India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் பதிவு செய்யப்பட்ட வாக்குகள் தற்போது விழுப்புரம் அரசு கலை கல்லூரி வளாகத்தில் எண்ணப்பட்டு வருகிறது. இதில் 19 ஆம் சுற்று முடிவில் விசிக – 4,34,111, அதிமுக – 3,66,105, பாமக – 1,65,383, நாம் தமிழர் 52,783 வாக்குகள் பெற்றுள்ளனர். இதில் விசிக வேட்பாளர் ரவிக்குமார் 68,006 வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.
நாமக்கல் மக்களவை தொகுதியில் 14வது சுற்றில் திமுக கூட்டணியின் கொமதேக வேட்பாளர் மாதேஸ்வரன் 3,26,378 வாக்குகள் பெற்று 25,084 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். அதிமுக வேட்பாளர் ராகா தமிழ்மணி 3,01,294 வாக்குகள் பெற்று 2ஆம் இடத்தை பிடித்தார். பாஜக வேட்பாளர் ராமலிங்கம் 72, 672 வாக்குகள் பெற்று 3ஆம் இடத்தை பிடித்தார்.
விருதுநகர் பாராளுமன்ற தொகுதி 15 ஆவது சுற்றின் முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர்- 19696 வாக்குகளும், தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன்- 19205 வாக்குகளும், பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார்- 7531 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கௌஷிக்- 3376 வாக்குகளும் பெற்றுள்ளனர். 15 ஆவது சுற்றின் முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் 2814 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.
கரூர் மக்களவைத் தொகுதியில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதிகளில் 18-வது சுற்று முடிவு . திமுக கூட்டணி (காங்கிரஸ்) :4,85,131, அதிமுக / கூட்டணி (அதிமுக) :3,31,033, வாக்குகள் பெற்றுள்ளனர். அதிமுக வேட்பாளர் தங்கவேளை விட காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜோதிமணி 1,53,098 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
வேலூர் மக்களவைத் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்ட நடிகர் மன்சூர் அலிகான் 17வது சுற்று முடிவில் மொத்தம் 2572 வாக்குகள் பெற்றுள்ளார். நாம் தமிழர் கட்சியில் போட்டியிட்ட மகேஷ் ஆனந்த் 46,902 வாக்குகள் பெற்றுள்ளார். இதே போல் 17 ஆவது சுற்று முடிவில் நோட்டாவிற்கு 7832 வாக்குகள் அளித்துள்ளனர். தொடர்ந்து திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் முன்னிலை வகித்து வருகிறார்.
ஈரோடு மக்களவை தொகுதியில் 8வது சுற்று முடிவடைந்த நிலையில் திமுக வேட்பாளர் பிரகாஷ் 219129 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்துள்ளார். அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் 1,33,631 வாக்குகள் பெற்று 2ஆம் இடத்தில் உள்ளனர்.
நாதக வேட்பாளர் கார்மேகம் 34,041 வாக்குகள் பெற்றுள்ளார். நடந்து முடிந்த 8 சுற்றுகளில் பிரகாஷ் 85498 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் 24 வது சுற்றில் திமுக கூட்டணி வேட்பாளர் டி.ஆர்.பாலு 6,23,146 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் பிரேம்குமார் 2,28,000 வாக்குகளும், பாஜக கூட்டணி தமாக வேட்பாளர் வேணுகோபால் 1,70,939 வாக்குகளும், நாதக வேட்பாளர் 1,16,231 வாக்குகளும் பெற்றுள்ளனர். திமுக வேட்பாளர் டி ஆர் பாலு 3,95,146 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளாா்.
வேலூர் தொகுதியில் 18 ஆம் சுற்று வாக்கு எண்ணிக்கையில் தி.மு.க வேட்பாளர் கதிர் ஆனந்த் 539073 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். பா. ஜ.க வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 335, 693 வாக்குகள் பெற்று 2 ஆம் இடத்திலும், அ.தி.மு.க வேட்பாளர் பசுபதி 110, 326 வாக்குகள் பெற்று 3 ஆம் இடத்தில் உள்ளனர். 18 சுற்று முடிவில் 203,380 வாக்குகள் கூடுதலாக பெற்று திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் முன்னிலையில் உள்ளார்.
தென்காசி பாராளுமன்ற தொகுதி 19 ஆவது சுற்றில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. தற்போது வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி ராணி ஸ்ரீகுமார் (திமுக) – 387758, டாக்டர் கிருஷ்ணசாமி (அதிமுக) – 207829, ஜான்பாண்டியன் (பா.ஜ.க) – 185466, இசை.மதிவாணன் (நா.த.க) – 116458 வாக்குகள் பெற்றுள்ளனர். இதில் திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீ குமார் 179929 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.
2024 மக்களவைத் தேர்தலில் கடலூர் தொகுதியில் போட்டியிட்ட திமுக- காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் 4,50,401 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து களம் கண்ட அதிமுக – தேமுதிக வேட்பாளர் சிவக்கொழுந்து 2,67,707 வாக்குகளும், பாஜக – பாமக வேட்பாளர் தங்கர் பச்சான் 2,02,372 வாக்குகளும், நாதக வேட்பாளர் மணிவாசகன் 56,863 வாக்குகளும் பெற்று தோல்வியைத் தழுவினர்.
Sorry, no posts matched your criteria.