Tamilnadu

News April 25, 2024

கள்ளக்குறிச்சி: போதிய பேருந்து வசதியின்மையால் மக்கள் அவதி

image

சித்திரை பௌர்ணமியையொட்டி, பக்தர்கள் கிரிவலம் செல்வதற்காக திருவண்ணாமலைக்கு செல்வது வழக்கம். கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் திருவண்ணாமலை செல்வதற்காக நேற்று மாலை ஏராளமான பக்தர்கள் கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்திலும், அருகிலுள்ள அரசுப் போக்குவரத்துக் கழக பணிமைனை வளாகத்திலும் காத்திருந்தனர்.  25 பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்ட நிலையில் பக்தர்கள் அவதிக்குள்ளாகினர்.

News April 25, 2024

ராணிப்பேட்டை கலெக்டர் திடீர் ஆய்வு

image

அரக்கோணம் மக்களவைத் தொகுதியில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாலாஜா அரசு மகளிர் கலைக்கல்லூரியில் 5 அடுக்கு பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. இந்த வாக்கு எண்ணும் மையத்தில் நேற்று(ஏப்.23) இரவு மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான வளர்மதி திடீர் ஆய்வு செய்து அங்குள்ள பதிவேட்டில் கையெழுத்திட்டார். மேலும் அங்கிருந்த போலீசாரிடம் மிக விழிப்புணர்வுடன் பணியாற்ற வேண்டும் என்று தெரிவித்தார்.

News April 25, 2024

செல்லமுத்து மாரியம்மனுக்கு செடில் உற்சவம்

image

கீழ்வேளுர் அருகே உள்ள தேவூர் செல்லமுத்து மாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா கடந்த தமிழ் புத்தாண்டு அன்று தொடங்கி தொடர்ந்து நடந்து வருகிறது.
முக்கிய நிகழ்ச்சியான செடல் உற்சவம் நேற்று இரவு தொடங்கி இன்று காலை வரை நடைபெற்றது.
இதில் ஏராளமான பக்தர்கள் தங்கள் குழந்தைகளை செடல் மரத்தில் அமர்த்தி நேர்த்தி கடன் செலுத்தினர்.

News April 25, 2024

வரதராஜ பெருமாள் கோவிலில் ராமர் பட்டாபிஷேகம்

image

புதுச்சேரி காந்தி வீதி வேதபுரீஸ்வரர், வரதராஜ பெருமாள் கோவில் வளாகத்தில் உள்ள கோதண்டராம சுவாமிக்கு ராம நவமி உற்சவம், திருக்கல்யாண உற்சவம் மற்றும் ராமர் பட்டாபிஷேகம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
முக்கிய நிகழ்வாக வரும் 30 ஆம் தேதி தெப்ப உற்சவமும், 1 ஆம் தேதி முத்து பல்லாக்கு வீதியுலாவும், 2 ஆம் தேதி ஊஞ்சல் உற்சவமும் நடைபெற உள்ளது.

News April 25, 2024

மின்கம்பம் உடைந்து மின் ஊழியர் பலி

image

தூத்துக்குடி அண்ணா நகரை சேர்ந்தவர் பெத்து குமார், மின்வாரியத்தில் தற்காலிக ஊழியர். நேற்று இவர் காமராஜ் நகரில் ஒரு மின்கம்பத்தில் பழுது பார்த்துக் கொண்டிருந்த பொழுது மின்கம்பம் உடைந்து விழுந்து காயம் அடைந்தார் . பின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலன் இன்றி இறந்தார். தென்பாகம் போலீசார் விசாரணை நடத்தினர்.

News April 25, 2024

திருவாரூர் உதவி ஆய்வாளருக்கு எஸ்பி அட்வைஸ்

image

திருவாரூர் மாவட்டத்தில் அறிக்கை செய்த பணிபுரிந்து வரும் 19 நேரடி பயிற்சி உதவி ஆய்வாளர்களுக்கு, திருவாரூர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் நேற்று திருவாரூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் பணியின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்து அறிவுரைகளை வழங்கினார். இதில் கூடுதல் கண்காணிப்பாளர் ஏ.பிலிப்ஸ், தனிப்பிரிவு ஆய்வாளர் பி.ராஜா ஆகியோர் உடனிருந்தனர்.

News April 25, 2024

மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

image

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில், சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு, கிரிவலம் வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் இடங்களில், முறையாக அன்னதானம் வழங்கப்படுகிறதா என்று மாவட்ட ஆட்சித் தலைவர் தெ. பாஸ்கர பாண்டியன் நேற்று (23.04.2024) நேரில் சென்று ஆய்வு செய்தார். இதில், அரசு அலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.

News April 25, 2024

திருப்பூர் அருகே விபத்து; சம்பவ இடத்தில் மரணம்

image

வெள்ளகோவில் முத்தூர் ரோடு அறிவொளி நகரை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் மகன் ராஜேஷ்குமார் (34). இவருக்கு கடந்த ஏழு வருடங்களுக்கு முன்பு திருமணம் ஆகி கடந்த சில மாதங்களுக்கு முன்பு மனைவி தர்ஷினி உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளார்.இந்நிலையில் வெள்ளகோவில் கோவை ரெகுலர் சர்வீஸ் வேன் டிரைவர் ஆக வேலை பார்த்து வருகிறார். நேற்று நடந்து சென்ற போது பஸ் மோதி இவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

News April 25, 2024

வீட்டிலிருந்து வெளியே சென்ற மகள் மாயம், தந்தை புகார்

image

கடவூர் தாலுகா ஒடுவம்பட்டி சேர்ந்தவர் பாபு மகள் ராகவி (18). இவர் நர்சிங் கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு கடந்த 6 மாதங்களாக வீட்டில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் கரூர் சென்று வருவதாக கூறிச் சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் பாபு சிந்தாமணிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் நேற்று வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News April 25, 2024

திருச்சி:காங்கிரஸ் கமிட்டி ஆலோசனை கூட்டம்

image

திருச்சி மாநகா் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி ஆலோசனை கூட்டம் காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநகர் மாவட்ட தலைவர் எல். ரெக்ஸ் தலைமை வகித்து பேசியதாவது, திருச்சி மாநகா் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் கூட்டங்கள் மாநகர் பகுதியில் தனித்தனியாக வரும் ஜூன் 3ந்தேதிக்குள் நடத்த வேண்டும். இதில், பல்வேறு பிரிவுகளின் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

error: Content is protected !!