Tamilnadu

News June 27, 2024

கடலூரில் மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழு கூட்டம்

image

கடலூர் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் மாவட்ட அளவிலான ஆதிதிராவிடர் நலக்குழு, விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக்குழு
கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். அ. அருண் தம்புராஜ், தலைமையில் இன்று (27.06.2024) நடைபெற்றது. உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா.இராஜாராம், சிதம்பரம் சார் ஆட்சியர் ரஷ்மி ராணி ஆகியோர் உள்ளனர்.

News June 27, 2024

விவசாயிகள் குறைதீர் கூட்டம்

image

விவசாயிகள் குறைதீர் கூட்டம் நாளை (ஜூன்.28) ஈரோடு வருவாய் கோட்ட அலுவலர் சதீஷ்குமார் தலைமையில் ஆர்.டி.ஓ அலுவலகத்தில் நடைபெறுகிறது. இதில் ஈரோடு, மொடக்குறிச்சி, கொடுமுடி, பெருந்துறை தாலுகா விவசாயிகள் கோரிக்கை மனுக்களை வழங்கி தங்கள் பகுதி குறைகள் குறித்து தீர்வு காணலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News June 27, 2024

மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் திறனாய்வு கூட்டம்

image

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சி தலைவர் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் மாதாந்திர திறனாய்வு கூட்டம் நடைபெற்றது. குழந்தைகளுக்கு டெங்கு பாதிப்பு தடுப்பது குறித்தும், டெங்கு பதித்த கர்ப்பிணி பெண்களுக்கு சிகிச்சை அளிப்பது குறித்தும், தாய்சேய் நலம், சிறார் நலம், மகப்பேறு மரணம் உள்ளிட்ட பல்வேறு சுகாதார மேம்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் பல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

News June 27, 2024

ஆட்சியர் நேரில் ஆஜராக ஆணை

image

பழனி கிரிவலப் பாதையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. அந்த உத்தரவை முறையாக அதிகாரிகள் நிறைவேற்றவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சேலத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார். இதில் திண்டுக்கல் ஆட்சியர் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News June 27, 2024

நீலகிரி: வெள்ள அபாய எச்சரிக்கை!

image

நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, பில்லூர் அணையின் முழு கொள் அளவான 100 அடியில், 97 அடியை எட்டியுள்ளது. இதனால் அணையில் இருந்து 14,000 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. எனவே, ஆற்றங்கரை ஓர மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

News June 27, 2024

எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்

image

அரியலூர் மாவட்ட உணவுப் பொருள் வழங்கல் துறை சார்பாக எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் அரியலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நாளை (ஜூன்.28) நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் எரிவாயு நுகர்வோர்கள், சமையல் எரிவாயு தொடர்பான குறைகள் இருப்பின் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது புகார்களை தெரிவித்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்னா தெரிவித்துள்ளார்.

News June 27, 2024

பெண்களுக்கு வேலை வாய்ப்பு – ஆட்சியர் 

image

அரியலூர் மாவட்டத்தில் குடும்பம், பொது இடங்களில் வன்முறையால் பாதிக்கப்படும் பெண்களுக்கு அவசரகால உதவிகளை வழங்கி பாதுகாக்க சமூக நலத்துறையின் கீழ் சகி ஒருங்கிணைந்த சேவை மையம் செயல்படுகிறது. இதில் காலியாக உள்ள வழக்குப் பதிபவர், பாதுகாவலர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் பெண்கள் தங்கள் சுயவிவரங்களுடன் ஜூன்.12 க்குள் அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள சகி அலுவலகத்தில் வழங்குமாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News June 27, 2024

விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் மாதந்தோறும் கடைசி வெள்ளிக்கிழமை அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டறங்கில் விவசாயிகள் நலம் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த மாத விவசாயிகள் குறைதீர் கூட்டம் நாளை நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அறிவுறுத்தியுள்ளார்.

News June 27, 2024

விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

image

விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் ஸ்ரீதர் தலைமையில் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (ஜூன் 27) நடைபெற்றது. இதில், சானல்களில் தண்ணீர் வரத்து, குளங்களை தூர்வாருதல், நீர்நிலைகளை பராமரித்தல் மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் குறித்து விவாதிக்கப்பட்டது. இதில், அதிகாரிகள், விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

News June 27, 2024

மாணவர்களுக்கு கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

கலைஞர் கருணாநிதி பிறந்தநாள் விழா தொடர்பாக கடலூர் மாவட்டத்திலுள்ள பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு ஜூன் 11ஆம் தேதி அன்று கடலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் பேச்சுப்போட்டிகள் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ளும் பள்ளி, கல்லூரி மாணவர்களின் விவரங்கள் tdadcuddalore@gmail.com என்ற மின்னஞ்சலில் ஜூன் 10-ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என கலெக்டர் அருண்தம்புராஜ் இன்று தெரிவித்தார்.

error: Content is protected !!