India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த தி.க.தலைவர் கி.வீரமணி, கள்ளக்குறிச்சி விவகாரத்தில் அரசியல் உள்நோக்கத்தோடு மத்திய அரசு அணுகுகிறது. மத்திய அரசும் வித்தை காட்ட மகளிர் ஆணையம், தேசிய மனித உரிமை ஆணைய விசாரணைக்கு உத்தரவிடுகிறது. ஆனால், அவர்களால் சட்டப்படி யாரையும் தண்டிக்க முடியாது. தேசிய மனித உரிமை ஆணையத்தின் அதிகாரம் என்னவென்று தெரியாமல் ஊடக வெளிச்சத்திற்காக நியமனம் செய்கிறார்கள் என்றார்.
அதிகாரிகள், ஆளும் கட்சியினர், காவல்துறை உதவியுடன் கள்ளசாராயம் காய்ச்சப்படுவதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். கடந்த ஆண்டு கள்ளச்சாராய மரணத்தின்போதே அரசு உரிய நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என இன்று ஆளுநரை சந்தித்த பின் பேட்டியளித்துள்ளார். மேலும், இந்த கள்ளக்குறிச்சி விவகாரத்தில் துறை சார்ந்த அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் பிரேமலதா சாடியுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் வகுப்பைச் சேர்ந்த தனிநபர்கள் அல்லது குழுக்கள் கடன் பெறுவதற்காக விண்ணப்பிக்கலாம் என கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் நேற்று(ஜூன் 27) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
உங்களை தேடி உங்கள் ஊரில் என்ற திட்டத்தின் கீழ் குன்னூர் பகுதியில் உள்ள சடையன்கோம்பை, சின்னாளன் கோம்பை, யானை பள்ளம் என்ற ஆதிவாசி மலை கிராமங்களுக்கு நீலகிரி கலெக்டர் அருணா 9 கிமீ தூரம் நடந்தே சென்று மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார். அப்போது பழங்குடியினர் சாலை வசதி, மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட கோரிக்கை மனுக்களை அளித்தனர்.
சட்டப்பேரவையில் எதிர்க்கட்சியை அசிங்கப்படுத்துவது என்று இ.பி.எஸ் சொல்வது உண்மை தான் என பாமக தலைவர் ராமதாஸ் கருத்துத் தெரிவித்துள்ளார். விழுப்புரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், சட்டப்பேரவையில் எதிர்கட்சியினருக்கு வாய்ப்பு மறுக்கப்படுவதாகவும், சபாநாயகர் யாரையும் பேசவிடுவதில்லை என்றும் குற்றம் சாட்டினார். மேலும், எதிர்க்கட்சியினர் பேசும் விஷயங்கள் வெளியே வருவதில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.
திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 76 அரசு உயர்நிலைப் பள்ளிகளில் 2023-24ஆம் கல்வியாண்டில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகளுக்கு முகாம் நடைபெறுகிறது. தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் பாலிடெக்னிக் சேர்வதற்கு வசதியாக நாளை காலை 10 மணிக்கு முகாம் நடைபெறுகிறது என தெரிவித்துள்ளார்.
பிரதமர் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு குறுவை நெல் பயிருக்கு காப்பீடு செய்ய குஷமா பொது இன்சூரன்ஸ் நிறுவனம் மூலம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு எதிர்பாராமல் நடக்கும் இழப்பிற்கு முன்னெச்சரிக்கையாக இருக்க திருவாரூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ இன்று செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
கள்ளச்சாராய சம்பவத்தில் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 22 போ் வீடு திரும்பினா். கள்ளக்குறிச்சியில் கடந்த 18ஆம் தேதி 150க்கும் மேற்பட்டோா் கள்ளச்சாராயம் குடித்ததால், உடல் உபாதை ஏற்பட்டு விழுப்புரம், சேலம், புதுச்சேரி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனா். சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 52 பேரில் 22 போ் உயிரிழந்தனா். 8 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சென்னை மாவட்ட சமூக நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் வழக்குப் பணியாளர், பாதுகாப்பாளர், உதவியாளர் பணியிடங்கள் ஆகிய 3 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இன்று மாலை 5 மணிக்குள் chennai.nic.in என்ற இணையத்தில் விண்ணப்பிக்கலாம். சம்பளம் 1,000 முதல் 18,000 வரை வழங்கப்படும். நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
உதகையில் மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலகத்தில் நேற்று மாவட்ட ஆட்சியர் மு.அருணா தலைமையில் சட்டம் ஒழுங்கு மற்றும் சாலை பாதுகாப்பு ஆய்வு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவடிவேல், மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி, வருவாய், காவல், நெடுஞ்சாலை துறை மற்றும் இதர அரசு துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.
Sorry, no posts matched your criteria.