India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாட்டுக்கோழி வளர்ப்பதில் திறன் கண்ட கிராமப்புற பயனாளிகளுக்கு சிறிய அளவிலான நாட்டுக்கோழி பண்ணை அலகுகள் நிறுவ 50 % மானியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதில் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவர் அணுகி விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
சிவகாசி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பட்டாசு தொழிற்சாலைகளில் கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் 63 விபத்துகள் ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த 63 விபத்தில் 148 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 108 பேர் காயமடைந்திருப்பதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. பட்டாசு உற்பத்தியை அதிகரிக்க ஒப்பந்த முறையை பின்பற்றுவதால் தான் விபத்துகள் அதிகரிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் எஸ்.புதூர், திருநீலக்குடி, கோனோரிராஜாபுரம் , ஆலக்குடி, பெரம்பூர், அனைக்குடி , செய்யாமங்கலம், சித்தர்காடு, ஆடுதுறை பெருமாள்கோவில், பூதலூர், பிள்ளையார்பட்டி, மருதக்குடி, ராயந்தூர் , தோகூர், வடக்கால் உள்ளிட்ட 27 இடங்களில் உள்ள அரசு ஆதி திராவிட நல தொடக்கப்பள்ளியில் இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்க ஆட்சியர் தீபக் ஜேக்கப் அறிவுறுத்தல்.
தருமபுரி வருவாய் கோட்டத்திற்குட்பட்ட வட்டங்களை சேர்ந்த விவசாயிகளின் குறைகளை தீர்ப்பதற்காக விவசாயிகளின் குறைதீர் கூட்டம் (05/07/2024) வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் அலுவலர்கள், விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகளும் என அனைவரும் கலந்து கொள்ளுமாறு வருவாய் கோட்ட அலுவலர் காயத்ரி அவர்கள் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டத்தில், 2024-25ம் ஆண்டிற்கு கிராமப்புறங்களில் சிறிய அளவிலான 100 நாட்டுக்கோழி பண்ணை அலகுகள் நிறுவ 50 % மானியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. எனவே தங்கள் கிராமத்திற்கு அருகில் உள்ள அரசு கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவரை அணுகி விண்ணப்பம் பெற்று, உரிய ஆவணங்களுடன் 15.07.2024-க்குள் கால்நடை மருந்தகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என ஆட்சியர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் விவசாய நிலத்தை மேம்படுத்துதல், மண் பாண்டங்கள் செய்தல், வீடு கட்டுதல் உள்ளிட்ட சொந்த பயன்பாடு மற்றும் இதர பயன்பாட்டிற்கு தேவையான வண்டல் மண், களிமண், கிராவல் மண் ஆகியவற்றை தங்கள் கிராம ஏரி, குளங்களில் இருந்து எடுத்துக்கொள்ள tnesevai.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து அனுமதி பெற்று பயனடையுமாறு கலெக்டர் சுப்புலெட்சுமி இன்று (ஜூலை 4) தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சமுதாயத்தை சீர்குலைக்கும் கள்ளச்சாராயம், கஞ்சா, லாட்டரி மற்றும் குட்கா விற்பனை போன்ற சட்டத்திற்கு புறம்பான குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், அவர்கள் ஓராண்டு குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரஜத் சதுர்வேதி இன்று (4-7-2024) எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் 88 இடைநிலை ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ளது. இந்த பணியிடங்கள் பள்ளி மேலாண்மைக்குழு மூலம் தொகுப்பூதிய முறையில் தற்காலிகமாக நிரப்பப்பட உள்ளது. இதற்கு மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் ஜூலை 8ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என ஆட்சியர் அருண் தம்புராஜ் அறிவித்துள்ளார்.
மேட்டுப்பாளையம் – கோவை ரயில் பாதையை இரட்டை பாதையாக மாற்ற வேண்டும் என பயணிகள், பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இது குறித்து மேட்டுப்பாளையம் பகுதி பொது மக்கள் மத்திய இணையமைச்சர் எல்.முருகனிடம் மனு அளித்தனர். மேலும் அதற்கான மனுவினை இன்று டெல்லியில் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவியிடம் இணை அமைச்சர் எல்.முருகன் நேரில் வழங்கினார்.
திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் அறிவுறுத்தலின் பெயரில் மாவட்ட காவல்துறை இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், எங்கள் நிறுவனம் சார்ந்த வலைதள பக்கங்களை லைக் மற்றும் ஷேர் செய்தால் சுலபமாக பணம் ஈட்டலாம் என பொய்யாக விளம்பரப்படுத்தி மக்களை நம்பவைத்து ஏமாற்றி பணம் பறிக்கும் சைபர் கிரைம் குற்றங்கள் நடைபெறுகின்றன. எனவே பொதுமக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.