India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
குற்றாலம் செண்பகாதேவி அம்மன் கோவிலில் சித்திரை பௌர்ணமியை முன்னிட்டு 23ம் தேதி காலை அபிஷேகம்,தீபாராதனை,நண்பகலில் உச்சிகால அபிஷேகம்,இரவில் சிறப்பு அபிஷேகம்,தீபாராதனை நடைபெற்றது.பின்னா், வில்லிசை நிகழ்ச்சி, இன்று அதிகாலையில் சித்திரைப் பெளா்ணமி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
தொடா்ந்து, காலை 10.30 மணிக்கு தீா்த்தவாரி நடைபெறுகிறது. திருவிழாவை முன்னிட்டு கோயிலில் பக்தா்கள் அதிகளவில் கலந்து கொண்டனர்.
வேலூர் மாவட்டம், வள்ளி மலை ஶ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நேற்று சித்ரா பவுர்ணமி முன்னிட்டு சிறப்பு பூஜை மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. பக்தர்கள் சுவாமி தரிசனம் மேற்கொண்டனர். இதில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார் முருகப்பெருமான் பக்தர் துரைசிங்காரம் . உடன் வேலூர் மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை அறங்காவலர் குழு தலைவர் அசோகன் ஆகியோர் இருந்தனர்.
குன்னூர் அருகே ஜெகதளா துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (ஏப்.,24) குன்னூர் நகரம் உள்பட பல்வேறு இடங்களில் காலை 10 மணி முதல் 12 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் என்று மின்வாரியம் அறிவித்து இருந்தது. தற்போது மின் நிறுத்தம் ரத்து செய்வதாக குன்னூர் மின்வாரிய பொறியாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதனால் வழக்கம் போல மின்சாரம் இருக்கும்.
காஞ்சிபுரம் அடுத்த அய்யங்காரகுளம் பகுதியில் பாலாற்றின் கரையில் உள்ள 15 அடி ஆழம் கொண்ட நீராவி நடபாவி ஆழ் கிணற்றில் நேற்று(ஏப்.23) சித்திரை மாதம் பௌர்ணமியை ஒட்டி, ஒரு நாள் காஞ்சி வரதராஜர் பெருமாள் பூதேவி ஶ்ரீதேவி உடன் நடபாவி கிணற்றில் எழுந்தருளி திருமஞ்சனம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு ஆண்டுக்கு ஒரு முறை கம்பம் அருகே உள்ள மின் நிலையத்தில் அமைந்துள்ள முத்து மாரியம்மன் கோவில் வழிபாடு வெகு விமர்சியாக கொண்டாடப்படுவது வழக்கம். சுருளி ஆறு மின் நிலையத்தில் அமைந்துள்ள முத்துமாரி அம்மன் கோவில் ஊர் மக்கள் தீச்சட்டி எடுத்தும் வாய் பூட்டு போட்டும் அம்மனுக்கு நேர்த்திக் கடனை நிறைவேற்றுவார்கள். பக்தர்களுக்கு நேற்று முழுவதும் சிறப்பு அன்னதானம் வழங்கபட்டது.
பனையப்பட்டி கிராமத்தில் புஷ்கரம் வேளாண் அறிவியல் கல்லூரியில் இறுதி ஆண்டு பயிலும் மாணவிகள் கிராமத்தில் தங்கி விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை குறித்து செயல் விளக்க பயிற்சி நேற்று நடத்தினர். இந்த செயல் விளக்கத்தில் பனையப்பட்டி கிராமத்தில் வசித்து வரும் விவசாயி பழனியப்பன் தங்களின் அனுபவத்தை மாணவிகளிடம் பகிர்ந்து கொண்டார். மேலும் அந்த கல்லூரி மாணவிகள் வேளாண் திட்டங்கள் பற்றி கூறினர்.
உலக புத்தக நாளையொட்டி, தஞ்சாவூரில் நேற்று(ஏப்.23) வல்லம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பெரியாா் மணியம்மை நிகா்நிலைப் பல்கலைக்கழகம் சாா்பில் 500 புத்தகங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டன. இதில், பெரியாா் மணியம்மை நிகா்நிலைப் பல்கலைக்கழகத் துணைவேந்தா் ராமச்சந்திரன் புத்தகங்களை வழங்க, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் மதன்குமாா் பெற்றுக்கொண்டு, தலைமையாசிரியை சிவசங்கரியிடம் வழங்கினாா்.
குமரி மாவட்டம் இருளப்பபுரம் பகுதியில் கோட்டார் காவல் நிலைய போலீசார் நேற்று(ஏப்.23) வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது முகமது இம்ரான்(20), இப்னு நிஹால்(24) ஆகியோர் அரசால் தடை செய்யப்பட்ட 2.5 கிலோ போதை பொருளை இருசக்கர வாகனத்தில் விற்பனைக்காக எடுத்து சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. இருவரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஒப்படைத்து பின்னர் சிறையில் அடைத்தனர்.
நெல்லை மாநகரில் செயல்பட்டு வரும் நெல்லை லைப் என்ற வலைத்தள நிறுவனம் 2024ம் ஆண்டிற்கான புகைப்பட கலைஞர் விருதுகள் வழங்க உள்ளது. இதில் நெல்லை மாவட்டத்தில் உள்ள அழகிய காட்சிகளை சிறந்த முறையில் புகைப்படம் எடுத்தவர்களுக்கு இந்த விருது வழங்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளனர். விருது வழங்கும் நிகழ்ச்சி வரும் ஏப்.26ம் தேதி பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரியில் நடைபெற உள்ளது.
எடப்பாடி அருகேயுள்ள இருப்பாலி கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தன்(50). இவருக்கும், உறவினரான அதே பகுதியை சேர்ந்த முருகன் தரப்பினருக்கும் இடையே நிலத்தகராறு இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று(ஏப்.23) காலை கோவிந்தனிடம் முருகன் மற்றும் அவரது மகன்
தாமோதரன் ஆகியோர் தகராறில் ஈடுபட்டு, கத்தியால் கோவிந்தனை சரமாரியாக குத்தியுள்ளனர். இதில் அவர் உயிரிழந்தார். சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.