Tamilnadu

News August 20, 2025

பெரம்பலூர் மக்களே உஷார்.!

image

பெரம்பலூர் மக்களே..வங்கியில் இருந்து பேசுவதாக வரும் அழைப்புகளை நம்பி ஏமாற வேண்டாம். இப்படியாக வரும் அழைப்புகள் மூலம் உங்களுடைய விவரங்கள் மற்றும் புகைப்படங்களை தவறான முறையில் பயன்படுத்தி பணம் பறிக்க வாய்ப்புள்ளது. இது போன்று பலர் ஏற்கனவே லட்சக்கணக்கில் பணத்தை இழந்துள்ளனர். இது போன்ற அழைப்புகள் உங்களுக்கு வந்தால் உடனடியாக இந்த 1930 எண்ணுக்கு அழைத்து புகாரளியுங்கள். இதனை SHARE பண்ணுங்க!

News August 20, 2025

புதுக்கோட்டை: தமிழ் தெரிந்தவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு

image

புதுக்கோட்டை மக்களே.. தமிழ் தெரிந்தவர்களுக்கு வங்கியில் பணி புரிய அறிய வாய்ப்பு! ரெப்கோ வங்கியில் வாடிக்கையாளர்கள் சேவை அதிகாரி காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு டிகிரி முடித்த நன்கு தமிழ் தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.24,050 – ரூ.64,480 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே கிளிக் செய்து<<>> 08.09.2025க்குள் விண்ணப்பிக்கலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க.!

News August 20, 2025

ராம்நாடு: கூட்டு பட்டாவை தனி பட்டாவாக மாற்றனுமா

image

உங்களது இடம் (அ) வீடு கூட்டு பட்டாவில் இருந்து மாற்ற <>இங்கு க்ளிக்<<>> செய்து பட்டா மாறுதலுக்கு விண்ணப்பித்தல் தேர்ந்தெடுத்து தனிபட்டாவாக மாற்ற பின்வரும் ஆவணங்களை இணைக்க வேண்டும்…

✅கூட்டு பட்டா,
✅விற்பனை சான்றிதழ்,
✅நில வரைபடம்,
✅சொத்து வரி ரசீது,
✅மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதத்துடன் விண்ணப்பித்தால் நிலத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து 30 – 60 நாள்களில் தனி பட்டா கிடைத்துவிடும். SHARE பண்ணுங்க!

News August 20, 2025

நெல்லை: ரூ.1000 வரலையா CHECK பண்ணுங்க….

image

நெல்லை பெண்களே! கலைஞர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பித்து 1000 வரலையா..? உங்க விண்ணப்ப படிவம் என்னாச்சுன்னு தெரியலையா?? கவலையை விடுங்க… இங்கு <>க்ளிக்<<>> செய்து உங்கள் அருகில் உள்ள சேவை மையங்களுக்கு சென்று விண்ணப்ப நிலையை தெரிஞ்சுக்கோங்க… ரூ.1000 வரவில்லை அல்லது விண்ணப்ப நிலை குறித்த புகார்களுக்கு நெல்லை மகளிர் திட்ட அலுவலரிடம் 0462-2500302 புகாரளியுங்க… நெல்லை பெண்களே இந்த தகவலை SHARE பண்ணி SAVE பண்ணுங்க…

News August 20, 2025

காட்டாங்கொளத்துார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்

image

தாம்பரம் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த வெடிகுண்டு அழைப்பில், மறைமலை நகர் காட்டாங்கொளத்தூரில் உள்ள JRK பள்ளியில் வெடிகுண்டு வெடிக்கும் என மிரட்டல் விடுக்கப்பட்டது. பள்ளித் தேர்வுக்குப் படிக்காததால் விடுமுறை வேண்டும் என்பதற்காக, அதே பள்ளியில் படிக்கும் மாணவர் ஒருவர் இந்த மிரட்டல் அழைப்பை விடுத்தது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் அந்த மாணவருக்கு எச்சரிக்கை விடுத்து அனுப்பி வைத்தனர்.

News August 20, 2025

காஞ்சிபுரத்தில் கண்டிப்பாக செல்ல வேண்டிய இடங்கள்!

image

காஞ்சிபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தளங்களை இங்கு காணலாம். ▶️அறிஞர் அண்ணா இல்லம் ▶️ஏகாம்பரேஸ்வரர் கோயில் ▶️கைலாசநாதர் கோயில் ▶️குன்றத்தூர் முருகன் கோயில் ▶️காஞ்சிபுரம் ஜமா மஸ்ஜித் ▶️வல்லக்கோட்டை முருகன் கோயில் ▶️உத்திரமேரூர் வைகுந்த பெருமாள் கோயில். காஞ்சியில் உள்ள சுற்றுலாத் தளங்களை மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க. காஞ்சியில் பேமஸ்னு நினைக்கிற இடங்களை கமெண்டில் சொல்லுங்க!

News August 20, 2025

கண்ணாடி மாளிகையில் ஆண்டாள், ரங்கமன்னார் 

image

ஒவ்வொரு மாதமும் ஏகாதசியன்று ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் உள்ள கண்ணாடி மாளிகையில் ஆண்டாள் ரங்க மன்னார் எழுந்தருளுவது  வழக்கம். இந்நிலையில் ஆவணி மாத ஏகாதசியை முன்னிட்டு ஆண்டாள் ரங்க மன்னார் கண்ணாடி மாளிகையில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். 

News August 20, 2025

கிருஷ்ணகிரியில் வேலைவாய்ப்பு முகாம்.. மிஸ் பண்ணிடாதீங்க

image

கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் நடத்தும், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் ஆக.22 காலை 10 மணி முதல் 1 மணி வரை நடைபெற உள்ளது. எட்டாம் வகுப்பு பட்டப்படிப்பு ஐடிஐ படித்தவர்கள் கலந்து கொள்ளலாம். 25க்கு மேற்பட்ட கம்பெனிகள் பங்கேற்க உள்ளன. விருப்பமுள்ளவர்கள்<> இந்த லிங்கில் <<>>விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு இந்த எண்ணில் 04343-291983 அழைக்கவும். ஷேர் பண்ணுங்க

News August 20, 2025

சிவகங்கை: உயர்வுக்கு படி முகாம் தேதி அறிவிப்பு

image

சிவகங்கை மாவட்டம் 2024-25ஆம் கல்வியாண்டில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பயின்ற, தேர்ச்சி / தேர்ச்சி பெறாத, தேர்வு எழுதாத மொத்தம் 1,292 மாணவர்கள் பயன்பெறும் வகையில், வரும் 22.8.2025 அன்று சிவகங்கை மருதுபாண்டியர் நகர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாக கூட்டரங்கில், “உயர்வுக்குப்படி முகாம்-2025” நடைபெறவுள்ளது. இதில் மாணவர்கள் பங்கேற்று பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் பொற்கொடி தெரிவித்துள்ளார்.

News August 20, 2025

கிருஷ்ணகிரியில் நாளை மின் தடை

image

கிருஷ்ணகிரி நகர், தொழிற்பேட்டை, பவர் ஹவுஸ் காலனி, சந்தைபேட்டை, அரசு மருத்துவமனை, சென்னை சாலை, ஐக்கப்பன் நகர், வீட்டு வசதி வாரியம் பகுதி-1, வீட்டு வசதி வாரியம் பகுதி-2 பழையபேட்டை, குண்டலபட்டி, சுத்தேரி, ஆலப்பட்டி, சூலகுண்டா, மிட்டப்பள்ளி, மாதேப்பட்டி, கங்கலேரி, தாளாப்பள்ளி, செம்படமுத்தூர், பெல்லாரம்பள்ளி, கூலியம், குந்தாரப்பள்ளி ஆகிய இடங்களில் நாளை மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!