Tamilnadu

News April 25, 2024

ஏணியிலிருந்து தவறி விழுந்து பீகார் சிறுவன் பலி

image

காங்கேயம் பகுதியில் உள்ள அரிசி ஆலையில் பீகார் மாநிலம் ஜெயின் போர் கிராமத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் வேலை பார்த்து அங்குள்ள விடுதியில் தங்கி வருகின்றனர். இந்நிலையில் ராஜேஷ் பைட்டா என்பவரது மகன் குமாரும் தனது உறவினர்களுடன் தங்கி இந்நிலையில் பவன் குமார் வயது 12 சிறுவன் ஏணியில் ஏறி துணியை எடுக்க முயன்ற போது கீழே விழுந்து பரிதாபமாக நேற்று உயிரிழந்தார்.

News April 25, 2024

பேருந்துகளை சிறை பிடித்த மக்களால் பரபரப்பு ஏற்பட்டது

image

பள்ளிபாளையம் திருச்செங்கோடு சாலையில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திருச்செங்கோடு சாலையில் 50 சதவீதம் பணிகள் நிறைவு பெற்ற நிலையில், அதிகாரப்பூர்வமாக கனரக வாகனங்கள் செல்வதற்கு அறிவிப்பு வராத நிலையில், இரவு நேரத்தில் விதிகளை மீறி அரசு மற்றும் தனியார் பேருந்துகள் வந்ததால், பொதுமக்கள் நேற்று இரவு தனியார் பேருந்து ஒன்றை சிறை பிடித்தனர்.

News April 25, 2024

எஸ்பி தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

image

வைத்தீஸ்வரன் கோவிலில் நேற்று நகரத்தார் திருவிழா நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்ற நிலையில் எஸ்பி மீனா மேற்பார்வையில் கூடுதல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். டிஎஸ்பி லாமேக் 3 ஆய்வாளர்கள் 3 உதவி ஆய்வாளர்கள் 10 காவல் ஆளினர்கள் 15 சிறப்பு காவல் படை காவலர்கள் 61 ஊர்க்காவல் படை காவலர்கள் பொது மக்களுக்கு பாதுகாப்பு அளித்தனர்.

News April 25, 2024

தென்காசி அருகே விபத்து; சம்பவ இடத்தில் மரணம்

image

தென்காசி அருகே உள்ள ரவண சமுத்திரம் மாலிக் நகரை சேர்ந்தவர் பிரம்ம நாயகம் (60) இவர் நேற்று வீட்டு அருகே உள்ள ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது நெல்லையில் இருந்து செங்கோட்டை சென்ற ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இது குறித்து தென்காசி ரயில்வே போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 25, 2024

திருச்சியில் வெப்ப அலை வீசும், கலெக்டர் எச்சரிக்கை,

image

திருச்சியில் கடந்த சில நாட்களாக வெப்பம் அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கரூர்,திருச்சி,அரியலூர் மாவட்டங்களில் நேற்றும் இன்றும் வெப்ப அலை வீசக் கூடும் . எனவே பொதுமக்கள் போதுமான அளவு தண்ணீர் குடித்து பகல் 12 மணிக்கு மேல் வெளியில் செல்ல வேண்டாம் என்று திருச்சி மாவட்ட மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.

News April 25, 2024

விருதுநகர் அருகே இரு தரப்பினர் மோதல்: 9 பேர் மீது வழக்கு

image

விருதுநகர் அருகே தம்பநாயக்கன்பட்டி காலனி தெருவை சேர்ந்தவர் பாண்டியராஜன்.இவரிடம் அதே பகுதியைச் சேர்ந்த மகாலிங்கம் கருத்தபாண்டி முருகன் முனியசாமி ஆகியோர் ஒன்று சேர்ந்து நாட்டாமை ராஜாராம் என்பவரை மாற்ற சொல்லி தகராறு செய்து வந்துள்ளனர்.இதற்கு பாண்டியராஜன் மறுப்பு தெரிவித்துள்ளார்.இந்நிலையில் நேற்று இரு தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. சம்பவம் தொடர்பாக 9 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு

News April 25, 2024

மினி பேருந்துகள் இயக்க கோரிக்கை

image

திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட ராஜாஜிபுரம், பூங்கா நகர், காக்களூர் ஊராட்சிகள் உள்ளது. இந்த பகுதிகளில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கிருந்து தினசரி ஏராளமானோர் அரசு, தனியார் நிறுவனங்களில் வேலைக்கு செல்கின்றனர். மினி பேருந்துகள் இயக்கினால் வேலைக்கு செல்கின்றவர்கள், மாணவ, மாணவிகள் என அனைவரும் பயனடைவார்கள். எனவே, பஸ் இயக்க வேண்டும்’என மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்

News April 25, 2024

பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு

image

பவானி மூன்ரோட்டிலுள்ள முனியப்பன் கோவிலில் ஜல்லிக்கட்டை மையமாக வைத்து தயாரிக்கப்படும் காளமாடு கண்ணுபட்டது என்ற சினிமா பட பூஜை விழா இன்று
நடந்தது. அந்தியூர், கள்ளிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் படமாக்க திட்டமிடப்பட்டு எடுக்கப்பட்டு வருகிறது. இதில் கதாநாயகனாக அறிமுகமாகும் அச்சு, கதாநாயகி தேஜாஸ்ரீ இருவரும் புதுமுகங்கள். ஜல்லிக்கட்டை மையமாக வைத்து காமெடி, காதல் கலந்த கதையாக எடுக்கப்படுகிறது.

News April 25, 2024

அரியலூர்: மக்கள் போராட்டம்

image

அரியலூர் மாவட்டம் நாகமங்கலம் ஊராட்சியில் அண்ணா நகர் பகுதியில் குடிநீர் கேட்டு நூற்றுக்கணக்கான பொதுமக்கள் நாகமங்கலம் ஊராட்சி அலுவலகம் முன்பு நடத்தினார். பின்பு அரசு அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி குடிநீர் பிரச்சினை உடனடியாக தீர்க்க உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்.

News April 25, 2024

குமரி: திருட்டு வழக்கில் தந்தை-மகன் கைது!

image

நாகர்கோவில் அருகே தலைமை ஆசிரியை ஒருவரின் செயினை பறித்த வழக்கில் தந்தை-மகன் ஆகியோரை நேற்று(ஏப்.23) போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், இருவரும் மாங்கோடு பகுதியை சேர்ந்த சிவா, அவரது தந்தை சிவசங்கர் என தெரிந்தது. தொடர்ந்து, இருவரும் சேர்ந்து ராஜாக்கமங்கலம் பகுதி வீடுகளில் திருடிய டிவி, குத்துவிளக்கு, கேஸ் சிலிண்டர் உள்ளிட்டவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

error: Content is protected !!