Tamilnadu

News June 15, 2024

பொதுமக்களுக்கு போலீசார் ஏற்படுத்திய விழிப்புணர்வு

image

விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ் கான் அப்துல்லா உத்தரவின் படியும், மாவட்ட சைபர் கிரைம் கூடுதல் காவல்கண்காணிப்பாளர் அசோகன் ஆலோசனையின் படியும், ராஜபாளையம் தெற்கு காவல் நிலைய போலீசார் சார்பில் ஜூன் 15ஆம் தேதி சைபர் குற்றங்களை தவிர்ப்பது குறித்த விழிப்புணர்வு கருத்துக்களை எடுத்துரைத்ததுடன் , துண்டு பிரசுரம் வழங்கி பொதுமக்கள் மத்தியில் போலீசார் இன்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

News June 15, 2024

விருதுநகரில் கிராஃபிக் டிசைனர் மாயம்

image

விருதுநகர்-சிவகாசி சாலையில் உள்ள ஹோட்டல் பின்புறம் உள்ள பகுதியைச் சேர்ந்தவர் காமராஜ். இவர் வீட்டிலிருந்து கிராஃபிக் டிசைனர் வேலை செய்து வருகிறார். மேலும் வீட்டின் அருகே கோழிப்பண்ணை வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று கோழிப்பண்ணைக்கு செல்வதாக கூறிச் சென்றவர் தற்போது வரை வீடு திரும்பவில்லை. இது தொடர்பாக அவரது மனைவி மகேஸ்வரி ஆமத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

News June 15, 2024

வேலூர் அருகே குடும்ப தகராறில் விபரீதம்

image

வேலூர் பனந்தோப்பு கிராமத்தை சேர்ந்த தம்பதி விஜயகாந்த் – கீதா(31). கணவன் – மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் நேற்று(ஜூன் 14) மீண்டும் தகராறு ஏற்படவே, விரக்தியடைந்த கீதா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவலறிந்த அரியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

News June 15, 2024

கோவில் தகராறு 16 பேர் மீது வழக்கு

image

தூத்துக்குடி அருகே உள்ள மேல கூட்டுடன் காட்டில் பத்திரகாளி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வரவு செலவு கணக்கு சம்பந்தமாக இரண்டு கோஷ்டியினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டுள்ளனர். இது சம்பந்தமாக நேற்று புதுக்கோட்டை போலீசில் புகார் அளிக்கப்பட்டதன் பேரில் இரு கோஷ்டிகள் சேர்ந்த 16 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

News June 15, 2024

சவுக்கு சங்கர் ஜாமீன் மனு 2-ஆவது முறையாக தள்ளுபடி

image

கஞ்சா வைத்திருந்ததாக தொடரப்பட்ட வழக்கில் சவுக்கு சங்கர் ஜாமீன் கோரிய மனு 2ஆவது முறையாக இன்று தள்ளுபடி செய்தது. சவுக்கு சங்கர் மீது கஞ்சா வைத்திருந்ததாக தேனி மாவட்டம் PC பட்டி காவல்துறையினரால் தொடரப்பட்ட வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்க கோரி மதுரை மாவட்ட போதை பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் யூடியூபர் சவுக்கு சங்கர் தாக்கல் செய்த ஜாமீனை மனு தள்ளுபடி செய்து நீதிபதி செங்கமலச்செல்வன் உத்தரவிட்டுள்ளார்.

News June 15, 2024

காஞ்சிபுரம்: கூகுள் பே மூலம் கொள்ளை!

image

காஞ்சிபுரம் மாவட்டம் அருகே ஸ்ரீபெரும்புதூர் சுற்றுவட்டாரங்களில் கத்தியை காட்டிக் மிரட்டி கூகுள் பே மூலமாக வழிப்பறி செய்து வருகின்றனர். இதன் தொடர்பாக இன்று கூகுள் பே மூலம் ரூ.2 லட்சம் வரை கொள்ளையடித்த வழக்கில் சென்னையை சேர்ந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

News June 15, 2024

போரூர் ஏரியில் மூழ்கி ஒருவர் பலி

image

போரூர் பாளையக்கார தெருவை சேர்ந்தவர் நித்தியானந்தம்(40). இவர் இன்று(ஜூன் 15) மாலை போரூர் ஏரியில் குளித்துக் கொண்டிருந்தபோது, அங்கிருந்த ஆகாயத்தாமரை செடிகளில் சிக்கி தண்ணீரில் மூழ்கியுள்ளார். தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி நித்தியானந்தத்தை சடலமாக மீட்டனர். போரூர் போலீசார் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News June 15, 2024

தாலுகா அலுவலகங்களில் ஜமாபந்தி: ஆட்சியர் அறிவிப்பு

image

சேலம் மாவட்ட தாலுகா அலுவலகங்களில் வரும், 18 – 26 வரை ஜமாபந்தி நடக்கிறது. இதில் பட்டா மாறுதல், இலவச வீட்டுமனை பட்டா, பிறப்பு, இறப்பு சான்றிதழ், ரேஷன் கார்டு, ஆதரவற்ற விதவை சான்றிதழ் மற்றும் முதியோர், மாற்றுத்திறனாளி, விதவை உதவித்தொகை, நில அளவை, குடிநீர், தெரு விளக்கு, சாலை வசதி, பசுமை வீடு, சிறு குறு விவசாயி சான்றிதழ் பெற மனுக்கள் தரலாம் என கலெக்டர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.

News June 15, 2024

அஞ்சல் துறை ஓய்வூதியர்கள் குறைகேட்புக் கூட்டம்

image

கோவை அஞ்சல் மண்டலத்தின் ஓய்வூதியதாரர்கள் குறைகேட்பு கூட்டம் ஜூலை 3 ஆம் தேதி காணொலி காட்சி மூலம் நடைபெற உள்ளது. எனவே ஈரோடு கோட்டத்திற்குட்பட்ட ஓய்வூதியதாரர்கள் தங்களது புகார்கள், மனுக்களை தபால் அல்லது மின்னஞ்சல் மூலம் வரும் 20 ஆம் தேதிக்குள் முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர், ஈரோடு கோட்டம், ஈரோடு-638001 என்ற முகவரிக்கு அனுப்பலாம் என ஈரோடு அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் கி.கோபாலன் தெரிவித்துள்ளார்.

News June 15, 2024

சி.எஸ்.ஐ.பேராய மாமன்ற தேர்தலில் வெற்றி

image

குமரி மாவட்ட சி.எஸ்.ஐ பேராய மாமன்ற நிர்வாகிகள் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. தேர்தலில் பொருளாளராக டாக்டர் ஜெயஹர் ஜோசப் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரை அகஸ்தீஸ்வரம் பேரூர் அதிமுக செயலாளர் சிவபாலன் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். அருகில் பேராய மாமன்ற உறுப்பினர்கள் அருட்திரு டேனியல் தேவதாசன் , ஆபிரகாம், வேதணி , ஜோசப் ராபின், ஆனந்த் ஆகியோர் உள்ளனர்.

error: Content is protected !!