India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நீலகிரியில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நாளை( ஜூன்.21) மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் கூடுதல் ஆட்சியர் வளாகம் பிங்கர்போஸ்ட் ஊட்டியில் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 0423-2444004, 7200019666 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார்.
தென்கடல் மற்றும் மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதியில் மணிக்கு 35 – 45 கி.மீ. வேகத்திலும், இடையில் 55 கி.மீ வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி ஜூன்.23 வரை 4 நாள்கள் விசைப்படகு மற்றும் நாட்டுப் படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என மீன்வள மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் (ராமேஸ்வரம்) தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்திலிருந்து கள்ளச்சாராயம் அருந்தி உடல்நலம் பாதிக்கப்பட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு உயர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர். இதில் ஏற்கெனவே 3 பேர் உயிரிழந்த நிலையில் தற்போது பலி எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. சிகிச்சை பெற்று வருவோரி எண்ணிக்கை 31 ஆக உள்ளது. கள்ளச்சாராயம் அருந்தி சேலம், கள்ளக்குறிச்சியில் சிகிச்சையில் இருந்த 33 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.
புதுச்சேரி அரசின் வருவாயை பெருக்குவதற்காக புதிதாக ரெஸ்டோ பார்களுக்கு கலால் துறை அனுமதி வழங்கியது. இந்நிலையில் கலாச்சார சீரழிவு ஏற்படுவதாகவும் திரும்பும்போது விபத்து ஏற்படுவதாகவும் புகார் எழுந்தது. இந்நிலையில் நள்ளிரவு 12 மணிக்கு மேல் இயங்கினால் அதன் 3 மாத உரிமம் சஸ்பெண்ட் செய்யப்படும் என கலால் துறை நேற்று அதிரடியாக தெரிவித்துள்ளது.
தூத்துக்குடியில் இருந்து சென்னை நோக்கி சென்ற அரசு பேருந்து, விழுப்புரம் அருகே ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புறவழிச் சாலையில் நடந்த இந்த விபத்தில், பேருந்து சாலையோரத்தில் உள்ள மரத்தின் மீது மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில், பேருந்தில் பயணம் செய்த 12க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ள சாராயம் குடித்து பல பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் ஆளுங்கட்சியினரின் ஆதரவில் கள்ளச்சாராய விற்பனை அதிகரித்து வருகின்றது. கள்ளச்சாராய சாவுக்கு காரணமானவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட வேண்டும் என நேற்று (ஜுன்.19) கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் நேற்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தி.மலை அண்ணாமலையார் கோயிலில் நேற்று மாலை அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பிரதோஷத்தை முன்னிட்டு சுவாமி தரிசனம் செய்தார். பின்பு செய்தியாளர்களை சந்தித்தபோது கள்ளச்சாராயம் குடித்து 33 பேர் உயிரிழந்தனர். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கவும் தமிழ்நாடு அரசு இனிவரும் காலங்களில் இது போன்ற நிகழ்வுகள் தடுக்கப்பட வேண்டுமென தெரிவித்தார்.
கள்ளக்குறிச்சியில், கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களில் 21 பேரின் உட்றகூராய்வு நிறைவடைந்துள்ளதாக மருத்துவமனையில் ஆய்வு செய்த புதிய கலெக்டர் எம்.எஸ்.பிரசாத் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். மேலும், கள்ளச்சாராய உயிரிழப்புகள் அறிக்கை அரசுக்கு அனுப்பப்படும் எனவும் அவர் தெரிவித்தார். 60க்கும் மேற்பட்டோர் சிகிச்சையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
தி.மலை மாவட்டம், இந்திய அரசின் ஜீவன் ரக்க்ஷா பதக்க விருது அறிவிக்கப்பட்டுள்ளது. நீரில் மூழ்கியவர்கள் , மின்சார, தீ விபத்துக்கள், நிலச்சரிவு, விலங்கு தாக்குதல், மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டு உயிர்களை காப்பாற்றிய வீரர்களுக்கு விருது வழங்கப்படுகிறது. விண்ணப்பிக்க விரும்புவோர் www.sdat.tn.gov.in இணையதளம் மூலம் ஜூன் 30ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
நெல்லை மாநகர டவுன் நெல்லையப்பர் காந்திமதியம்மன் கோவிலில் 518வது ஆனி தேரோட்டம் வருகின்ற 21ம் தேதி நடைபெற உள்ளது. அன்றைய தினம் பாதுகாப்பு பணிக்காக திருநெல்வேலி மாநகர, வெளி மாவட்ட காவல் துறையினர் என சுமார் 1500 பேர் திருநெல்வேலி மாநகர காவல் ஆணையாளர் மூர்த்தி தலைமையில் பணியமர்த்தப்பட உள்ளனர். மேலும் 147 கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட உள்ளது.
Sorry, no posts matched your criteria.