India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட கதிர் ஆனந்த் வாக்குகள் 2,15,838 வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் மொத்தம் 5,66, 276 வாக்குகள் பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக கூட்டணி வேட்பாளர் ஏசி சண்முகம் 3,50,661 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார், அதிமுக கூட்டணி வேட்பாளர் பசுபதி 1, 16, 863 வாக்குகள் பெற்றார்.
திமுக வெற்றி 2024 மக்களவைத் தேர்தலில் திருவண்ணாமலை தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் சி. என். அண்ணாத்துரை 5,16,684 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து களம் கண்ட அதிமுக வேட்பாளர் கலியபெருமாள்2,97,024 வாக்குகளும், பாஜக வேட்பாளர் அஸ்வத்தாமன் 1,50,011 வாக்குகளும், நாதக வேட்பாளர் ரமேஷ்பாபு 78506 வாக்குகளும் பெற்று தோல்வியைத் தழுவினர்.
நாமக்கல் அருகே அமைந்துள்ள விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் வாக்கு என்னும் மையத்தில் திமுக வேட்பாளர் மாதேஸ்வரன் 444950 வாக்கு எண்ணிக்கையிலும் அதிமுக வேட்பாளர் தமிழ்மணி 416763 வாக்கு எண்ணிக்கையும் திமுக மற்றும் அதிமுக இடையே 28137 வாக்கு வித்தியாசத்தில் நாமக்கல் பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் மாதேஸ்வரன் முன்னணியில் உள்ளார்.
திருச்சியில் கடந்த 14.5.2024ம் தேதி நடந்து சென்ற நபரிடம் கத்தியை காட்டி ரூ.1000 பணம் மற்றும் செல்போன் பறித்து சென்றதாக திவாகர் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் விசாரணையில் இவர் மீது திருச்சி காவல் நிலையங்களில் 8 வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரிய வந்ததால் ,இவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்க திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி இன்று உத்தரவிட்டார்.
கோவை மக்களவை தொகுதி 20வது சுற்று வாக்கு எண்ணிக்கையின் படி திமுக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. 20வது சுற்று முடிவின் படி திமுக 507018 வாக்குகளும், பாஜக 405736 வாக்குகளும் அதிமுக 208238 வாக்குகளும் நாம் தமிழர் கட்சி 75580 வாக்குகளும் பெற்றுள்ளது. தற்போதைய நிலவரப்படி பா.ஜ.க.வேட்பாளர் அண்ணாமலையை விட தி.மு.க.வேட்பாளர் கணபதி ராஜ்குமார் 101282 வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.
2024 மக்களவைத் தேர்தலில் வட சென்னை தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி 4,78,207 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து களம் கண்ட அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோ 1,51,573 வாக்குகளும், பாஜக வேட்பாளர் பால் கனகராஜ் 1,10,106 வாக்குகளும் பெற்று தோல்வியை தழுவியுள்ளனர்.
திருச்சி மக்களவைத் தொகுதி பொது பார்வையாளர்கள் ராஜிவ்பிரசாத், தினேஷ்குமார் ஆகியோர் முன்னிலையில் இன்று திருச்சி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சித் தலைவருமான பிரதீப் குமாரிடமிருந்து வெற்றி பெற்றதற்கான சான்றிதழை மதிமுக வேட்பாளர் துறை வைகோ பெற்றுக் கொண்டார். இந்நிகழ்வில் திமுக அமைச்சர் அன்பின் மகேஷ் பொய்யா மொழி உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
சிவகங்கை மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் 4 லட்சத்திற்கும் மேல் வாக்கு பெற்று வெற்றியை தன் வசப்படுத்தியுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட சேவியர் தாஸ் 2 லட்சமும், பாஜக வேட்பாளர் தேவநாதன் 1 லட்சத்திற்கு மேல் வாக்குகள் பெற்றனர். இத்தொகுதியில் காங்கிரஸ் “கை” ஓங்கியுள்ளது.
விருதுநகர் பாராளுமன்ற தொகுதி 19 ஆவது சுற்றின் முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் 19686 வாக்குகளும் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன்- 19205 வாக்குகளும், பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார்- 7531 வாக்குகளும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கௌஷிக்- 3376 வாக்குகளும் பெற்றுள்ளனர். இந்நிலையில் 19 ஆவது சுற்றின் முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் 2804 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.
ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் 29 வது சுற்றில் திமுக கூட்டணி வேட்பாளர் டி.ஆர்.பாலு 7,26,756 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் பிரேம்குமார் 2,60,984 வாக்குகளும், பாஜக கூட்டணி தமாக வேட்பாளர் வேணுகோபால் 2,01,405 வாக்குகளும், நாதக வேட்பாளர் 1,34,464 வாக்குகளும் பெற்றுள்ளனர். திமுக வேட்பாளர் டி ஆர் பாலு 4,65,772 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
Sorry, no posts matched your criteria.