India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரை அம்பிகா கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில், இயக்குநர் அமீர் வாக்காளர்களுடன் வரிசையில் நின்று வாக்களித்தார். வாக்களித்த பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய இயக்குநர் அமீர், ‘ஒரு நாட்டின் தலையெழுத்தை நிர்ணயிப்பது வாக்கு தான். வாக்களிப்பது ஒவ்வொரு வாக்காளர்களின் கடமை. அந்த வகையில் என்னுடன் வாக்கை நான் செலுத்தி விட்டேன்’ என்றார்.
திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் இன்று காலை முதல் நடைபெற்ற வந்த வாக்குப்பதிவு நிறைவுபெற்றது. இதனை அடுத்து திருச்சி வெஸ்ட்ரி பள்ளியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டுவரப்பட்டு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சீல் வைக்கும் பணிகள் தொடங்கியது. வாக்குப்பதிவு மையங்களின் மேற்பார்வையாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் இந்த பணிகளில் ஈடுபட்டனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், வரும் 21ம் தேதி மகாவீர் ஜெயந்தியும், வரும் மே 1ம் தேதி மே தினமும் கடைபிடிக்கப்படுகிறது.
இதனையொட்டி டாஸ்மாக் மதுபான கடைகள், டாஸ்மாக் பார்கள் மற்றும் தனியார் மதுபான கடைகள், மூடப்பட வேண்டும். அன்றயை தினங்களில் மதுபானம் விற்பனை செய்வது தெரிந்தால் டாஸ்மாக் மதுபான கடைகளில் மேற்பார்வையார்கள், விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்றைய தினம் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற்றது. அதன்படி ஒட்டுமொத்தமாக வடசென்னை தொகுதியில் 69.26% வாக்குகள் பதிவாகியுள்ளது. மத்திய சென்னை தொகுதி 67.35% மற்றும் தென்சென்னை தொகுதி 67.82 % வாக்குகள் பதிவுடன் கடைசி இடங்களை பிடித்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பாராளுமன்றம் தேர்தல் ஆனது ஏழு மணி நிலவரப்படி 72.99 சதவீதம் வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது. இன்று காலை 6 மணிக்கு துவங்கிய நிலையில் பல்வேறு கட்சி தலைவர்கள் தங்களின் வாக்குகளை பதிவு செய்து வந்தனர். பொதுமக்களும் ஆர்வத்துடன் தங்களின் ஜனநாயக கடமையான ஆற்றுவதற்காக வாக்களித்து வந்த நிலையில் இன்று மாலை 6 மணி அளவில் நிறைவு பெற்றது.
நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்றைய தினம் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற்றது. 6:00 மணிக்கு முன்னதாக வந்த வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்று வந்த நிலையில் ஒட்டுமொத்தமாக தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் 75.44% வாக்குப்பதிவு நடைபெற்றதாக தேர்தல் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்றைய தினம் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற்றது. 6:00 மணிக்கு முன்னதாக வந்த வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்று வந்த நிலையில் ஒட்டுமொத்தமாக கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதியில் 75.67% வாக்குப்பதிவு நடைபெற்றதாக தேர்தல் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் பொதுத் தேர்தல் 2024 இன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை 73 % வாக்குகள் பதிவாகியுள்ளது பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட குளித்தலை, லால்குடி, முசிறி, மணச்சநல்லூர், துறையூர் (தனி) ,பெரம்பலூர் (தனி), வாக்கிய பகுதிகளிலும் வாக்குப்பதிவான வாக்கு பெட்டிகள் தேர்தல் அலுவலர்கள், காவல்துறை பாதுகாப்புடன் வாக்கு என்னும் மையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டனர்.
ஈரோடு மாவட்டத்தில் இன்று மாலை 6 மணியுடன் பல்வேறு பகுதிகளில் வாக்கு பதிவு நிறைவு பெற்றது. இந்நிலையில், ஈரோடு மாவட்டம், அம்மாபேட்டை அடுத்த ஊமாரெட்டியூர் வாக்கு சாவடி எண் 28ல் 6 மணிக்கு முன்னர் 70க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வரிசையில் காத்திருந்தனர். இவர்களுக்கு வாக்குச்சாவடி தேர்தல் நடத்தும் அலுவலர் டோக்கன் வழங்கி வாக்களிக்க அனுமதியளித்தார்.
நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்றைய தினம் காலை ஆறு மணி முதல் நடைபெற்றது. தொடர்ந்து 6:00 மணிக்கு உள்ளாக வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்று வந்த நிலையில் ஒட்டுமொத்தமாக திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் 72.02% வாக்குப்பதிவு நடைபெற்றதாக தேர்தல் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.