India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டத்திற்கு உட்பட்ட நாரணமங்கலம் கிராமத்தில், ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் நடைபெறும் நல்லேறு திருவிழா இன்று(ஏப்.23) நடைபெற்றது. சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு வரும் ஆண்டில் நல்ல மழை பெய்து, விவசாயம் செழிக்க இயற்கையை வணங்கி வளர்ப்பு காளைகளுடன் பொன் ஏர் பூட்டி உழவுப் பணியை பாரம்பரிய முறைப்படி மேற்கொண்டனர். இதில் திரளாக கலந்து கொண்டாடினர்.
திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அண்ணாமலையார் கோவிலுக்கு சித்ரா பவுர்ணமி முன்னிட்டு பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை புரிகின்றனர். இந்நிலையில் ஷேர் ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது என கலெக்டர் பாஸ்கர பாண்டியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் புகழ்பெற்ற சாரங்கபாணி கோயில் சித்திரை பிரம்மோற்சவ விழா ஏப்ரல் 14ம் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. தினசரி காலை பல்லக்கிலும் மாலை பல்வேறு வாகனங்களில் வீதி உலா நடைபெற்று வந்த நிலையில், முக்கிய விழாவான தேரோட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாரங்கா, சாரங்கா என முழக்கமிட்டு தேரை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர்.
மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த சிலர் கட்றாபாளையத்தில் உள்ள விடுதியில் தங்கியிருந்தனர். இவர்கள் சித்திரை திருவிழாவில் பெண்களிடம் நகைகளை கொள்ளை அடிக்க வேண்டும் என ஹிந்தியில் பேசி கொண்டிருந்ததை விடுதி மேலாளர் முரளி கவனித்து, போலீசில் தகவல் தெரிவித்தார். போலீசார் 6 பெண்கள் உட்பட 8 பேரை நேற்று கைது செய்து, அவர்களிடமிருந்து திருடுவதற்கு தேவையான சிறிய உபகரணங்களை பறிமுதல் செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பாக, 2023-2024ஆம் ஆண்டு 12ஆம் வகுப்பு பயின்ற மாணாக்கர்களுக்கு கல்லூரிக் கனவு தொடர்பான உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம்.சரயு நேற்று (ஏப்ரல் 22) துவக்கிவைத்தார். உடன் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர் ரமேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு 9 தற்காலிக பேருந்து நிலையங்களில் இருந்து கிரிவல பாதைக்கு கட்டணம் இல்லா பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது.
என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தகவல் தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி தூத்துக்குடி இடையே 1 -1 பஸ் சர்வீஸ் இயக்கப்படுகிறது. இடைவெளிகளில் நிற்காமல் செல்லும் இந்த பஸ்சிற்கு நல்ல வரவேற்பு உள்ளது. குறிப்பாக அரசு அலுவலர்கள், பள்ளி, கல்லூரி செல்பவர்களுக்கு பயனுள்ளதாக இருந்து வருகிறது. இந்த பஸ் சர்வீஸ் எண்ணிக்கையை தற்போது வெகுவாக குறைத்துள்ளனர். இதனால் இதில் பயணிப்பவர்கள் இடமின்றி ஒரு மணி நேரத்துக்கு மேலாக நின்று கொண்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்தவா் ரங்கசாமி (82) கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த பிப். 7 ஆம் தேதி முதல் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் கடந்த 19 ஆம் தேதி திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு மயங்கி கீழே விழுந்த அவருக்கு சிறை மருத்துவா்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனா். பின், மேல் சிகிச்சைக்காக கோவை ஜிஎச் அனுப்பி வைத்தனர். அங்கு நேற்று அவர் உயிரிழந்தார்.
பழனி அடுத்த பாப்பம்பட்டி துணை மின் நிலையத்திலிருந்து இரவு நேரத்தில் விவசாயத்திற்கு வழங்கப்படும் மின்சாரம் மிகக் குறைவாக வழங்கப்படுவதால் விவசாயத்திற்கு தண்ணீர் கிடைக்காமல் பரிதவித்து வருகின்றனர். மின்சார வாரிய அலட்சியப் போக்கால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருவதாக தமிழ்நாடு உழவர் பாதுகாப்பு இயக்கம் சார்பாக குற்றம் சாட்சி வருகின்றனர்..
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள தலசயன பெருமாள் கோயிலில் ஆண்டு தோறும் சித்திரை மாதத்தில் 10 நாள் நடைபெறும் சித்திரை திருவிழாவின் 7ம் நாள் உற்சவமும் தேர் வீதியுலா இன்று (ஏப்ரல்-23) தொடங்கியது. இந்த தேர் திருவிழாவில் செங்கல்பட்டு மட்டும் இல்லாமல் அதன் சுற்று வட்டார மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.