Tamilnadu

News July 4, 2024

நாகர்கோவில்: நாளைய மின்தடை 

image

கன்னியாகுமரி மின்பகிர்மான வட்டத்திற்குட்பட்ட மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள 1200 மின்மாற்றிகளில் நாளை சிறப்பு பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனால் நாளை காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை திங்கள்சந்தை, தலக்குளம், திருவிதாங்கோடு, மேக்காமண்டபம், திருவட்டார், திருவரம்பு , பனச்சமூடு , களியக்காவிளை, நித்திரவிளை, பேச்சிப்பாறை, கருங்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

News July 4, 2024

அரியலூர்: மாணவர்களுக்கு கட்டுரை போட்டி

image

தமிழ்நாடு என பெயர் சூட்டிய சூலை 18 ஆம் நாளினை தமிழ்நாடு நாள் விழாவாக கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி அரியலூர் மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடைபெற உள்ளது. வரும் ஜூன் 9ஆம் தேதி அரியலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் காலை 9 மணி முதல் பள்ளி மாணவர்களுக்குக் கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடத்தப்படும் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News July 4, 2024

மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

image

பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்துக்கு இமெயில் மூலம் மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து மோப்பநாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்ததில், அது வெறும் புரளி என தெரிய வந்தது. மேலும், வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபருக்கு போலீஸ் வலைவீசி தேடி வருகின்றனர்.

News July 4, 2024

திருச்சி:கோர்ட்டில் ஆஜர் ஆகும் அண்ணாமலை!

image

திருச்சியில் இன்று செய்தியாளர்களுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டியளித்தார். அதில், என்னைப் பற்றி தொடர்ந்து அவதூறாக கருத்துக்களை தெரிவித்து வரும் திமுக செய்தி தொடர்பாளர் ஆர் எஸ் பாரதிக்கு ரூ.1கோடி நஷ்டஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பினேன். அதற்கு இதுவரை பதில் இல்லை. எனவே, இதை அவதூறு வழக்காக மாற்றி வரும் செவ்வாய்க்கிழமை நானே நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி வழக்கை நடத்தவிருக்கிறேன் என்றார்.

News July 4, 2024

குமரியில் இதுவரை 33 பேர் குண்டர் சட்டத்தில்  கைது

image

குமரி மாவட்டத்தில் குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களை போலீசார் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து வருகின்றனர். அதன்படி, அடிதடி, திருட்டு வழக்குகளில் கைதாகி உள்ள செல்வன் ஜெபராஜ், பிரவீன் ஆகியோரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய ஆட்சியர் உத்தரவிட்டதையடுத்து, இரண்டு பேரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். அதன்படி, குமரி மாவட்டத்தில் குண்டர் சட்டத்தில் இந்த ஆண்டில் மொத்தம் 33 பேர் கைதாகி உள்ளனர்.  

News July 4, 2024

வண்டல் மண் எடுக்க விண்ணப்பிக்கலாம்

image

கோவை மாவட்டத்தில் உள்ள 84 நீர் நிலைகளில் படிந்துள்ள வண்டல் மண்களை விவசாய நோக்கத்திற்காக பயன்படுத்த விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்திடம் விண்ணப்பித்து அதனைப் பெற்றுக் கொள்ளலாம் என்று கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி இன்று தெரிவித்துள்ளார். இதற்கு விண்ணப்பிக்கும் விவசாயிகள் tnesevai.tn.gov.in என்ற இனைய தளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

News July 4, 2024

புதுச்சேரி:ஓட்டுனர் நடத்துனர்களுக்கு ஊதிய உயர்வு

image

புதுச்சேரி சாலை போக்குவரத்து கழக ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று
ஒப்பந்த ஓட்டுநர்களின் மாத ஊதியத்தை ரூ.10,804/-லிருந்து, ரூ.16,796/- உயர்த்தியும்
ஒப்பந்த நடத்துனர்களின் மாத ஊதியத்தை ரூ.10,656/-லிருந்து ரூ.16.585/-ஆக உயர்த்தியும் முதலமைச்சர் ரங்கசாமி இன்று அறிவித்தார். இந்த ஊதிய உயர்வு இந்த மாதத்தில் இருந்து அமலுக்கு வரும் என்று தெரிவித்துள்ளார்.

News July 4, 2024

தேனி ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பாக குரூப் 2 மற்றும் குரூப் 2எ தேர்வுக்கான 2327 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டது . இந்நிலையில் தேனி மாவட்டம் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தின் சார்பாக இலவச பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளதாக தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் ஷஜீவனா தெரிவித்துள்ளார். மேலும் விவரங்களுக்கு மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நேரில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்தார்

News July 4, 2024

திருச்சி ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

கிறிஸ்தவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியர்கள், வேதியர்கள், பாடகர்கள், கல்லறை பணியாளர்களுக்கு நலவாரியம் அமைக்கப்பட உள்ளது. இந்த வாரியத்தில் உறுப்பினராக சேர்வதற்கு விண்ணப்ப படிவம் திருச்சி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு மாவட்ட மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ள ஆட்சியர் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.

News July 4, 2024

அரியலூர்: ஸ்பாட் அட்மிஷன்

image

அரியலூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2024-ஆம் ஆண்டில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர்கள் சேர நேரடி சேர்க்கை (Spot Admission) நடைபெறுகிறது. பயிற்சியில் சேர விரும்புபவர் தங்களது அசல் கல்வி சான்றிதழ்களுடன் நேரில் வரவும். ஏற்கனவே பயிற்சியாளர்கள் சேர்க்கை நடைபெற்றதில் மீதமுள்ள காலியிடங்களுக்கு மட்டும் முதலில் வருபவருக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

error: Content is protected !!