Tamilnadu

News April 28, 2025

விருதுநகர்: மே1 ஆம் தேதி கிராம சபை கூட்டம்

image

விருதுநகர் மாவட்டத்திற்குட்பட்ட 450 கிராமஊராட்சிகளில் தொழிலாளர் தினமான 01.05.2025 அன்று கிராமசபைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் கிராமஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம் குறித்து விவாதித்தல் (01.04.2024 முதல் 31.03.2025 வரை), இணையவழி மனைப்பிரிவு மற்றும் கட்டட அனுமதி வழங்குதல் குறித்து விவாதிக்கப்படவுள்ளது.

News April 28, 2025

தேனியில் கிராம சபைக் கூட்டம் – கலெக்டர் தகவல்

image

தொழிலாளர் தினத்தை முன்னிட்டு தேனியில் உள்ள 130 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் (மே.01) அன்று முற்பகல் 11.00 மணியளவில் தனி அலுவலர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலரால் நடத்தப்பட உள்ளது.அனைத்து கிராம ஊராட்சிகளைச் சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என தேனி மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங் கூறியுள்ளார்.

News April 28, 2025

பாண்டிச்சேரியில் பாகிஸ்தான் பெண்

image

பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா பல நடவடிக்களை எடுத்து வருகிறது. இந்நிலையில் புதுவையில் லாஸ்பேட்டை பகுதியைச் சேர்ந்த ஹனீப்கான்(39) கடந்த 2013-ம் ஆண்டு அவரின் உறவினரான பாகிஸ்தானைச் சேர்ந்த பஷியாபானு (38) என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் பஷியா பானு விசா கெடு முடிவடைந்த நிலையில் அவர் நாட்டை விட்டு செல்லாமல் இருப்பதால் அவர் மீது லாஸ்பேட்டை போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

News April 28, 2025

ஒருமுறை இந்த கோயிலுக்கு போனால் போதும்

image

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது லட்சுமி நரசிம்ம பெருமாள் கோயில். இங்குள்ள லட்சுமி நரசிம்மரை வழிபட்டால் செல்வம் பெருகும். கடன் பிரச்சினை அகலும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். செவ்வாய் தோஷம் நீங்கும். திருமணம் கைகூடும். சாந்த மூர்த்தியாக காட்சிதரும் நரசிம்மரை வணங்கினால் கணவன், மனைவி இடையே உள்ள பிரச்னைகள் தீர்ந்து இணக்கம் அதிகரிக்கும் என்பது ஐதீகம். ஷேர் பண்ணுங்க

News April 28, 2025

வேலூர் மக்களை கவரும் பாலமதி மலை பயணம்

image

Weekendல் ஜாலியாக பைக் ரைடு அல்லது ட்ரெக்கிங் போக சிறந்த இடமாக பாலமதி மலை உள்ளது. மேகங்களால் சூழப்பட்ட இயற்கை எழில் கொஞ்சும் இந்த மலையில் செம்மீசைச் சின்னான், பச்சைப் பஞ்சுருட்டான,மைனா, வெள்ளை-தொண்டை மீன்கொத்தி,பனங்காடை, மற்றும் ரெட்டைவால் குருவி போன்ற பறவைகள் காணப்படுகின்றன. பக்கத்துலயே எங்கயாச்சும் ரைடு போகணும் அதும் பட்ஜெட்ல போகணும்னு சொல்ற உங்க நண்பருக்கு ஷேர் பண்ணி ட்ரிப்க்கு கூப்பிடுங்க

News April 28, 2025

திருவண்ணாமலை சிறப்புகள்

image

1. தி.மலை தலத்தைச் சுற்றி 1008 லிங்கங்கள் புதைந்து இருப்பதாகக் கூறப்படுகிறது.
2. வினையை நீக்கும் மலை உருவில் திருவண்ணாமலை உள்ளது.
3. இங்கு தான், முதன் முதலில் லிங்க வழிபாடு தொடங்கியது.
4. கார்த்திகை தீபத்துக்கு நிகராக இதுவரை எந்த ஆலயத்திலும் ஜோதி வழிபாடு நடந்ததில்லை.
5.தி.மலை மலை உச்சியில் தீபம் ஏற்றப்பட்டதும் வணங்கினால், பாவம் நீங்கி பிறவிப் பிணி அகழும் என்பது ஐதீகம். ஷேர் பண்ணுங்க

News April 28, 2025

கள்ளக்குறிச்சிக்கு மழை வாய்ப்பு

image

குமரிக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதே போல தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. எனவே இன்றும் நாளையும் கள்ளக்குறிச்சி உட்பட 16 மாவட்டங்களில் லேசானது முதல் கனமழை வரை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News April 28, 2025

கோர விபத்தில் ஓசூரை சேர்ந்த 5 பேர் பலி

image

ஓசூரை சேர்ந்த 7 பேர் காரில் திருப்பதிக்கு சென்றுள்ளனர். அப்போது பூதலப்பட்டு – நாயுடுப்பேட்டை அருகே கார் சென்று கொண்டிருக்கும்போது முன்னே சென்ற கன்டெய்னர் லாரி மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில் காரில் பயணம் செய்த 5 நபர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். பலத்த காயமடைந்த நிலையில் 2 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

News April 28, 2025

காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்புத் துறை தொலைபேசி எண்!

image

காஞ்சிபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறைக்குத் தொடர்பு கொள்வதற்கான தொலைபேசி எண்கள்:
▶️ஊழல் தடுப்புத் துறை அலுவலகம்: 044-27238433
▶️ஊழல் மற்றும் கண்காணிப்புத் துறை இயக்குநர்: 044-22310989, 22321090, 22321085, 22342142
▶️காவல் துணை கண்காணிப்பாளர், ஊழல் மற்றும் கண்காணிப்பு பிரிவு: 044-22346050
இதனை உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யவும்..,

News April 28, 2025

சென்னையில் பாகிஸ்தான் நபர் உயிரிழப்பு

image

சென்னை அமிஞ்சிக்கரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த பாகிஸ்தானியர் உயிரிழந்தார். உடனிருந்த அவரது தாயிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மருத்துவ பரிசோதனைகளுக்குப் பிறகு மரண காரணம் வெளியிடப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இறந்தவரையும் அவரது தாயாரையும் பாகிஸ்தான் அனுப்பும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

error: Content is protected !!