம் வி.எம்.ஆர் திருமண மஹாலிலும் நடைபெற உள்ளது.
நத்தம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக தனிப்படை போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் நத்தம் பகுதியில் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது நத்தம், செட்டிகுளம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த நத்தத்தை சேர்ந்த செல்வபிரகாஷ்(23), அஜித்மீரான்(28), உட்பட 9 பேர் கைது, 1 கிலோ கஞ்சா, 8 செல்போன்கள், 1 எடை மெஷின் பறிமுதல் செய்து நத்தம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிமுகம் செய்துள்ள ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர், ஆம்பூர், ஜோலார்பேட்டை, நாட்றம்பள்ளி, துத்திப்பட்டு, ஆகிய இடங்களில் இன்று (ஆகஸ்ட்-21) நடக்க இருக்கிறது. இந்த முகாமில், பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களின் குறைகளை மனுவாக வழங்கலாம். மகளிர் உதவித்தொகைக்கு இங்கேய விண்ணப்பிக்கலாம். உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க
முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிமுகம் செய்துள்ள ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை, கள்ளக்குறிச்சி, ரிஷிவந்தியம், திருக்கோவிலூர், சின்ன சேலம், சங்கராபுரம் ஆகிய இடங்களில் இன்று (ஆகஸ்ட்-21) நடக்கிறது. இந்த முகாமில், பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களின் குறைகளை மனுவாக வழங்கலாம். குறிப்பாக, மகளிர் உதவித்தொகை பெற முடியாத பெண்கள் முகாமில் விண்ணப்பிக்கலாம். ஷேர்
குன்றத்தூர், சேக்கிழார் நகரைச் சேர்ந்த 76 வயதான நடராஜன், நேற்று தனது பேரப்பிள்ளைகளை அரசுப் பள்ளியில் விட்டுவிட்டு பேருந்து நிலையம் நோக்கிச் சென்றபோது மயங்கி விழுந்தார். சம்பவ இடத்திலேயே உயிரிழந்த அவரது உடலை, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர். இது குறித்து குன்றத்தூர் போலீஸார் மேலும் விசாரித்து வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் இன்று (ஆகஸ்ட் 21) நடைபெறும் இடங்கள் அதன் விவரம் மேலே உள்ள படத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. இம்முகாமில் மகளிர் உரிமைத் தொகை, முதியோர் உதவித்தொகை, வாரிசு, வருமானம், இருப்பிடம், சாதி, பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களுக்கு மனு அளித்து பொதுமக்கள் பயன்பெறலாம். மேலும் இந்த முகாமில் திரளான பொதுமக்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
நாமக்கலில் இருந்து வெள்ளிக்கிழமை 22/8/2025 காலை 6:15 மணிக்கு பெங்களூரூ, ஹூப்ளி, பெலகாவி, மிரஜ், கல்யாண், புனே, சூரத், வதோதரா, அகமதாபாத், அபூ ரோடு, ஜோத்பூர், பிகானீர், சூரத்கர், ஶ்ரீ கங்கா நகர் போன்ற பகுதிகளுக்கு செல்ல 22498 திருச்சி – ஶ்ரீ கங்கா நகர் ஹம்சஃபார் ரயில் ரயிலில் டிக்கெட்டுகள் உள்ளன. தேவைப்படுவோர் விரைவாக முன்பதிவு செய்து பயணிக்கலாம்.
Sorry, no posts matched your criteria.