Tamilnadu

News April 25, 2024

சென்னை வாசிகளுக்கு வணக்கம்!

image

சென்னை மாநகராட்சி சார்பில், வெப்ப அலைகள் குறித்த எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், “வணக்கம் சென்னை வாசிகளே!, உங்களுக்கு தாகமாக இருக்கிறதா? அப்படியென்றால், உங்கள் உடல் வெப்பநிலையை சமப்படுத்த வேண்டும் என்று பொருள்; உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க தண்ணீர் குடித்துக் கொண்டே இருங்கள்: வெப்ப அலைகளில் இருந்து பாதுகாத்துக்கொள்ளுங்கள்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 25, 2024

பொள்ளாச்சி: வறட்சி காரணமாக யானைகள் இடமாற்றம்

image

பொள்ளாச்சி டாப்ஸ்லிப் கோழிக்கமுத்தி வளர்ப்பு யானைகள் முகாம் வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவி வருவதாலும், கோழிக்கமுத்தி முகாம் அருகே பாகங்களுக்கு வீடு கட்டும் பணி நடைபெறுவதால் முகாமில் உள்ள 20 யானைகளை வரகளையாறு, மானாம்பள்ளி மற்றும் சின்னாறு வனப்பகுதிகளுக்கு யானைகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

News April 25, 2024

கீழவளவு : டிபன் பாக்ஸ் வெடிகுண்டு வீசிய 4 பேர் கைது

image

கீழவளவை சேர்ந்த நவீன்குமார்(26). கடந்த வாரம் பஸ் ஸ்டாண்ட் அருகே தனது காரினுள் இருந்த போது, ஒரு கும்பல் அவர் கார் மீது டிபன் பாக்ஸ் வெடிகுண்டை வீசியது. இதில் அவர் காயம் அடைந்தார். போலீசார் தீவிரமாக விசாரணை நடத்திய நிலையில், இன்று கீழவளவு அசோக்(29), அடைஞ்சன் கண்மாய்பட்டி கார்த்திக்(27), மேலூர் பாக்யராஜ் (37), சிவகங்கை மாவட்டம் கட்டானிபட்டி ராஜபிரபு(24) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

News April 25, 2024

திருச்சி: மே-6 அன்று விடுமுறை 

image

திருச்சி மாவட்ட ஆட்சியர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்: ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோவிலில் சித்திரை தேர் திருவிழாவினை முன்னிட்டு, வருகின்ற 06.05.2024 திங்கட்கிழமை அன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த விடுமுறைக்கு பதிலாக வருகின்ற 29.6.2024 சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது. மேலும் பள்ளி,கல்லூரி தேர்வுகள் நடைபெறுவதில் இந்த விடுமுறை பொருந்தாது என தெரிவித்துள்ளார்.

News April 25, 2024

மதுரை மக்களுக்கு குட் நியூஸ்

image

மதுரை புகழ்பெற்ற சித்திரை திருவிழாவை முன்னிட்டு பக்தர்களின் தாகம் தீர்க்கும் வகையில் பக்தர்கள் கூடும் இடங்களில் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் 5 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் தொட்டி 98 இடங்களில் அமைக்கப்பட்டது. திருவிழா முடிந்த போதிலும் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் தொடர்ந்து 98 இடங்களிலும் குடிநீர் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையாளர் தினேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

News April 25, 2024

ரயில் சேவை நீடிப்பு

image

திருவண்ணாமலைக்கு 03-05-2024 முதல் தினசரி ரயில் சென்னை கடற்கரையில் மாலை 06.00 மணிக்கு புறப்பட்டு போளூர் வழியாக இரவு 12.05 மணிக்கு தி.மலை வந்தடையும். தி.மலையில் அதிகாலை 04.00 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரைக்கு காலை 09.50 மணிக்கு சென்றடையும். இவ்வாறு திருவண்ணாமலைக்கு தினசரி ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.

News April 25, 2024

சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவில் தனிச்சிறப்பு!!

image

பெரம்பலூர், சிறுவாச்சூர் என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது மதுரகாளியம்மன் கோவில். 1000 வருடம் பழமையான இக்கோவிலில் அழகிய வேலைப்பாட்டுடன் கூடிய தங்க தேர் உள்ளது. இக்கோவிலின் சிறப்பாக, நேர்த்திக்கடன் செலுத்துபவர்கள், அரிசியை எடுத்து வந்து அதை கோவிலில் ஊரவைத்து, உரலில் இட்டு இடித்து மாவிளக்கேற்றுவர். இதற்கு உதவ ஆட்களும் உள்ளனர். பல புராணகால கதைகளையும் இக்கோவில் கொண்டுள்ளது.

News April 25, 2024

விழுப்புரம்: சப்-இன்ஸ்பெக்டரை வெட்ட முயன்ற ரவுடி

image

விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் காவல் நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ். இவர் நேற்று(ஏப்.24) ரோந்து சென்றபோது கோட்டைமேடு பகுதியில் இருந்து குயிலாப்பாளையம் செல்லும் பாதையில் நின்று கொண்டிருந்த பெரிய முதலியார்சாவடியை சேர்ந்த ரவுடி மணவாளனை விசாரித்தார். அப்போது மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து எஸ்‌.ஐ. ரமேஷை, மணவாளன் வெட்ட முயன்றார். அவரை போலீசார் கைது செய்தனர்.

News April 25, 2024

பெரம்பலூர்: பன்றிகளுக்கு நோய் தடுப்பூசி முகாம்

image

பெரம்பலூர் கால்நடை பராமரிப்பு துறையின் கீழ் 2024-25ம் ஆண்டிற்கான மத்திய அரசு திட்டத்தின் கீழ், கால்நடை நலன் நோய் கட்டுப்பாட்டு திட்டம் (LHDPC) மூலம் பன்றிக்காய்ச்சல் நோய் தடுப்பூசி போடும் பணி நேற்று(24-4-2024) முதல் மே 23 வரை அரசு கால்நடை மருத்துவமனையில் நடைபெறுகிறது. இதற்காக 700 டோஸ் மருந்துகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. முகாமினை பன்றி வளர்ப்போர் பயன்படுத்திகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News April 25, 2024

தென்காசி:உலக மலேரியா தின விழிப்புணர்வு நிகழ்ச்சி

image

தென்காசி நகராட்சியில் இன்று 25.04.2023 சுகாதார அலுவலர் தலைமையில் மாட்ட கல்வி அலுவலர், மாவட்ட பூச்சியியல் வல்லுனர் மற்றும் துணை வல்லுனர், ஆகியோரின் பங்கேற்பில் மற்றும் மலேரியா ஒழிப்பு தடுப்பு குழு இணைந்து மலேரியா பற்றிய விழிப்புணர்வு பொதுமக்களுக்கு அளிக்கப்பட்டு மேலும் மலேரியா ஒழிப்புதின உறுதிமொழி எடுக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்நிகழ்வில் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!