India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள கிராமப்புறங்களில் நாட்டுக்கோழி வளர்ப்பதில் ஆர்வம் கொண்ட பயனாளிகளுக்கு மானிய அடிப்படையில் நாட்டுக் கோழிகள் மற்றும் அதற்கான சலுகைகள் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் வருகின்ற ஜூலை 10ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தகவல் தெரிவித்துள்ளார்.
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணாமாக தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கரூர் மாவட்டத்தில் இரவு 8.30 வரை இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நீட் தேர்வுக்கு எதிராக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் விஜய் நேற்று பேசியிருந்தது அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாக மாறி உள்ளது. இந்நிலையில் அவரது நீட் எதிர்ப்பிற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மதுரை மாநகரில் தமிழக வெற்றிக்கழகத்தினர் பல்வேறு இடங்களில் “நீட் தேர்வு மாநில உரிமைக்கு எதிரானது” என்ற வாசகத்துடன் போஸ்டர் ஒட்டியுள்ளது பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணி புரியும் மருத்துவ அலுவலர்கள் மற்றும் வழிகாட்டி செவிலியர்களுக்கான தாய்ச்சேய் நலம் பராமரிப்பு பற்றிய, ஒரு நாள் பயிற்சி முகாமை தொடங்கி வைத்து கருத்துரை வழங்கினார்கள். உதவி ஆட்சியர் ஆயுஷ் குப்தா ஆகியோர் உடனிருந்தனர்.
வேலூர் சத்துவாச்சாரி பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (89) (ஓய்வுபெற்ற துணை கலெக்டர்). இவர் இன்று (ஜூலை 4) ஓய்வூதியம் பெறுவதற்காக உயிர்வாழ் சான்றிதழ் புதுப்பிக்கும் பணிக்காக கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அப்போது திடீரென மயங்கி கீழே விழுந்து உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த சத்துவாச்சாரி போலீசார் இறந்தவரின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.
தென்காசி கலெக்டர் கமல்கிஷோர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில் இம்மாவட்டத்தில் பொதுப்பணி துறை (ம) ஊரக வளர்ச்சி துறை கட்டுப்பாட்டில் உள்ள ஊரணி, குளம், கண்மாய்களில் விவசாய நிலங்களுக்கு தேவைப்படும் களிமண் (ம) வண்டல் மண் ஆகியவற்றை விவசாயிகள், மண்பாண்ட தொழிலாளர்கள் இலவசமாக எடுத்துச் செல்ல tnsevai.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக இன்று முதல் விண்ணப்பித்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்.
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இந்நிலையில், சேலம் மாவட்டத்தில் இன்று இரவு 8.30 மணி வரை நகரின் ஒரு சில இடங்களில் மிதமான மழையும், சில பகுதியில் கனமழையும் பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இந்நிலையில், சென்னையில் இன்று இரவு 8.30 மணி வரை நகரின் ஒரு சில இடங்களில் மிதமான மழையும், சில பகுதியில் கனமழையும் பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் நேற்றிரவு பெய்த மழையால், நகரின் முக்கிய பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணாமாக தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கடலூர் மாவட்டத்தில் இரவு 8.30 வரை இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணாமாக தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் இரவு 8.30 வரை இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Sorry, no posts matched your criteria.