India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தில் இன்று மகாவீர் ஜெயந்தி மற்றும் மே 1ம் தேதி மே தினம் ஆகிய தினங்களை முன்னிட்டு, மது விற்பனை இல்லாத நாளாக அனுசரிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே ஈரோடு மாவட்டத்தில் நாளை மற்றும் மே 1ம் தேதி, அரசு மதுபான கடைகள் அதனுடன் இயங்கும் பார்கள் ஆகியவை மூடப்பட்டிருக்கும் என ஈரோடு கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா, இன்று செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
முருகனின் ஆதிபடை வீடான எட்டுக்குடி ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சித்திரை பெருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. ஏழாம் நாள் திருவிழாவான நேற்று இரவு ஓலைச் சப்ரத்தில் வெள்ளி ரிஷப வாகன சககோபுர காட்சி மின்விளக்கு அலங்காரத்தோடு விமர்சையாக நடைபெற்றது. இதில் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று முருகப்பெருமானை அர்ச்சனை செய்து வழிபட்டனர்.
சமண சமயத்தின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான மகாவீர் ஜெயந்தி தினம் இன்று(ஏப்.21) கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு சென்னை முழுவதும் இறைச்சி, மீன் மற்றும் இதர மாமிச வகைகள் விற்பனையை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மீறி செயல்படும் கடைகள் மீது சீல் வைக்கப்பட்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பின் கீழ் நடந்து முடிந்த பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2024- மாநில தேர்தல் ஆணையம் ஒரு அறிக்கையும், மத்திய தேர்தல் ஒரு அறிக்கையும் வெளியிட்டது. இதனால் எத்தனை சதவீதம் வாக்கு பதிவு நடைபெற்றது. என அரசியல் பிரமுகர், பொது மக்கள் குழப்பம் அடைந்த நிலையில் நேற்று நள்ளிரவு திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் 71.14% வாக்கு பதிவானது என அதிகார பூர்வமாக மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.
சேலம் மாவட்டம் கொளத்தூர் அருகே உள்ள கோடம்பாக்காடு பகுதியை சேர்ந்தவர் செல்லப்பன். இவருடைய விவசாய கிணற்றில் மான் ஒன்று தவறி விழுந்து தண்ணீரில் தத்தளித்து கொண்டிருந்தது. இதுகுறித்து செல்லப்பன் மேட்டூர் தீயணைப்பு நிலையத்திற்கும், மேட்டூர் வனத்துறையினருக்கும் தகவல் தெரிவித்தார். இதையடுத்து தீயணைப்பு நிலைய அலுவலர் வெங்கடேசன் தலைமையில் தீயணைப்பு படை வீரர்கள் மானை உயிருடன் மீட்டு வனபகுதியில் விட்டனர்.
பாபநாசம் திருப்பாலைத்துறை ஆவுல்காரத் தெருவில் பறந்து வந்த மயில், மின்சார கம்பி அருகே சென்றபோது அதன் உடல் மின்கம்பியில் உரசியது. இதில் மின்சாரம் தாக்கி நேற்று(ஏப்.20) மயில் இறந்தது. தகவலறிந்து உடனே சம்பவ இடத்துக்கு சென்ற வனத்துறை ஊழியர்கள் மயிலை எடுத்து சென்று பரிசோதனை செய்து திருமலை ராஜன் ஆற்றங்கரையில் புதைத்தனர்.
முசிறி அடுத்த அயித்தாம்பட்டியை சோ்ந்த தமிழ்ச்செல்வன். திருவெறும்பூா் பகுதியில் தோ்தல் பறக்கும் படை பணியில் இருந்த இவா் நேற்று பணி முடித்து தனது டூவீலரில் சென்ற போது ஏவூா் கருப்பு கோயில் அருகே சென்றபோது டூவீலரில் இருந்து தவறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக முசிறி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதையறிந்த முசிறி போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள அப்பர் பஜார் குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இன்று (ஏப் 20) 9 மணி அளவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தீ வீட்டில் உள்ள பொருட்கள் மீது பற்றியதால் தீ கட்டுக்கடங்காமல் எரிந்து வருகிறது. விபத்தால் பகுதியே புகைமூட்டமாக காட்சி அளிக்கிறது தகவலின் பெயரில் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
செங்கோட்டையில் இருந்து நெல்லை சந்திப்புக்கு பயணிகள் ரயில் இன்று ஏப். 20 மாலை சென்று கொண்டிருந்தது. சேரன்மகாதேவி அருகே இரவு 7.15 மணியளவில் ரயில் சென்ற போது அங்குள்ள செங்கொடி சாஸ்தா கோவில் அருகே தண்டவாளத்தில் சென்று கொண்டிருந்த மாடுகள் மீது ரயில் மோதியது. இதில் மூன்று எருமை மாடுகள் சம்பவ இடத்திலேயே பலி .ஒரு மாடு கவலைக்கிடமாக உள்ளது.
கரூர், கிருஷ்ணராயபுரம் தாலுகா கீழடை பகுதியைச் சேர்ந்தவர் பிச்சைமுத்து, மனைவி இளஞ்சியம். இவர்களின் 14 வயது பேரன் தீபக் சற்று மனநலம் பாதிக்கப்பட்டு இருந்து வந்துள்ளார். நேற்று முன்தினம் வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த தீபக் மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து இளஞ்சியம் அளித்த புகாரின் பேரில் மாயனூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.