India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரை மாவட்ட நீதிமன்றத்தில், இன்று மாவட்ட வழக்கறிஞர் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். புதிய முப்பெரும் சட்டங்களின் பெயர்களை திருத்தம் செய்ததை உடனே நிறுத்தி வைத்திக் கோரியும், இந்திய தண்டனைச் சட்டம் (IPC), குற்றவியல் நடைமுறைச் சட்டம் (CrPC), இந்திய சாட்சிய சட்டம் (IEA) முப்பெரும் சட்டங்களின் பிரிவுகளை வடமொழி தலைப்புகளில் மாற்றியதைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பி வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று(ஜூலை 1) காலை 10 மணி வரை இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று முதல் 6 ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும், இதனால் சில பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் இன்று(ஜூலை 1) மதியம் 1 மணி வரை இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று முதல் 6 ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும், இதனால் சில பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தென்காசி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு (மதியம் 1 மணி வரை) இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளத. இதனால், குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக நாளை முதல் 6ஆம் தேதி வரை ஒரு சில தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழை பெய்யும்.
திருச்சி, முக்கொம்பு கதவணை சரி செய்யும் பணி பொதுப்பணி துறை மூலம் கடந்த 10 நாட்களாக நடைபெற்று வருகிறது. இதனால் பிரதான கிணறுகளில் நீரூற்று குறைந்ததால், தலைமை நீரேற்று நிலையத்திலிருந்து ராமநாதபுரம் மாவட்டத்திற்கு ஒதுக்கிய அளவு குடிநீர் ஏற்றும் பணி நடைபெறுகிறது. இதனால் இன்றும் நாளையும் (ஜூலை 1, 2) மாவட்டம் முழுவதும் குடிநீர் விநியோகம் இருக்காது என கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டதில் வைட்டமின் ஏ குறைபாடு தடுப்பு மற்றும் தீவிர வயிற்றுப்போக்கு தடுப்பு முகாமை மாவட்ட ஆட்சித் தலைவர் சுப்புலெட்சுமி இன்று(ஜூலை 1) சத்துவாச்சாரி, நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையத்தில் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன், மண்டலக்குழுத் தலைவர் நரேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடியில் நேற்று ஓ. பன்னீர்செல்வம் அணியின் மாநகர் மாவட்ட கூட்டம் மாவட்ட செயலாளர் ஏசாதுரை தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணித்துவிட்டு நாம் தமிழர் கட்சிக்கு மறைமுக ஆதரவு அளித்துள்ள எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
10ஆம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 வகுப்புக்கு துணை தேர்வுகள் நாளை (ஜூலை 2) தொடங்க உள்ளது. இதையொட்டி வேலூர் மாவட்டத்தில் 10ஆம் வகுப்பு துணைத்தேர்வுக்கு 9 மையங்களும், பிளஸ் 1 துணைத் தேர்வுக்கு 12 மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தேர்வு மையங்களுக்கு தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள் மற்றும் அறை கண்காணிப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தின் கடந்த இரண்டு நாட்களாக மாலை நேரங்களில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று திருவையாறில் அதிகபட்சமாக 34 மிமீ, பூதலூரில் 17.20 மிமீ, திருக்காட்டுப்பள்ளியில் 22.40 மிமீ, அய்யம்பேட்டையில் 23 மிமீ, கும்பகோணத்தில் 3 மிமீ, வெட்டிக்காடு பகுதியில் 2.60 மிமீ, பாபநாசத்தில் 4 மிமீ என மாவட்டத்தில் சராசரியாக 125.20 மிமீ அளவிற்கு மழை பதிவாகியுள்ளது.
புதுக்கோட்டை நகராட்சி மாநகராட்சியாக மாற்றம் செய்து அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், வாசவாசல், முள்ளூர், திருக்கட்டளை, திருமலைராயசமுத்திரம், கவிநாடு கிழக்கு, கவிநாடு மேற்கு, 9 ஏ நத்தம் பண்ணை, 9 பி நத்தம் பண்ணை ஆகிய ஊராட்சிகள் இணைக்கப்படுகின்றன. மேலும், மாநகராட்சியின் பரப்பளவு 121 சதுர கி.மீ, மக்கள் தொகை 2.16 லட்சம் மற்றும் ஆண்டு வருவாயாக ரூ.64.21 கோடி கிடைக்க வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.