Tamilnadu

News April 25, 2024

வேலூர் மாவட்ட‌ மக்களுக்கு கலெக்டர் அறிவிப்பு

image

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையின்படி இன்று (ஏப்ரல் 24) வேலூரில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கக்கூடும் என்பதால் வேலூர் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் நண்பகல் 12 மணி முதல் மாலை 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்குமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் சுப்புலெட்சுமி நேற்று (ஏப்ரல் 23) தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

News April 25, 2024

சென்ட்ரலில் தற்கொலை.. தொடரும் விசாரணை

image

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் முதல் மாடியில் நேற்று(ஏப்.23) இளம்பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், அவர் கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. மேலும், தாயார் இறந்த விரக்தியில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. சரளாவுக்கும் அவரது கணவனுக்கும் இடையே பல நாட்கள் பிரச்னை இருந்து வந்ததாகவும் தகவல்.

News April 25, 2024

நெல்லை அருகே 2 பெண்கள் கைது

image

கடையம் அருகே மயிலப்பபுரத்தில் உள்ள தனது மகளை பார்ப்பதற்காக சேர்ந்தமரத்தை சேர்ந்த பால்தாய் என்பவர் தனியார் பேருந்தில் வந்தபோது அவரிடம் 500 ரூபாய் பிட்-பாக்கெட் அடித்துள்ளனர். இது தொடர்பாக பங்களா சுரண்டை பகுதியை சேர்ந்த அஞ்சலி(25), பவானி(24) ஆகிய இருவர் மீதும் கடையம் சப்-இன்ஸ்பெக்டர் வேல்முருகன் வழக்கு பதிவு செய்து இன்று கைது செய்தார்.

News April 25, 2024

டன் கணக்கில் குவிந்த குப்பைகள்!

image

மதுரை சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு கள்ளழகர் வைகையாற்றில் இருக்கும் வைபவத்தை காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். பல்வேறு இடங்களில் அன்னதானம் வழங்கப்பட்ட நிலையில் மதுரை மாநகராட்சியின் பல்வேறு இடங்களில் டன் கணக்கில் குப்பைகள் குவிந்துள்ளது. இதனை அகற்றும் பணியில் நள்ளிரவு முதல் 300-க்கும் மேற்பட்ட மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

News April 25, 2024

மதுரையில் வணிகர்களுக்கு அதிரடி உத்தரவு

image

மக்களவைத் தோ்தல் 2-ஆம் கட்ட வாக்குப்பதிவையொட்டி, மதுரை மாவட்டத்தில் பணியாற்றும் வெளி மாநிலத் தொழிலாளா்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளிக்க தொழிலாளா் நலத் துறையின் உதவி ஆணையா் மு.காா்த்திகேயன் தெரிவித்துள்ளார். மேலும் விடுப்பு வழங்காத நிறுவனங்களின் உரிமையாளா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இதுதொடா்பாக 94453 98761, 99425 41411மற்றும், 0452 2604388 என்ற தொலைபேசி எண்களில் புகார் அளிக்கலாம்.

News April 25, 2024

சித்திரை பௌர்ணமி சிறப்பு மருத்துவ முகாம்

image

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் பிரசித்தி பெற்ற சித்திரை பௌர்ணமி கிரிவலம் நேற்று முதல் வெளி மாவட்ட மற்றும் வெளி மாநில பக்தர்கள் லட்சக்கணக்கானோர் கிரிவலம் சென்றனர் அவர்களுக்கு மருத்துவ முதலுதவி செய்யும் வகையில் ரெட் கிராஸ் சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது இதில் இந்திர ராஜன் மண்ணுலிங்கம் கிருஷ்ணமூர்த்தி ஏற்பாடுகள் செய்தனர்

News April 25, 2024

வேலூர் மாவட்டம் முழுவதும் 8 பேர் மீது வழக்கு பதிவு

image

வேலூர் மாவட்டம் முழுவதும் நேற்று (ஏப்ரல் 23)  காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் நடத்திய சோதனையில் 78 மதுபாட்டில்கள், 30 லிட்டர் கள்ளச்சாராயம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக ஒரே நாளில் 8 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார். ‌

News April 25, 2024

ராமநாதபுரம்: சித்ரா பௌர்ணமி விழா‌வில் OPS பங்கேற்பு!

image

ராமநாதபுரம் மாவட்டம் பிரப்பன்வலசை கிராமத்தில் உள்ள ஸ்ரீ பாம்பன் சுவாமி திருக்கோயிலில் சித்ரா பௌர்ணமி விழா நேற்று (ஏப்ரல் 23) வெகு விமரிசையாக நடந்தது. முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், ஆர்.தர்மர் எம்பி, முன்னாள் எம்பி கோபாலகிருஷ்ணன், மண்டபம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சீனிமாரி , ராமநாதபுரம் ஒன்றிய செயலாளர் முத்துமுருகன், உள்பட பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

News April 25, 2024

தவறான செய்தி பரப்புபவர்களுக்கு எச்சரிக்கை

image

கள்ளழகர் திருவிழாவில் நேற்று இருவருக்கு கத்தி குத்து விழுந்தது. இதில் சோணை என்பவர் பலியானார். கார்த்திக் என்பவர் மனைவிக்கும் சதீஷ் என்பவருக்கும் ஏற்பட்ட திருமணத்திற்கு மீறிய உளவு, காரணமாக இந்த கத்தி குத்து சம்பவம் நடைபெற்றது. ஆனால் சமூக வலைத் தளங்களில் திருவிழாவில் ஏற்பட்ட தகராறு என செய்தி பரவுகிறது. தவறான தகவலை பரப்பும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகர போலீசார் அறிவித்துள்ளனர்.

News April 25, 2024

புதுக்கோட்டை: எதிர்பாராத விபத்து;சம்பவ இடத்தில் மரணம்

image

புதுக்கோட்டையில் மின்சாரம் பாய்ந்து பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்
புதுக்கோட்டை பாரதி நகரை சேர்ந்தவர் சுபா. இவர் நேற்று வீட்டில் மோட்டாருக்கான சுவிட்சை போட்டார். அப்போது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே சுபா பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து கணேஷ் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!