India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணாமாக தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் மிதமான முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, வேலூர் மாவட்டத்தில் (இரவு 8.30 வரை) இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணாமாக தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி திருவள்ளூர் மாவட்டத்தில் இரவு 8.30 வரை இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணாமாக தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் மிதமான முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நாமக்கல் மாவட்டத்தில் (இரவு 8.30 வரை ) இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறை மூலம் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கென தனித்தனியே பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டு வரப்படுகிறது. அதன்படி செங்கல்பட்டு, அரசு கலைக் கல்லூரியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு வரும் 24, 26ஆம் ஆகிய தேதிகளில் போட்டிகள் தொடங்கப்பட உள்ளன. இதில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கலெக்டர் அருண்ராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணாமாக தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் மிதமான முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி ராணிப்பேட்டை மாவட்டத்தில் (இரவு 8.30 வரை ) இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வரும் ஜூலை 10ஆம் தேதி நடைபெற உள்ளது. இடைத்தேர்தலை முன்னிட்டு, விழுப்புரம் மாவட்டம் முழுவதும் ஜூலை 8,9,10 மற்றும் 13ஆம் தேதிகளில் அரசு டாஸ்மாக் மதுபான கடைகள், மதுபான கூடங்கள் மற்றும் தனியார் மதுபான கூடங்களை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
புதுச்சேரி அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மாநில செயலாளர் அன்பழகன், புதுச்சேரியில் ரங்கசாமிக்கு எதிராக ஆளுங்கட்சி எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கி உள்ளதால் புதுச்சேரியில் அசாதாரண சூழ்நிலை உருவாகி உள்ளது. இதனால் எந்த மக்கள் நல திட்டங்களையும் நிறைவேற்ற முடியாது. எனவே ரங்கசாமி தானாக முன்வந்து ஆட்சியை கலைத்துவிட்டு தேர்தலை சந்திக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
தென்காசி மாவட்டம் தனியார் வங்கி கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் இணைந்து இலத்தூரில் உள்ள அலுவலகத்தில் சுயதொழில் தொடங்க ஆர்வமுள்ள தென்காசி மாவட்ட ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இலவச செல்போன் பழுது நீக்குதல் பயிற்சி வருகிற ஜூலை 11ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. இவர்களுக்கு மத்திய அரசு சான்றிதழ் உடன் இலவச தொழில் பயிற்சி வழங்கவுள்ளது.
புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கி உள்ள ஆளும் கட்சி எம்எல்ஏக்கள் டெல்லியில் முகாமிட்டு பாஜக தலைவர்களை சந்தித்து ரங்கசாமி மீது புகாரளித்து வருகின்றனர். இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த ரங்கசாமி பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் அவர்களது கட்சித் தலைவர்களை சந்திப்பது அவருடைய விருப்பம் என்றும் நான் ஒருபோதும் கூட்டணி தர்மத்தை மீறவில்லை என்றார்.
விழுப்புரத்தில் தமிழக மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக துஷ்பிரயோகம் நடைபெற்று வருகிறது. தேர்தல் ஆணையம் இதை கண்டும் காணாமல் இருக்கிறது. தமிழ்நாடு அமைச்சர்களின் ஒட்டுமொத்த செயல்பாடுகளும் விக்கிரவாண்டிக்கு மாற்றி இருப்பதாகவே தெரிகிறது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலை கவலைக்கிடமாக உள்ளதாக குற்றம்சாட்டினார்.
Sorry, no posts matched your criteria.