India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வேலூர் மக்களவைத் தேர்தலில் 2024 வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்ற வருகின்றது. இந்நிலையில் 2014, 2019, 2024 ஆகிய மக்களவை தேர்தலில் போட்டியிட்ட புதிய நீதி கட்சி தலைவர் ஏசி சண்முகம் தற்போது கடும் பின்னடைவை சந்தித்திருக்கிறார். தற்பொழுது வரை திமுக சார்பில் போட்டியிட்ட கதிர் ஆனந்த் முன்னிலையில் உள்ளார்.
சிதம்பரம் மக்களவைத் தொகுதியில், 8 ஆவது சுற்று வாக்கு எண்ணிக்கை வெளியாகியுள்ளது. இதில், விசிக வேட்பாளர் திருமாவளவன் 1,91,725 வாக்குகளுடன் 30,000 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். அதிமுக வேட்பாளர் சந்திரகாசன் 1,61,472 வாக்குகள் பெற்று 2 ஆம் இடத்தில் உள்ளார். பாஜக வேட்பாளர் கார்த்தியாயினி 62,509 வாக்குகள் பெற்று 3 ஆம் இடத்தில் உள்ளார். அடுத்த இடத்தில் நாம் தமிழர் கட்சி உள்ளது.
கரூர் மக்களவைத் தொகுதியில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதிகளில் 7 -வது சுற்று முடிவு . திமுக கூட்டணி (காங்கிரஸ்) :1,63,746, அதிமுக / கூட்டணி (அதிமுக) : 1,20,767, வாக்குகள் பெற்றுள்ளனர். அதிமுக வேட்பாளர் தங்கவேளை விட காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜோதிமணி 42,979 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
பெரம்பலூர் மக்களவை தொகுதியில் 11 சுற்று முடிவடைந்த நிலையில் திமுக வேட்பாளர் அருண் நேரு 3,26,167, வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். அதிமுக வேட்பாளர் சந்திரமோகன் 1,15,586 வாக்கு பெற்றுள்ளார். இதில் அதிமுக வேட்பாளரை விட திமுக வேட்பாளர் அருண் நேரு 2,10, 581 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
நாகப்பட்டினம் பாராளுமன்ற தொகுதியின் 10 வது சுற்றின் நிலவரப்படி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் முன்னிலையில் உள்ளார். அதன்படி சிபிஐ 249171 வாக்குகளும், அதிமுக 138866 வாக்குகளும், பாஜக 51730 வாக்குகளும், நாதக 71169 வாக்குகளும் பெற்றுள்ளன.
விருதுநகர் பாராளுமன்ற தொகுதி 9 ஆவது சுற்றின் முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர்- 174091 வாக்குகளும், தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன்- 172064 வாக்குகளும், பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார்- 67051 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கௌஷிக் – 33925 வாக்குகளும் பெற்றுள்ளனர். இந்நிலையில் 9 ஆவது சுற்றின் முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் 2027 வாக்குகள் பெற்று முன்னிலை.
திருச்சி எம்பி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதில் 10வது சுற்றில் மதிமுக வேட்பாளர் துரை வைகோ 1,52,749 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். நட்சத்திர வேட்பாளராக களமிறங்கிய இவர் முதன்முறையாக தேர்தலில் போட்டியிடுகிறார். ஒருவேளை இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்க நேர்ந்தால் மத்திய இணை அமைச்சர் பதவி இவருக்கு கிடைக்கலாம் என அரசியல் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.
விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் பதிவு செய்யப்பட்ட வாக்குகள் தற்போது விழுப்புரம் அரசு கலை கல்லூரி வளாகத்தில் எண்ணப்பட்டு வருகிறது. இதில் 10 ஆவது சுற்று முடிவில் வி.சி.க – 2,33,419, அ.தி.மு.க – 1,84,333, பா.ம.க – 81,067, நாம் தமிழர்: 29,835 வாக்குகள் பெற்றுள்ளனர். இதில் வி.சி.க வேட்பாளர் ரவிக்குமார் 49,086 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.
சிவகங்கை மக்களவை தொகுதியில் 6 சுற்றுகள் முடிவில் கார்த்தி சிதம்பரம் 1,22,478 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்துள்ளார். இந்நிலையில், 280 தபால் வாக்குகள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், காங்., 1139 வாக்குகளும், அதிமுகவிற்கு 243 வாக்குகளும், பாஜகவிற்கு 707 வாக்குகளும், நாதக 524 வாக்குகளும், பதிவாகியுள்ளன. நோட்டாவிற்கு 57 வாக்குகள் பதிவானது குறிப்பிடத்தக்கது.
நெல்லை மக்களவைத் தொகுதி பதிவான வாக்குகள் இன்று அரசு பொறியல் கல்லூரியில் எண்ணப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தபால் வாக்குகள் மொத்தம் 8580 பதிவாகி உள்ளன.
3 சுற்றுகளாக இந்த வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது.
முதல் சுற்றில் 3 ஆயிரம் வாக்குகள் எண்ணப்பட்டுள்ளன.
இதில் காங்கிரஸ் 913, பாஜக 600, அதிமுக 328, நாம் தமிழர் கட்சி 62 வாக்குகள் பெற்றுள்ளதாக தகவல் வெளியானது.
Sorry, no posts matched your criteria.