India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரை மாவட்டத்தில் சிறிய அளவிலான ஜவுளிப் பூங்காஅமைக்க விரும்புவோா் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் சங்கீதா தெரிவித்துள்ளார். இதுகுறித்த கூடுதல் விவரங்களுக்கு துணை இயக்குநா், மண்டல துணிநூல் துணை இயக்குநா் அலுவலகம், 39, விஸ்வநாதபுரம் மெயின்ரோடு, மதுரை -625 014 என்ற முகவரியில் மண்டல துணை இயக்குநா் அலுவலகத்தை நேரடியாகவோ அல்லது 96595 32005 கைப்பேசி எண்களில் அழைக்கலாம்
சிவகங்கை மாவட்டத்தில் மத்திய மோட்டார் வாகன விதி எண்.5-ன் படி, இந்திய மருத்துவ கவுன்சிலில் பதிவு பெற்ற மருத்துவர்கள் மட்டுமே, சாரதி மென்பொருளை பயன்படுத்தி, விண்ணப்பதாரர்களுக்கான
மருத்துவச் சான்றிதழினை மின்னணு வாயிலாக பதிவேற்றம் செய்ய இயலும் என சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் நேற்று (ஜூன் – 10) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் கவிஞா் ராமலிங்கம் அரசு மகளிா் கலைக் கல்லூரியில், 2024-25 ஆம் கல்வியாண்டிற்கான இளநிலைப் பட்டப் படிப்பு மாணவிகள் சோ்க்கை சிறப்பு இட ஒதுக்கீடு கலந்தாய்வு கடந்த மாதம் நடைபெற்றது. இதில், 26 மாணவிகள் சோ்க்கை பெற்றனா். வணிகவியல், பொருளியல் துறைகளுக்கு முதல் கட்டப் பொதுக் கலந்தாய்வு நேற்று திங்கள்கிழமை தொடங்கியது. நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனா்.
கோவை கலெக்டர் கிராந்திகுமார் பாடி நேற்று விடுத்துள்ள செய்தி குறிப்பில் திருநங்கைகளின் விவரங்களை பதிவு செய்து அடையாள அட்டை, ஆதார் அட்டையில் திருத்தம், வாக்காளர் அட்டை, முதல்வர் மருத்துவக் காப்பீட்டு அட்டை, ஆயுஷ்மான் பாரத் அட்டை வழங்கிட வருகிற 21ம் தேதி திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம் கோவை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதனை திருநங்கைகள் பயன்படுத்தி பயன்படலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நேற்று மக்கள் குறைதீா் முகாம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் கோ.லட்சுமிபதி தலைமை வகித்து பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 344 மனுக்களை பெற்றுகொண்டாா் . மனுக்கள் மீது உரியநடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறைசார்ந்த அலுவலா்களுக்கு அவா் அறிவுறுத்தினாா்.
வந்தவாசி அருகே வெளியம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த எட்டியப்பன் -ஆதிலட்சுமி தம்பதி. நேற்று முன்தினம் இவர்களது வீட்டில் இரவு நேரத்தில் வீட்டின் பூட்டை உடைத்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த ஏழு சவரன் தங்க நகை மற்றும் 50 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடி சென்றனர். ஆதிலட்சுமி அளித்த புகாரின் பேரில் கீழ் கொடுங்கலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம், மயிலம் அடுத்த, ஒலக்கூர் மேற்கு ஒன்றியம், ஊரல் திமுக கிளைச் செயலாளர் நந்தகோபால் இல்ல மஞ்சள் நீராட்டு விழாவில் செஞ்சி சிறப்பு நிலை பேரூராட்சி மன்றத் தலைவர் மொக்தியார் மஸ்தான் கலந்து கொண்டார். உடன் ஒலக்கூர் மேற்கு ஒன்றியச் செயலாளர் இராசாராம் மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
திருவாரூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு வருடங்களாக ITK என்ற திட்டம் மூலம் பல தன்னார்வலர்கள் இணைந்து மாணவர்களிடம் மாலை நேரங்களில் பாடம் நடத்தி வருகின்றனர். இத்திட்டம் கொரோனா காலங்களில் மாணவர்களிடம் இருந்த கற்றல் இடைவெளியை நீக்க கொண்டு வரப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு மே மாதம் முதல் ITK மையம் செயல்படவில்லை பள்ளி திறந்தும் இன்று வரை வகுப்பு நடத்துவதற்கு அனுமதி வரவில்லை என வருத்தத்துடன் கூறி வருகின்றனர்
சிவகங்கை மாவட்ட ஆட்சியரக அலுவலக வளாகப் பகுதியில் நெடுஞ்சாலை துறை அலுவலகம் முன்பு தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்புக்கொடி ஏந்தி நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத் துணைத் தலைவர் ராஜா, சங்க நிர்வாகிகள் , தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.
தொட்டியம் அருகே பாலசமுத்திரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நேற்று மாணவர்களை வரவேற்கும் விழா, நூலக திறப்பு விழா, மரக்கன்று நடும் விழா, இலவச பாடப்புத்தகம் வழங்கும் விழா, இலவச ஆதார் மைய துவக்க விழா, ஆகிய ஐம்பெரும் விழா நடைபெற்றது இவ்விழாவிற்கு வட்டார கல்வி அலுவலர் தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தார் பள்ளியின் தலைமை ஆசிரியர் கீதா ராணி முன்னிலை வகித்தார் மற்றும் ஊர் பொதுமக்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்
Sorry, no posts matched your criteria.